மதுரை மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபையின் முக்கிய ஃபத்வாவிற்கு தமிழ்நாடு சுன்னத் வல் ஜமாஅத் உலமா சபையின் தக்க பதில் ( ஃபத்வா )
மதுரை மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபையின் முக்கிய ஃபத்வாவிற்கு தமிழ்நாடு சுன்னத் வல் ஜமாஅத் உலமா சபையின் தக்க பதில் ( ஃபத்வா ) அனுப்புநர்: நாள் :22-4-03 எம். ஸனாவுல்லாஹ், 11, பாரதியார் நவீன சிறப்பங்காடி, பெரியார் பஸ் ஸ்டாண்ட், மதுரை. பொருள்: மதுரை மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபையினரால் தரப்பட்ட பதவாவுக்கு பதில் பத்வா பெறுதல் சம்பந்தமாக. கண்ணியத்திற்கும் மரியாதைக்குமுரிய தமிழ்நாடு சுன்னத் வல் ஜமாஅத் உலமாசபையாருக்கு அஸ்ஸலாமு அலைக்கும். நான் இந்த வராம் ஜும்ஆ தொழுகைக்காக பள்ளிவாசலுக்கு சென்றபோது அங்கேவைத்து ஒரு நோட்டீஸை தந்தார்கள். அந்த நோட்டீஸ் மதுரை மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபையினரால் தரப்பட்டிருந்த பத்வாவை ஆதாரமாகக் கொண்டு வெளியிடப்பட்டிருந்தது. அந்த பத்வாவில் "யாரஸூலல்லாஹ்! இறைவனின் பொருட்டால் நீங்கள் எங்கள் மீது கிருபை செய்யுங்கள் என்று துஆ செய்வது கூடுமா?" என்னும் கேள்விக்கு "அவ்வாறு துஆ செய்வது கூடாது ஹராம்'' என்றும், ஏனெனில் நபியவர்களுக்கு யார்மீதும் கிருபை செய்ய உரிமையோ தகுதியோ இல்லையென்றும் பத்வா தந்துள்ளனர். இது சரியா?