'வஹ்ததுல் வுஜூத்' பற்றி சமிக்ஞை செய்து காட்டிய நபிகளார் - அல் குர்ஆன் Allah - beginning with the name of the Most Gracious, the Most Merciful وَمَا رَمَيْتَ اِذْ رَمَيْتَ وَ لٰـكِنَّ اللّٰهَ رَمٰى ۚ (நபியே)...(பகைவர்கள் மீது மண்ணை) நீர் எறிந்தபோது அதனை நீர் எறியவில்லை, அல்லாஹ்தான் எறிந்தான்; ஸூரத்துல் அன்ஃபால் [8:17] இந்த இறைவசனமும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்களுடைய முழுமையான புகழ் மாலையாகும். முதலில் இங்கு எந்த சம்பவத்தை பற்றி கூறப்பட்டுள்ளது என்று கவனிக்க வேண்டும். இரண்டாவதாக இங்கே நபிகளாரின் புகழ்மாலை எங்கு உள்ளது என்பதையும் அறியவேண்டும். இந்த இறைவசனத்தில் "பத்ரு போர் - ல் நடைபெற்ற சம்பவத்தை பற்றி கூறுகின்றது. ஹிஜ்ரி 2, ரமலான் மாதத்தில் 17-ம் பிறையில் பத்ரு போர் நடைப்பெற்றது. மக்கத்து காஃபிர்கள் போர் தடவாளங்கள் கொண்டு தன் சேனையுடன் மதினா நகர் மீது படையெடுத்து கைப்பற்ற வந்தனர். மேலும் அஹ்லே மதினாவில் அல்லாஹ்வின் உதவி மற்றும் ரசூல்லுல்லாஹ்வின் பரகத் போன்றவை தவிர வேறேதும் கிடையாது. மக்கத்து காபிர்கள் ஏறத்தாழ 1000 நபர்கள் இருந்தார்கள் மற்றும் முஸ்லிம்கள் 313 பேர் இ