1997ல் நடைபெற மேல் விஷாரத்து இஜ்திமாவில் கலந்து கொள்ளாது புறக்கணிக்க வேண்டும் என்று தமிழ்நாடு சுன்னத் வல் ஜமாஅத் உலமா சபையால் வெயிடப்பட்ட பிரசுரம்... தப்லீக் போர்வையில் வஹ்ஹாபிகள்! தமிழக முஸ்லிம்களே உஷார்!! தமிழ்நாடு சுன்னத் வல் ஜமாஅத் உலமா சபையின் எச்சரிக்கை!! கடந்த அறுபது வருடங்களாக வட இந்தியப் பகுதியான தேவ்பந்திலிருந்து தமிழகத்திற்குள் வந்து நுழைந்த தப்லீக் ஜமாஅத் என்னும் ஓர் அமைப்பு முஸ்லிம்களிடையே அயராது சேவை செய்ததால் இன்று தமிழகத்திலுள்ள முஸ்லிம்களில் பெரும்பாலானோர் மார்க்கத்தை உணர்ந்து தவறான பாதையை விட்டும் விலகி நேர்வழிக்குத் திரும்பி இன்று தொழுகையாளிகளாகவும், உண்மை முஸ்லிம்களாகவும் மாறியுள்ளனர் என்பது தப்லீக் தலைவர்களாலும் தப்லிக் செய்பவர்களாலும் சொல்லப்படும் காரணங்களாகும். அதேநேரம் சுன்னத் வல் ஜமாஅத்தைச் சேர்ந்த வேலூர் பாக்கியாத் அரபிக் கல்லூரியின் முன்னாள் முதல்வர் அல்லாமா ஷைகு ஆதம் ஹஜ்ரத் கிப்லா அவர்களும், அதே கல்லூரியின் மற்றோர் முதல்வரான மௌலானா மௌலவி அபூபக்கர் ஹஜ்ரத் கிப்லா அவர்களும், சென்னை முன்னாள் தலைமை காஜி அல்லாமா ஹபிபுல்லாஹ் ஹஜ்ரத் அவர்களும், காயல்