ஹைதராபாத்தைச் சேர்ந்த நூரிஷாஹ்வைப் பற்றியும், அவருடைய தரீகாவைப் பற்றியும் நாகப்பட்டிணம் நஸீஹத்துல் இஸ்லாமிய சங்கத்தினர் கேட்ட கேள்விகளுக்கு கேரளாவைச் சேர்ந்த " ஜன்னத்துல் உலூம் " அரபிக் கல்லூரியின் முதல்வர் E.K. ஹஸன் முஸ்லியார் (பாக்கவி) அவர்கள் அளித்த இந்த விளக்கவுரையை ஆடியோவாக கேட்க 👇👇👇 https://anchor.fm/online-islam/episodes/ep-e1renkb 👆👆👆 விளக்கவுரை. நூரிய்யா தரீக்காவைச் சேர்ந்தோர் செய்து வருகின்ற சில செயல்களைப் பற்றி பதில்கள் கேட்டு அனுப்பிய தங்களுடைய கடிதம் கிடைத்தது. பதில்கள் பின்வருமாறு : நூரிஷாஹ் என்ற பெயர் கொண்ட மனிதர் ஆரம்பத்தில் தான் 'காதிரியா' 'சிஷ்திய்யா' தரீகாவிற்கு ஒரு ஷைகு என்பதாகக் கூறிக் கொண்டு கேரளாவில் நுழைந்தார். பொதுமக்களும் சில உலமாக்களும் அவரை அங்கீகரித்தனர். மக்கள் மனதில் நல்ல மதிப்பை பெற்ற பின்னர் 'தரீக்கத்தே நூரீஷாஹ்' என்ற ஒரு தரீக்காவிற்கு தான் தனியொரு ஷைகு என்பதாக தாவாச் செய்தார். தம்மை பின்பற்றிய சீடர்களுக்குப் பற்பல தவறான கருத்துக்களை போதித்தார். அவை அல்லாஹ்வுடைய வாக்கு என்றும், தான் அல்லாஹ்வுடைய தானமென