புனிதமிகு மவ்லித்களை ஹராம் என்பதாக பகிரங்கமாக பத்வா கொடுத்த அன்வாருல் உலூம் மதரஸாவை திருச்சி மாவட்ட ஜமாஅத்துல் உலமா எவ்வாறு ஆதரிக்கிறது
நம் உயிரினும் மேலான நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைப் பற்றி கண்ணியக் குறைவாக ஃபத்வா கொடுத்த திருச்சி அன்வாருல் உலூம் மதுரசாவைப் பற்றி உங்களுக்கு தெரியுமா? ஹுஜ்ஜத்துல் இஸ்லாம் இமாம் கஸ்ஸாலி(ரஹ்),மாதிஹுர் ரஸூல் ஸதக்கத்துல்லா அப்பா (ரஹ்), அல்லாமா மாப்பிள்ளை லெப்பை ஆலிம் (ரஹ்) போன்ற மாமேதைகளால் இயற்றப்பட்டு அறிவார்ந்த உலமா பெருமக்களால், மௌலவிகளால் உலகளாவிய அளவில் பள்ளிவாசல்களிலும், மதுரஸாக்களிலும்,வீடுகளிலும் நெடுங்காலமாக ஓதப்பட்டு வரும் புனிதமிகு மவ்லித்களை ஹராம் என்பதாக பகிரங்கமாக பத்வா கொடுத்த அன்வாருல் உலூம் மதுரஸாவை திருச்சி மாவட்ட ஜமாஅத்துல் உலமா எவ்வாறு ஆதரிக்கிறது ; அங்கீகரிக்கிறது என்பது எங்களுக்கு அதிர்ச்சியாக இருக்கிறது. அன்வாருல் உலூம் பத்வாவை திருச்சி மாவட்ட ஜமாஅத்துல் உலமாசபை ஏற்றுக்கொள்கிறதா? மவ்லிது ஓதுவது ஹராம் என்று சொல்கிறதா? திருச்சி மாவட்ட ஜமாஅத்துல் உலமா ஆலிம்கள் எங்கும் மவ்லிது ஓதுவதே இல்லையா? அவ்வாறு ஓதுவதை ஹராம் என்று நீங்களும் சொல்கிறீர்களா? உங்களது உண்மையான நிலைப்பாடு என்ன? மவ்லித் ஓதுவதையே ஹராம் என்று ஃபத்வா கொடுக்கும் அன்வாருல் உலூம் மதுரஸா மவ்லித்களை இயற