மதுரை மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபையின் முக்கிய ஃபத்வா ஒரு ஆய்வு! மேற்கண்ட ஃபத்வாவை வெளியிட்டவர்களில் மதுரை ஒத்தக்கடை ஜாமிஆ நாஃபிஉல் உலூம் அரபிக் கல்லூரியின் நிறுவனர்*, *தமிழ் மாநில ஜமாஅத்துல் உலமா சபையின் முன்னாள் செயலாளர்,* தேவ்பந்திய வஹ்ஹாபி *மௌலவி முகம்மது காசீம் நிஜாமி பாக்கவியும் ஒருவர்... கேள்வி: மதுரை தெற்கு மாசி வீதி ஜமேத் அலி பள்ளிவாசலில் தொழ வைக்கும் லுக்மான் இமாம் அவர்கள் சுன்னத்வல் ஜமாத் கொள்கைக்கு புறம்பாக தம்முடைய பயானில் சில கருத்துக்களை சொல்லி வருகிறார். அதில் 1.ஷாபான் பிறை 15 ல் யாரசூலல்லாஹ் அல்லாஹ்வின் பொருட்டால் கிருபை செய்வாயாக! என்று துஆ செய்தார் ரசூலுல்லாஹ் (ஸல்) அவார்களிடம் துஆ கேட்பது கூடுமா? இதற்கு ஆதாரபூர்வமான பதிலைத் தர வேண்டும். பதில்: ஃபத்வா 1. ஷாபான் 15 அன்று சாரி, சாதாரண சமயங்களிலும் சாரி, இறைவா! ரசூலின் பொருட்டால் எங்கள் மீது கிருபை செய் என்று துஆ செய்தால் கூடும். 2. ரசூலுல்லாஹ்வே! இறைவனின் பொருட்டால் நீங்கள் எங்கள் மீது கிருபை செய்யுங்