மேற்கண்ட ஃபத்வாவை வெளியிட்டவர்களில்
மதுரை ஒத்தக்கடை ஜாமிஆ நாஃபிஉல் உலூம் அரபிக் கல்லூரியின் நிறுவனர்*,
*தமிழ் மாநில ஜமாஅத்துல் உலமா சபையின் முன்னாள் செயலாளர்,*
தேவ்பந்திய வஹ்ஹாபி
*மௌலவி முகம்மது காசீம் நிஜாமி பாக்கவியும் ஒருவர்...
கேள்வி: மதுரை தெற்கு மாசி வீதி ஜமேத் அலி பள்ளிவாசலில் தொழ வைக்கும் லுக்மான் இமாம் அவர்கள் சுன்னத்வல் ஜமாத் கொள்கைக்கு புறம்பாக தம்முடைய பயானில் சில கருத்துக்களை சொல்லி வருகிறார்.
அதில் 1.ஷாபான் பிறை 15 ல் யாரசூலல்லாஹ் அல்லாஹ்வின் பொருட்டால் கிருபை செய்வாயாக! என்று துஆ செய்தார் ரசூலுல்லாஹ் (ஸல்) அவார்களிடம் துஆ கேட்பது கூடுமா? இதற்கு ஆதாரபூர்வமான பதிலைத் தர வேண்டும்.
பதில்: ஃபத்வா
1. ஷாபான் 15 அன்று சாரி, சாதாரண சமயங்களிலும் சாரி, இறைவா! ரசூலின் பொருட்டால் எங்கள் மீது கிருபை செய் என்று துஆ செய்தால் கூடும்.
2. ரசூலுல்லாஹ்வே! இறைவனின் பொருட்டால் நீங்கள் எங்கள் மீது கிருபை செய்யுங்கள் என்று துஆ செய்தால் கூடாது. ஹராம். ஆதாரம் ???
3. ஏனென்றால், ரசூலுல்லாஹ்வுக்கு யார் மீதும் கிருபை செய்ய உரிமையோயோ, தகுதியோ இல்லை.
ஆதாரம் ??? இல்லை அதனால் ??? குழப்பம்.
ஆய்வு:1
மேற்கண்ட விவாதத்திற்கு ஃபத்வா கொடுத்திருப்பவர் குர்ஆனின் வசனத்தைக் கொண்டோ, ரசூலின் ஹதீஸைக் கொண்டோ, நான்கு மத்ஹபுகளின் இமாம்கள் சொன்ன கூற்றைக் கொண்டோ, ஆதாரம் ஏதும் குறிப்பிடவில்லை.
கேள்விகளைக் கேட்டவர்கள் (யார் என்று தெரியவில்லை. விலாசம் அல்லாதவர்கள்) ஆதாரப்பூர்வமான பதிலைத் தருமாறு கேட்டிருக்கிறார்கள்.
ஆதலால் ஆதாரம் அற்ற விவாதம் வீணானதாகும். மேலும் அஹ்லே சுன்னத் வல்ஜமா அத்திற்கும் முறண்பட்ட கருத்தாகும்.
அஹ்லே சுன்னத் வல்ஜமாஅத்தின் கொள்கையை கவனியுங்கள். திருமறை கூறுகின்றது.
திடனாக உங்கள் இனத்திலிருந்தே ஒரு தூதர்; உங்களிடம் வந்து விட்டார்;. (உங்களுக்கு கஷ்டம் நேர்ந்து) நீங்கள் துன்பப்படுவது அவருக்கு மிக்க வருத்தத்தை உண்டாக்குகிறது. உங்களுக்கு நன்மைகளையே பெரிதும் விரும்புபவராகவும், விசுவாசிகள் மீது மிகுந்த அன்பும், கிருபையும் உடையவராக இருக்கின்றனர்;.
அல்குர்ஆன் ஹுரா - 9 வசனம் 128, 129.
மேற்கண்ட வசனத்தில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லாம் அவர்களின் தன்மைகளைப் பற்றி அல்லாஹு கூறுகின்றான். அந்த தன்மைகள் என்னவென்றால்,
1. விசுவாசிகளுடைய துன்பத்தினால் வருத்தம் அடைவது,
2. விசுவாசிகளுக்காக நன்மைகளை விரும்புவது,
3. விசுவாசிகள் மீது மிகுந்த அன்பும்,
4. கிருபையும் உடையவர்கள்.
அன்பில்லாதவர்களிடம் எவ்வாறு அன்பைப் பெற முடியும்?
கிருபையில்லாதவரிடம் எவ்வாறு கிருபை பெற முடியும்? அன்பும், கிருபையும் எவாpடத்தில் பெற முடியும்? தொpயுமா? அன்பும், கிருபையும் உடையவரிடம் தான் அன்பும் கிருபையும் பெற முடியும்.
ஆதலால், மிகுந்த அன்பும், கிருபையும் உடையவராகத் திகழ்கின்ற ஏந்தல் நபிகளாரிடம் தாங்கள் கிருபை செய்யுங்கள் என்று கேட்பது தவறில்லை.
மேலும் அன்பும், கிருபையும் செய்ய தகுதியோ, உரிமையோ இல்லாதவர்களை, மிகுந்த அன்பும், கிருபையும் உடையவர்கள் என அல்லாஹ் சொல்வது எவ்வாறு சாத்தியம் ஆகும்?
ஆதலால் மேற்கண்ட ஒரு வசனமே இரு வாதங்களுக்கும் போதுமானதாகும்.
அதாவது, மிகுந்த அன்பும், கிருபையும் உடையவா;களான அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லாம் அவர்களிடம் கிருபை செய்யுங்கள் என்று கேட்பதும், அவர்களுக்கு கிருபை செய்யக் கூடிய தகுதியும், உரிமையும் உண்டு என்பதை ஏற்றுக் கொள்வதும் கூடும். திருமறை வசனத்திற்கு உட்பட்ட கொள்கையாகும். இது தான் அஹ்லே சுன்னத்வஜமாஅத்தின் கொள்கையாகும். இந்த கொள்கைக்கு முரணாக ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லாம் அவர்களுக்கும் யார்; மீதும் கிருபை செய்ய உரிமையோ, தகுதியோ இல்லை என்று சொல்வதற்கு எவருக்கும் தகுதி கிடையாது. அதற்கு ஆதாரமும் கிடையாது.
ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு கிருபை செய்ய உரிமையோ, தகுதியோ இல்லை என்று ஒரு ஆதாரத்தை திருமறை வசனத்தைக் கொண்டோ, நபி மொழியைக் கொண்டோ ஒருவா; நிரூபித்து விட்டால், அவருக்கு ஒரு (ஐநுறு) ரூபாய் இனாமாகத் தருவதற்குத் தயாராக இருக்கின்றோம்.
இரண்டாவது ஆதாரம்:
திருமறையில் அல்லாஹ் கூறுகின்றான். அகிலத்தாருக்கெல்லாம் ரஹ்மத்தாகவே அன்றி உம்மை நாம் அனுப்பவில்லை.
அல்குர்ஆன் பாகம் - 17. அத்தியாயம் - 21, வசனம் - 107.
மேற்கண்ட வசனத்தில் நபிகள் நாதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லாம் அவர்கள் அகிலத்தார்களுக்கெல்லாம் ரஹ்மத்தாகத் தான் அனுப்பப்பட்டிருக்கிறார்கள் எனக் கூறப்பட்டுள்ளது.
ஆதலால், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடத்தில் ரஹ்மத்து செய்யுங்கள் எனக் கூறுவதும் குர்ஆனுக்கு உட்பட்ட அஹ்லே சுன்னத் வஜமாஅத்தின் கொள்கையாகும். இதனை எவ்வித ஆதாரமும் இன்றி மறுப்பவர்கள் அஹ்லே சுன்னத்வஜமாஅத்தை சார்ந்தர்கள் அல்ல.
மேற்கண்ட இரண்டு ஆதாரங்களைப் போன்று பல ஆதாரங்களை ஒன்று திரட்டி ஒரு நூலே வெளியிடலாம் விசுவாசிகளுக்கு இவ்விரு ஆதாரங்களே போதுமானவைகள்.
மேலும் பல நூற்றாண்டு காலமாக நம் சமுதாயத்தில் மவ்லிது ஷெரிப் வழக்கமாக ஓதப்படுகின்றது என்பது அனைவருக்கும் தெந்ததே!
குழப்பவாதிகள் முழுமையாகக் கைப்பற்றிய பள்ளி வாயில்களைத் தவிர்த்து, மற்ற அனைத்து பள்ளி வாயில்களிலும், மீலாதுன் நபி 12 நாட்கள் ரசூலுல்லாஹ் மவ்லுது என்று சொல்லப்படக்கூடிய சுப்ஹான மல்லிது ஓதப்படுகின்றது. அதில் பல உலமாக்களும் கலந்துக் கொள்வதுடன் முன்நின்று நடத்தவும் செய்கிறார்கள்.
அந்த மவ்லிதில் ஓதப்படக்கூடிய பைத்துகளில் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களை நோக்கி கூறப்பட்டுள்ள ஒரு சில பைத்துக்களை மட்டும் சுருக்கமாக உங்கள் கவனத்திற்கு……………
1) யா முஸ்தபா யா முர்தழா யா சனதி
யா ஸய்யிதி யா ஷபீயி குத் பியதி
பொருள்: தெளிவாக்கப்பட்டவரே! திருப்தியாக்கப்பட்டவரே! இறைவனுடன் எனக்குpய இணைப்பே! என் எஜமானே! எனக்காக மன்றாடுபவரே! என் கரத்தைப் பற்றிடுவீh;.
2) பஸத்து கப்ப ஃபாகதீ வன் நதமி
அh;ஜு ஜஸீல ஃபழ்லிகும் வல்கரமி
பொருள்: (அல்லாஹ்வின் ஹபீபே!) என் வறுமை, என் கை சேதம் ஆகியவைகi நான் விhpத்துவிட்டேன். ஆகவே யாh; தங்களின் மிகுதியான அருட்கொடை மற்றும் கொடைத் தன்மையை எதிர்ப்பார்க்கிறேன்.
3) முஸ்தஷ்ஃபிஅன் நஸீவ ஹாதல் ஹரமி
ஃபலாஹிலுhனி பிதவாமில் மததி
பொருள்: மதீனாவெனும் இந்த மகத்தான பூமியில் இறங்கிய மாநபியே! தங்களின் பாரிந்துரையைத் தேடியவனாக தங்கள் முன் நிற்கின்றேன். எனவே நிரந்தரமான நல்லுதவி செய்வதின் மூலமாக என்பால் கடைக்கண் பார்வையைச் செலுத்துவீராக!
4) வஅத்ஃபிஉ பில் பஸ்தி வஹ்ஜல் ஹுரகி
வஅப்hpது பில் லுத்ஃபி ஹா;ரல் கபிதி
பொருள்: நபியே! தங்களின் பரந்த மனப்பான்மையினால், காpக்கும் நரக நெருப்பின் கொழுந்துவிட்டொpயும் ஜுவாலையை அனைத்துவிடுங்கள். தங்களின் இரக்கத் தன்மையால், என் ஈரலின் வெப்பத்தை குளிரச் செய்யுங்கள்.
5) ஃபஹில்முகும் வஸ்ஸித்ரு அம்மல் ஆலமா
நஃமாஉகும் மின்ஷா நஈமுல் அபதி
பொருள்: எனவே நபியே! தங்களின் பொறுமையும் பிறா; குறைகளை மன்னித்து மறைக்கும் தன்மையும், தங்களின் அருட்கொடைகளும் அனைத்து வகையும் பொதுவாகச் சூழ்ந்துக் கொண்டது. நாம் எனும் நிலையான கவனம் தங்களின் அருட்கொடைகளில் ஒன்றாகும்.
6) அக்ஸம்து ஃபீ நஸ்hp பிகும் அலய்குமு
வஸீவதி இஹ்ஸானுகும் இலய்குமு
பொருள்: நபியே தங்களைக் கொண்டு யான் உதவி பெறுவதில் தங்களின் மீது சத்தியம் செய்கிறேன். தங்கள் பால் யான் வஸீலா தேடுவது. தாங்கள் எமக்குச் செய்யும் உபகாரமாகும்.
7) யா ஸய்யிதீ யாரசூலல்லாஹி குஸ் பியதீ
பொருள்: என் தலைவா; பெருந்தகையே! இறையோனின் தூதுவரே! அன்பாய் என் கைப்பிடித்தே ஆதிரித்துக் காத்தருள்வீர்;.
மேலும் இதைப் போல் பல பைத்துக்களை நபிகள் கோமான் அவர்களின் மீது புகழ்பாடி பல நூற்றாண்டு காலமாக அண்ணலாரிடம் கிருபையைக் கேட்டுக் கொண்டிருக்கும் பல கோடி முஸ்லீம்கள், அதிலும் சங்கைமிகும் உலமாக்களும் அஹ்லே சுன்னத் வஜாஅத்தைச் சார்ந்தவார்களா? அல்லது இன்றைக்கு வெளிவந்து எந்தவித ஆதாரமுமின்றி தங்களுடைய இச்சைக்கு அடிபணிந்து சன்மார்க்கத்தில் குழப்பங்களைச் செய்து, முஸ்லிம்கள் மத்தியில் பிளவு ஏற்படுத்திய குழப்பவாதிகள் அஹ்லே சுன்னத் வஜமாஅத்தைச் சார்ந்தவர்களா?
விலாசம் இல்லாத மொட்டை தொழுகையாளிகளின் இரண்டாம் கேள்வி:
ஜும்மா பயானில் ஸல்லாலாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு ஆலிமுல் கய்ப் (மறைவான ஞானம்) உள்ளது என்பதை ஏற்றுக் கொள்ள வேண்டும். இந்த விஷயத்தை ஏற்காதவா; இஸ்லாத்தை விட்டு வெளியேறிவிட்டார்; எனக் (இமாம்) கூறினார். இதற்கு (ஆதாரபூர்வமான பதில் தர வேண்டும்)
ஜமாத்துல் உலமாவின் ஃபத்வா:
நபிகள் நாயகம் (ஸல்) அவா;களுக்கு இலமுல்கய்ப் (மறைவான பற்றிய ஞானம்) என்பது அஹ்லுஸ் ஸுன்னத்வல் ஜமாஅத்தின் நடுநிலையான பத்வாவிற்குhpய சொல்படி கிடையாது.
ரஹுலுல்லாஹ் (ஸல்) அவா;களுக்கு இல்முல்கய்ப் மறைவான பற்றிய ஞானம் இருப்பதை நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பது கிடையாது.
ஆதாரம் ??? இல்லை. அதனால் ??? குழப்பம்
ஆய்வு:2
மேற்கண்ட விவாதத்திற்கும் ஃபத்வாவை கொடுத்தவா; குர்ஆனின் வசனத்தைக் கொண்டோ, ரசூலின் ஹதீஸைக் கொண்டோ, நான்கு இமாம்கள் சொன்ன கூற்றைக் கொண்டோ, ஆதாரம் ஏதும் குறிப்பிடவில்லை.
கேள்விகளைக் கேட்ட குழப்பவாதிகள் ஆதாரப்பூர்வமான பதிலைக் கேட்டிருக்கிறார்கள்.
ஆதலால் இந்த விவாதமும் வீணானதே!
ஜமேத் அலி பள்ளிவாசல் இமாம் லுக்மான் அவர்கள் தன்னுடைய ஜும்ஆ பயானில் ஆலிமுல் கய்ப் என்ற வார்த்தையை கூறியதில்லை. ஏனென்றால் அரபியில் ஆலிமுல்கய்ப் என்பதற்கும், ஆலிமுகய்பின் என்பதற்கும் வித்தியாசம் இருக்கின்றது. இதனை பாமர மக்களால் புரிந்துக் கொள்ள முடியாது என்பதற்காக. (பாமர மக்களை குழப்புவதற்காக கேள்விகளைக் கேட்ட குழப்பவாதிகள் இந்த அரபி வாh;த்தைக் கொண்டு கேட்டிருக்கின்றார்கள் என்பது கவனிக்கப்பட வேண்டும்)
ஆதலால் தான் ஜும்ஆ பயானில் ஆலிமுல் கய்ப் என்றே ஆலிமுகய்பின் என்றோ அரபிமொழி வார்த்தையை பயன்படுத்தாமல், நபி என்ற வார்த்தைக்குப் பொருள் என்னவென்பதை மட்டும் எடுத்துக் கூறினார்கள்.
நபி என்ற வார்த்தைக்கு மறைவானவற்றை அறிவிக்கக் கூடியவா; என்று பொருளாகும்.
மேலும் மறைவான ஞானத்தை அறிந்திருப்பவரால் தான் மறைவான விஷயங்களை அறிவிக்க முடியும்.
ஆகையால் தான் நபியவா;கள் மறைவான ஞானத்தை அறிந்திருக்கிறார்கள் என்று நம்பிக்கை வைப்பது அஸ்லே சுன்னத் வஜமாஅத்தின் கொள்கையாகும்.
ஏனென்றால், நாம் விசுவாசம் கொண்டிருக்கும் சொர்க்கம். நரகம், மறுமை நாள், மலக்குகள், விதி போன்றனைத்தும் மறைவானவைகளாகத்தான் இருக்கின்றன. இவைகளை பற்றி நமக்கு அறிவித்திருப்பவர் நபிகள் கோமான் ஆவார்கள். மறைவான விஷயங்களை அறியாத ஒருவர் அதனை மற்றவருக்கு எப்படி அறிவிக்க முடியும்.
சர்வ பிரபஞ்சத்திலும் மறைந்துள்ள மறைவானவற்றை அறியும் வல்லோனான அல்லாஹ்வே மறைவானவனாகத் தான் இருந்துக் கொண்டருக்கின்றன். அல்லாஹ்வை விட மறைவான ஒன்று வேறு ஏதேனும் உண்டா? அப்படிப்பட்ட மறைவான அல்லாஹ்வையே நபிகளார் அறிந்திருந்ததுடன் தமதுப் புறக் கண்களால் கண்டும் இருக்கின்றனர் என்பதை மிஃராஜ் சம்பவம் நமக்கு எடுத்தோதிக் கொண்டிருக்கும் போது, மற்ற மறைவான பொருள்கள் இறைவனை விடவும் மறைவானவைகளா?
இதைப் பற்றி அருள் மறை சொல்வதைப் பாருங்கள்.
(நபிகளார்) அவர்கள் மறைவானவற்றை அறிவிப்பதில் உலோபித்தனம் உடையவரல்ல.
(அல்குர்ஆன் பாகம் 30 அத் 82 வசனம் 24)
செல்வமே இல்லாத ஒருவரைப் பார்த்து யாரும் கஞ்சன் என்று சொல்லுவதில்லை. ஆனால் செல்வம் இருந்தும், அதைத் தக்க சமயத்தில் தகுந்த மனிதருக்கு கொடுக்காதவரை கஞ்சன் என்றும், உலோபியென்றும், குறிப்பிடுவார். இனி பூமான் நபியவர்கள் மறைவானவற்றை அறிவிப்பதில் கஞ்சத்தனம் உடையரவல்ல என இறைவன் கூறுகிறான் எனில் நபிகளார் மறைவானவை அனைத்தும் அறிந்துள்ளார்கள் என்பது தானே இதன் பொருளாகும்.
ஆகவே நபியவா;கள் மறைவான ஞானத்தை அறிந்திருக்கின்றார்கள் என்று நம்பிக்கை வைப்பது திருமறை வசனத்துக்கு உட்பட்டதாகும் அது தான் அஹ்லே சுன்னத் வஜமாஅத் தின் கொள்கையாகும்.
நபி ஸல்லால்லாஹு அலைஹி வஸல்லாம் அவர்களுக்கு மறைவானவைப் பற்றி ஞானம் இல்லை என்று சொல்வது குர்ஆனுக்கு முரண்பட்ட கூற்றாகும். ஆதலால் இந்தக் கொள்கை அஹ்லே சுன்னத் வஜமாத் கொள்கைக்கு புறம்பான சொல்லாகும். மேலும், இதன் மூலம் நபிகளாருக்கு மாசு கற்பித்து அவா;களை நிந்திப்பவர்களை முஸ்லிம் சமுதாயம் பகிஷ்காரம் செய்ய வேண்டும். இல்லாவிட்டால் நாளை மறுமை நாளில் இதற்கு பதில் சொல்லியாக வேண்டும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.
விலாசம் அல்லாத மொட்டை தொழுகையாளிகளின் மூன்றாம் கேள்வி:
அல்லாஹ்வின் பெயர் சொல்லாமல் அவ்லியாக்களின் பெயர் சொல்லி குர்பானி கொடுப்பது கூடும் என்று (இமாம்) சொல்கிறார் இதை ஏற்காதவர் நன்றி கெட்ட நாய் என்று சொன்னார்.
ஜமாத்துல் உலமா சபையில் பதில் ஃபத்வா:
அவ்லியாக்களின் பெயர் சொல்லி குர்பானி கொடுத்தால் அந்த அறுப்புக் கூடாது. அந்த கறியைச் சாப்பிடுவது ஹராம்.
ஆய்வு: 3.
மேற்கண்ட விவாதத்திற்கும் ஆதாரமேதும். மதுரை மாவட்ட முப்தி யாரும் கொடுக்கவில்லை. ஆதாரம் இல்லாத பத்வா இதுவரை எவரும் கேள்விபட்டிருக்கமாட்டார்கள்.
மேலும் கேள்வியைக் கேட்ட குழப்பவாதிகள் அல்லாஹ்வின் பெயர் சொல்லாமல் அவ்லியாக்களின் பெயர் சொல்லி குர்பானி கொடுப்பது கூடும் இதை ஏற்காதவர் நன்றி கெட்ட நாய் என்று இமாம் பயானில் சொன்னதாக பொய்யான ஒரு கூற்றை இட்டுக் கட்டிருக்கிறார்கள்.
பயானில் இமாம் சொன்ன உண்மையான கூற்று வருமாறு.
உம்முல் மூஃமினின் ஹஜ்ரத் ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அவர்கள் மூலம் இமாம் முஸ்லிம் அவர்கள் ரிவாயத்து செய்த ஒரு ஹதீஸீல்,
அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் ஒரு ஆடு குர்பானிக்காக ஆஜராக்கப்பட்ட போது, நபியவர்கள் ஆயிஷா நாயகியிடம் கத்தியைக் கேட்டு வாங்கி, குர்பானி கொடுத்தார்கள். அதற்குப் பின் இவ்வாறு துஆ செய்தார்கள்.
பிஸ்மில்லாஹி அல்லாஹும்ம தகப்பல் மின் முஹம்மதின் வஆலி முஹம்மதின், வமின் உம்மதி முஹம்மதின்.
பொருள்: யா அல்லாஹ் இந்த குர்பானியை முஹம்மத் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்) புறத்திலிருந்தும், முஹம்மத் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் சந்ததியினாpன் புறத்திலிருந்தும், முஹம்மத் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் உம்மத்திரின் புறத்திலிருந்தும் ஏற்றுக் கொள்வாயாக!
அடுத்து ஒரு அறிவிப்பில், அபு தல்ஹா ரபியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றார்கள்.
அண்ணல் நபியவார்கள் ஒரு செம்மறியாட்டை குர்பானி கொடுத்து, பின் இன்னொரு ஆட்டை குர்பானி கொடுத்து, இது என்னுடைய உம்மத்தினருக்காக என்று சொல்லி தங்களுடைய உம்மத்தினரையும் நன்மையில் சேர்த்துக் கொண்டார்கள்.
அல்லாஹ்வுக்காக அவனுக்கு அடி பணிந்து, குர்பானி கொடுப்பது ஒரு வணக்கமாகும். ஆந்த வணக்கத்தில் நபியவர்கள் தங்களுடைய சந்ததி இன்ரையும், தங்களது உம்மத்தினரையும் நினைவு கூறி அவர்களுக்காகவும் குர்பானி கொடுத்திருக்கின்றார்கள் என்று மேற்கண்ட இரு ஹதீஸ்களும் சுட்டிக் காட்டுகின்றன. இதன் அடிப்படையில் நாமும் நபியவர்களுக்காகவும், அவர்களுடைய சந்ததியினருக்காகவும், குர்பானி கொடுத்தால் இது பெருமானாரின் சுன்னத்திற்கு உட்பட்டதாகும். அதாவது, அன்னவார்களை குர்பானியின் நன்மையில் சேர்த்துக் கொள்வது கூடும்.
இதனைத் தான் ஜமேத் அலி இமாம் தன்னுடைய பயானில் கூறியிருக்கின்றார்கள். இதில் தவறு என்ன இருக்கின்றது?
கேள்வியைக் கேட்ட குழப்பவாதிகள் பிராணியை அறுக்கும் போது, பிஸ்மில்லாஹி அல்லாஹு அக்பர் என்று அல்லாஹ்வின் பெயர் சொல்லாமல், அவ்லியாக்களின் பெயர் சொல்லி அறுப்பது கூடும் என்று இமாம் சொன்னதாக பாமர முஸ்லிம் சகோதர்களை குழப்பத்தில் ஆழ்த்திருக்கின்றார்கள் என்று அவா் சொன்னதாக தங்களது நோட்டீஸில் ஒரு செய்தியை இவர்கள் வேண்டும் என்றே இட்டுக்கட்டி மக்கள் மத்தியில் குழப்பத்தையும் சச்சரவுகளையும், தூண்டிவிடுவதற்காகவே இணைத்துள்ளார்கள். இதிலிருந்து அவர்கள் வெளியிட்ட நோட்டீஸ் எவ்வளவு பெரிய மோசடித்தனமானது என்பதை பொதுமக்கள் விளங்கிக் கொள்ள வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறோம்.
இப்படிப்பட்ட நயவஞ்சகத்தினரான குழப்பவாதிகளின் குழப்பத்தை விட்டும் வல்ல அல்லாஹ் பொது மக்களான தொழுகையாளிகளை காப்பாற்றி அருள்புரிவானாக.
ஆமின், ஆமின், ஆமின்.
Comments
Post a Comment