றிஸ்வி முப்தியின் வெட்கங் கெட்ட பேச்சு! ---------------- ஷர்க்கி, பரேலவி ------------------------- இமாம்கள் பல்லாயிரம், ஏன் இலட்சத்தையும் தாண்டிய மஸாயில்களுக்கு விடை தேடி மக்களுக்குச் சொன்னார்கள். இதன் விளைவாக முஸ்லிம் சமுகம் நான்கு பிரிவுகளானார்கள். இந்த பிரிவுகள் அமல்களில் மட்டுமே இருந்தன. அகீதா வில் ஒன்றுபட்டிருந்தனர். ஒருபிரிவாரின் பள்ளிவாசலில் மறு பிரிவார்கள் தொழுதார்கள். இப்போதும் தொழுகின்றார்கள். புனித கஃபத்துள்ளாஹ்வில் 1965 வரை நான்கு மத்ஹபுகளுக்குமுரிய ஜமாஅத் தொழுகைகள் நடந்தன. இந்தியா உள்ளிட்ட நாடுகளில் குறிப்பாக அல் அஸ்ஹர் பல்கலைக்கழகத்தில் நான்கு மத்ஹபுகளுக்குமுரிய மாணவர்கள் ஒற்றுமையாக ஓதுகின்றார்கள். ஒரே விடுதியில் தங்கியிருக்கின்றனர். மஸாயில்களைக் கண்டுபிடித்து தீர்வுகள் சொன்ன இமாம்கள் ஒருவரையொருவர் மதித்து நடந்தார்கள். . இமாமுல் அஃழம் அபூ ஹனீபா றஹ்மதுல்லாஹி அலைஹி ஆலிமுல் மதீனா இமாம் மாலிக் றஹ்மதுல்லாஹி அலைஹி அவர்களைச் சந்தித்து இமாம் மாலிக் றஹிமஹுல்லாஹ்வை அதிகமாக சங்கை செய்தார்கள். சட்டமேதை இமாம் ஷாபிஈ றஹிமஹுல்லாஹ் இமாம் மாலிக் றஹிமஹுல்லாஹ்விடமும் இமாமுல் அஃழம் அவர்கள