Skip to main content

தப்லீக் ஜமாஅத் விஷயத்தில் தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமாவின் கள்ள மௌனம்

*தப்லீக் ஜமாஅத் விஷயத்தில் தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமாவின் கள்ள மௌனம்*

*_______________________________*

*தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமாவிற்கு மௌலான மௌலவி M.Kமுஹம்மத் காஷிம் மஹ்ளரி (இமாம் ஏழு லெப்பை பள்ளி - நாஹுர் ஷெஃரிப் ) அவர்கள் மற்றும் 60க்கு மேற்பட்ட உலமாக்கள் வழிகெட்ட தப்லீக் ஜமாஅத்தை வழிகெட்ட வஹ்ஹாபிய இயக்கம் என்று அறிவிக்க  வழியுறுத்தி  எழுதிய கடிதம்* 

■─➻

_தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபை இதுவரை வழிகெட்ட பி. ஜெ தவ்ஹீத் ஜமாஅத்தை எதிர்த்து குரல் கொடுத்திருக்கிறது._

*இல்யாஸ் தப்லீக் ஜமாஅத்தும் தவ்ஹீத் ஜமாஅத்தை போல் ஒர் வஹ்ஹாபிய பிரிவுதானே.*

_தப்லீக் ஜமாஅத்தை ஆதரிக்கின்ற சென்னை காஃஷிபுல் ஹுதா, திருச்சி அன்வாருல் உலூம் போன்ற அரபுக் கல்லூரிகள்_

_இஸ்லாத்தில் அனுமதிக்கப்பட்ட புனித காரியங்களான_  *மவ்லித், உரூஸ்* _போன்றவற்றை கூடாதென ஃபதவா வழங்கியிருக்கிறார்கள். இந்த தப்லீக் ஜமாஅத்தை ஆதரிக்கின்ற டில்லி குதுப்கானா , பேகம்பூர், தின்டுக்கல் என்ற முகவரியில் இருந்து வெளியிட்ட கலீல் அஹ்மது கீரனூரி எழுதிய தப்லீக் ஜமாஅத்தின் குற்றசாட்டுகளும், தக்கபதில்களும் என்ற தமிழ் மொழிபெயர்ப்பு நூலில் 136 பக்கத்தில் நம் உயிரினும் மேலான நபிகளாரை தொகையில் நினைப்பது  ஆடு ,மாடு , மற்றும் கழுதையின் நினைப்பில் முழ்குவதை விட கெட்டது என்று பதிவு செய்திருக்கிறார்கள்.( நவுதுபில்லாஹி மின்ஹா )_

*இப்படிப்பட்ட தீய கொள்கைகளை பின்னனியாக கொண்ட தப்லீக் ஜமாஅத்தை இதுவரை இந்த ஜமாஅத்துல் உலமா எதிர்த்து குரல் கொடுக்கவில்லை.*

*ஆகவே காலத்தின் கட்டாயம் கருதி
கொள்கை குழப்பம் நிறைந்த இல்யாஸ் தப்லீக் ஜமாஅத்தை எதிர்த்து உலமா சபையில் தீர்மானம் நிறைவேற்றி*

_இஸ்லாமியர்களின் புனித ஈமானை பாதுகாக்குமாறு அல்லாஹ் ரஸுலின் திருப்பெயரால் அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்._

_மேலும் இது குறித்து மேலான பதிலையும் எதிர்பார்க்கிறோம். வஸ்ஸலாம்._

09-02-2018

இப்படிக்கு

_M.Kமுஹம்மத் காஷிம் மஹ்ளரி உட்பட 60கும் மேற்பட்ட தமிழக உலமாக்கள் மேற்படி கடிதத்தை ரிஜிஸ்டர் தபாலில்_

*தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமாவின் தலைவர் , செயலாளர் , பொருளாளர் ஆயியோருக்கு அனுப்பியும்*

*அதன் தலைவரை நேரில் சந்தித்து மௌலானா அவர்கள் பதில் தர கேட்ட பின்பும்,*

*_தருவோம் என ஒற்றை வாரத்தையில் பொய் சொல்லி மழுப்பிவிட்டார் என்பது_*

*M.Kமுஹம்மத் காஷிம் மஹ்ளரி ஆகிய   எனக்கும் மற்றும்  ஸுன்னத் வல்ஜமாஅத் கொள்கை வழி கொண்ட உலமாக்களின் ஆதங்கமாக உள்ளது.*

*தவ்ஹித் பேசும் வஹ்ஹாபிகளை எதிர்ப்பதும், தப்லிக் ஜமாஅத் மற்றும் தரிக்கா போர்வையில் புகுந்துள்ள தேவ்பந்திய தப்லீக் வஹ்ஹாபிகள் விஷயத்தில்*

*தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபை கள்ள மௌனம் காட்டி சாதிப்பது !!! ஜமாஅத்துல் உலமாவிற்கு அழகா !!!*

*என்ற கேள்வி ஸுன்னத் வல்ஜமாஅத் கொள்கை வழி நடக்கும் உலமாக்களிடம்  மிகைத்து வருகிறது.*
*தர்ஹா மாத இதழ் செப்டம்பர் -2018*

Comments

Popular posts from this blog

தமிழ்நாடு அஹ்லிஸ் ஸுன்னத் வல் ஜமாஅத் உலமா சபையின் செயற்குழு கூட்டத்தில் உலமா பெருமக்களால் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்

தமிழ்நாடு அஹ்லிஸ் ஸுன்னத் வல் ஜமாஅத் உலமா சபையின் செயற்குழு கூட்டத்தில் உலமா பெருமக்களால் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள். Download  Pdf 1. புனித ஹரமைனுஷ் ஷரீஃபைன் மற்றும் இந்தியாவின் உலமா பெருமக்களால் குஃப்ரு ஃபத்வா வழங்கப்பட்ட வழிகேடர்களான 1.குலாம் அஹ்மத் காதியானி 2.காஸிம் நானோத்தவி 3.கலீல் அஹ்மத் அம்பேட்வி 4.அஷ்ரஃப் அலி தானவி 5.ரஷீத் அஹ்மத் கங்கோஹி ஆகியோர்களும் அவர்களைப் பின்பற்றுவோரும் காஃபிர்கள் என்பதில் சந்தேகம் இல்லை. 2. நூரி ஷாஹைதராபாத்தில் ஜாமிஆ இலாஹியாத்தே நூரியா என்ற மதரஸாவை, வழிகெட்ட தேவ்பந்து வஹ்ஹாபி மதரஸாவை ஸ்தாபித்த காஸிம் நானோத்தவியின் பேரரான மௌலவி காரி தையப் காஸிமியை வைத்து நடத்திய திறப்பு விழா கல்வெட்டு ஆதாரம் (பார்க்க தர்கா இதழ் ஜனவரி - 2021) கிடைத்துள்ள படியாலும், நூரிஷா மதரஸாவின் பைலாவில் மதரஸாவை தொடர்ந்து நடத்தமுடியாமல் போனால் தேவ்பந்து அதை தத்தெடுத்துக் கொள்ளும் என்னும் ஷரத்து உள்ளது என்ற செய்தி தெரியவந்திருப்பதாலும் ஹைதராபாத் நூரிஷா தரீகாவினருக்கும், வழிகேடர்களான தேவ்பந்து வஹ்ஹாபிய முல்லாக்களுக்கும் உள்ள தொடர்பு வெளிச்சமாகியுள்ள படியாலும், மேலும் நூரிஷா தரீக்காவின்

அடையாறு ஆசானுக்கு பகிரங்க மடல்

அடையாறு ஆசானுக்கு பகிரங்க மடல் https://az-zalzalah.blogspot.com/2018/12/blog-post.html மௌலவி  சதீதுத்தீன்  பாகவி , அவர்களுக்கு, மௌலவி, பதுறுத்தீன் ஷர்க்கி, பரேலவி,  எழுதும்  பகிரங்க மடல் தப்லீக் ஜமாஅத் பற்றி  நீங்கள்  பேசிய ஒரு பதிவை  வட்சொப்  தளங்களில்  நான் கேட்டேன். அதில்., இஸ்மாயீல் திஹ்லவி  பற்றியும், அவரது தக்வியத்துல் ஈமான் என்ற நூல் பற்றியும் சிலாகித்துப் பேசியுள்ளீர்கள். இப்பேச்சு  செவிவழிச்  செய்தியாக இல்லாமல் அறிவுபூர்வமானது  என்பதை," தக்வியத்துல் ஈமான்  என்ற  நூல், தன்னிடமிருப்பதையும், அதை நீங்கள் படித்ததையும் உரையில் குறிப்பிடுவதிலிருந்து புரிந்து கொள்ள முடிகின்றது. உங்களின்  இவ்விளக்கத்தின் மூலம் நீங்கள்   தேவ்பந்து  கொள்கையைச் சார்ந்தவர்   என்று உங்களை  விளம்பரப்படுத்தியுள்ளீர்கள். மௌலவி, அவர்களே! நீங்கள் படித்த  தக்வியத்து  ஈமான்  என்ற  நூல் தமிழில், "ஏகத்துவமும், இணைவைத்தலும் ."   என்ற பெயரில் 'அப்துல்ஹமீது  ஆமிர்' என்பவரின் தமிழாக்கமாக வெளிவந்துள்ளது. அநேகமாக   இது உங்களிடம் இருக்கும். அதிலிருந்து சில விளக்கங்களை முன் வைக்கின்றேன்