அடையாறு ஆசானுக்கு பகிரங்க மடல்
https://az-zalzalah.blogspot.com/2018/12/blog-post.html
மௌலவி
சதீதுத்தீன் பாகவி , அவர்களுக்கு, மௌலவி,
பதுறுத்தீன் ஷர்க்கி, பரேலவி, எழுதும் பகிரங்க மடல் தப்லீக் ஜமாஅத் பற்றி நீங்கள்
பேசிய ஒரு பதிவை வட்சொப் தளங்களில் நான் கேட்டேன்.
அதில்.,
இஸ்மாயீல் திஹ்லவி பற்றியும், அவரது தக்வியத்துல்
ஈமான் என்ற நூல் பற்றியும் சிலாகித்துப் பேசியுள்ளீர்கள். இப்பேச்சு செவிவழிச்
செய்தியாக இல்லாமல் அறிவுபூர்வமானது
என்பதை," தக்வியத்துல் ஈமான் என்ற
நூல், தன்னிடமிருப்பதையும், அதை நீங்கள் படித்ததையும்
உரையில் குறிப்பிடுவதிலிருந்து புரிந்து கொள்ள முடிகின்றது.
உங்களின்
இவ்விளக்கத்தின் மூலம் நீங்கள் தேவ்பந்து கொள்கையைச் சார்ந்தவர் என்று உங்களை விளம்பரப்படுத்தியுள்ளீர்கள். மௌலவி, அவர்களே! நீங்கள்
படித்த தக்வியத்து ஈமான் என்ற
நூல் தமிழில், "ஏகத்துவமும், இணைவைத்தலும்." என்ற பெயரில் 'அப்துல்ஹமீது ஆமிர்' என்பவரின் தமிழாக்கமாக வெளிவந்துள்ளது. அநேகமாக
இது உங்களிடம் இருக்கும். அதிலிருந்து சில விளக்கங்களை
முன் வைக்கின்றேன். பதில் தருவீர்கள் என்று
நம்புகின்றேன்.
(1)தலைப்பு: குர்ஆனை புறக்கணிக்கச் செய்யும் ஷைத்தானின் செயல்:
"இறைவன் மற்றும் இறைத்தூதரின் போதனைகளை உணர்ந்து
கொள்வதற்கும், அதன் படி செயல்படுவதற்கும்,
மாபெரும் ஞானம்வேண்டுமென்றும் அதனை
நடைமுறைப்படுத்துவது மகான்களின் வேலை என்ற தவறான கருத்து மக்களிடம் நிலவி வருகின்றது. இது முற்றிலும் தவறான கருத்தாகும்."
"அல்லாஹ்வுடைய வசனங்களை விளங்கிக் கொள்வதற்கு தெளிந்த
ஞானம் வேண்டியதில்லை. கல்வியறிவு இல்லாத
ஜாஹிலியா மக்களைத்தான்
இறைவன் இந்த இறை .(62:2) வசனங்கள் மூலம் அறிவாளிகளாகவும்
நேர்வழியுடையவர்களாக மாற்றவுமே இறைத்தூதரை
அனுப்பி வைத்தான்."
"இவ்வசனத்தைப்படித்த
பிறகும் இறைத்தூதர்களுடைய போதனைகளை அறிஞர்களைத்
தவிர வேறு யாராலும் விளங்க முடியாது என்றும் மகான்களைத் தவிர வேறுயாராலும் அதன்படி நடக்க முடியாது என்றும் சொல்பவர்கள் இவ்வசனத்தை மறுத்தவர்களாக மாறிவிடுவார்கள்."
ஏகத்துவமும்இணைவைத்தலும்..பக்:13,14,15,
கேள்வி:
மௌலவியவர்களே! இக்கருத்தை ஏற்கின்றீர்களா? இக்கருத்திற்கும், தக்லீதைமறுக்கின்றவர்களின்
கருத்திற்குமிடையிலுள்ள வித்தியாசமென்ன?
மேற்படி
திருவசனத்தில்வரும் " உம்மி " என்ற சொல்லுக்கு "கல்வியறிவு அற்றவர்கள் " என்று விளக்கம் கூறியிருப்பதிலிருந்து "நபியவர்களை "கல்வியறிவு இல்லாதவர்கள்" என்று கூறியதாக ஏன் கருத முடியாது ?
அறிவற்ற
சமூகத்திற்கு நபியவர்கள் திருத்தூதராக அனுப்பப்பட்டார்களா ? அல்லது.,
அபார அறிவிருந்தும் , அறிவை சரியான வழியில்
பயன்படுத்தாதவர்களுக்கு மத்தியில் அனுப்பப்
பட்டார்களா?
அறிவற்ற மக்களைப் பார்த்த்து திருக்குர்ஆன் விடுக்கும் சவாலை அறிவு
பூர்வமானதாகக் கருதலாமா ? ஒரு சமுதாயத்தின்
அதி உச்ச திறமையை முறியடிக்கும் விதத்தில்தான்
அக்காலத்திற்கு அனுப்பப்படும் நபியின்
"முஃ ஜிஸாத்" அமையும் என்ற பொது விதிக்கு இக் கருத்து முறனில்லையா?
பல மேடைகளில் "மத்ஹபின் அவசியம்" பற்றி நீங்கள்
பேசிய தெல்லாம் போலியான பேச்சுக்கள் தான் என்று கருதுவது தப்பாகுமா? தக்வியத்துல்
ஈமான் என்ற வஹாபிஸ கொள்கை நூலைப்படித்து அதை
சரி என்று ஏற்ற பின்பும், சுன்னத் வல் ஜமாஅத்
மேடைகளில் பேசுவதற்கு நீங்கள்
கூச்சப்படவில்லையா ?
ஷிர்க் என்றால், என்ன?
மௌலவி இஸ்மாயீல்
திஹ்லவி " தக்வியத்துல் ஈமான் " என்ற நூலில், ஷிர்க்கைப்பற்றி பின்வருமாறு
எழுதுகின்றார்.
"அல்லாஹ்வுக்கு
சமமாகவும் நிகராகவும் அல்லாஹ் அல்லாதவரை ஏற்றுக்கொள்வதுதான் "ஷிர்க்" இணைவைத்தல் என்பது சரியல்ல என்பதை
விளங்கிக் கொள்வது அவசியம். அல்லாஹ்வுக்கே உரித்தாக வேண்டிய செயல்களை அல்லாஹ் அல்லாதவர்களுக்கு
உரித்தாக்குவதுதான் ஷிர்க். ஆகும்.
உதாரணமாக
, சஜதா (சிரம்பணிதல்) செய்தல்., அல்லாஹ்வுடைய அடியார்களின் பெயரால் பிராணிகளைப்
பலியிடுதல், அவர்களுக்காக நேர்ச்சை செய்தல், கஷ்டம் வரும் நேரத்தில் அவரை அழைத்தல், எங்கும் நிறைந்திருப்பதாகக் கருதுதல், ஆதிக்கம் செலுத்தும் ஆற்றல் இருப்பதாக நினைத்தல் இவையனைத்திலும் ஷிர்க் ஏற்படுகின்றது. அவர்களை அல்லாஹ்வைவிட சிறியவரென கருதினாலும், அல்லாஹ்வுடைய
படைப்பு என்றும் அடிமையென்றும் ஏற்றுக்கொண்டாலும் சரியே! இவ்விடையத்தில்
வலிமார்கள் நபிமார்கள், ஜின், ஷைத்தான்கள் யாராக இருந்தாலும் எந்தப்பாகுபாடும் கிடையாது. அதாவது
இவர்களில் யாருடனும் எவரேனும் மேற் கூறப்பட்ட
செயல்களைச் செய்வாராயின், அவர் முஷ்ரிக் ஆவார்.
ஏகத்துவமும்,இணைவைத்தலும் பக்:24,25,
"ஸிர்க்"
ப்பற்றி மேலும் கூறுவதைக் கவனியுங்கள்.
"உட்காரும் போதும் , நிற்கும் போதும் அல்லாஹ்
அல்லாதவருடைய பெயரைச் சொல்வதாலும் அழைப்பதாலும் தொல்லைகளுக்கெதிராக அவரை உதவிக்கு அழைப்பதாலும் அவருடைய பெயரைச் சொல்லி தாக்குதல் நடத்துவதாலும் அவருடைய பெயரால் குர்ஆனை ஓதிமுடிப்பதாலும் அல்லது தியானம் செய்வதாலும், அவருடைய உருவத்தை நினைத்துப் பார்ப்பதாலும்
அவருடைய பெயரை நாவினால் கூறினாலும், மனதில் நினைத்தாலும், உருவத்தையோ சமாதியையோ நினைத்தாலும்
அது அவருக்கு தெரிய வருகின்றதென்று
கருதுவதாலும், தன்னுடைய எந்தச்செயலும் அவருக்குத் தெரியாதிருப்பதில்லை என்று கருதுவதாலும், தனக்கேற்படும் நன்மை தீமைகளை அவர்
அறிவார் என்று நினைப்பதாலும் என்னுடைய பேச்சுக்களை
அவர் செவிமடுக்கின்றார், உள்ளத்தில் உள்ளதை அறிகின்றார் என்றெல்லாம் எண்ணுவதாலும் மனிதன் முஷ்ரிக்
ஆகிவிடுகின்றான். இத்தகைய செயல்கள்யாவும் ஷிர்க் ஆகும்.
மேலும்,கூறுகின்றார்,
அல்லாஹ் அல்லாத வேறுயாருக்காவது அல்லாஹ்வைப் போன்ற அனைத்தையும் அறிகின்ற அறிவு இருப்பதாகக்
கருதுவது இத்தகைய நம்பிக்கையில் மனிதன் முஷ்ரிக் ஆகிவிடுகின்றான். இந்த நம்பிக்கை நபிமார்களைப்பற்றியோ,
அவ்லியாக்களைப் பற்றியோ இமாம்களைப்பற்றியோ
ஜின்ஷைத்தான்களைப் பற்றியோயாரைப் பற்றியதாக
இருந்தாலும் சரியே! இவை அவர்களுக்கு சுயமாக உள்ளவை என்றோ, ஆல்லாஹ்வினால்
கொடுக்கப்பட்டவை என்றோ கருதினாலும்
சரியே.! இத்தகைய நம்பிக்கைகள் அனைத்திலும்
ஷிர்க்கே உண்டாகின்றது.
ஏகத்துவமும்
இணைவைத்தலும். பக்(28)
அடையாறு ஆசான்
அவர்களே !
மேற்கண்ட
கொள்கை ஆபத்தங்களை ஏற்கின்றீர்களா? இதை ஏற்றால்
முஸ்லிம்கள் யாராவது உலகத்தில் இருப்பார்களா? நீங்கள் பாக்கியாத்தில் ஒதிய அகீதாவின்
படி இதைக் கூறியவருக்குரிய மார்க்த்தீர்ப்பென்ன? மௌனத்தைக் கலைத்து பதில் தாருங்கள்.
இஸ்மாயீல் திஹ்லவி
"தக்வியத்துல் ஈமான் " என்ற
நூலில், ஷிர்க்கின் வகைகளைப் பற்றி மேலும்
கூறுகையில்,
"துன்பங்களின்போது நேர்ச்சை செய்தல், " கஷ்டமான நேரங்களில் அவர்களை அழைத்தல்."
"அல்லாஹ்வின் பெயரைக் கூற வேண்டிய இடங்களில் அவர்களின் பெயர்களைச் சொல்வது" , "குழந்தை பிறந்தால்
அவர்களுக்கு நேர்வது." , "தங்கள் குழந்தைகளுக்கு அவர்களின் பெயரைச் சூட்டுவது"., (அப்துன் நபி ,இமாம் பக்ஷி பீர் பக்ஷி , நாகூர் பிச்சை., முஹையதீன் பிச்சை
) "நிலங்களிலிருந்தும் தோட்டங்களிலிருந்தும் ஒரு பங்கை அவர்களுக்காக
ஒதுக்கவது ," "தன் சொத்திலிருந்து காணிக்கை செய்வது.," "அவர்களின்
பெயரால் கால்நடைகளை விட்டுவைப்பது," "உண்பது குடிப்பது போன்ற நடைமுறை விஷயங்களில் அவர்களின் செயல்களைப்
பின்பற்றுவது,"
"நன்மை தீமை அவர்களால் ஏற்பட்டது என்று கூறுவது", "இந்த பெரியாரால்தான்
இவர் பைத்தியக் காரனாகிவிட்டான் இவன நல்லவனாகிவிட்டான்
என்று சொல்வது," "இவனால்தான் பஞ்சம் ஏற்பட்டது.
இந்த நேரத்தில் இந்நாளில் ஆரம்பிக்கப்பட்டதால்
தான் இந்த வேலை பூர்த்தியாகவில்லை என்று கருதுவது," "அல்லாஹ்வும் றசூலும்
நாடினால் வருவேன் என்றோ, ., குரு நாதர் நாடினால் இந்தக்காரியம் நடந்து விடும் என்றோ கூறுவது," "இறைவனை உருவகப்
படுத்துவது போல ரசூலை குருவை, வலியை ,உருவகப்படுத்தினாலோ சத்தியம் செய்யும் போது அவர்களைக்கொண்டு சத்தியம்
செய்தல் ," இத்தகைய செயல்களாலும் ஷிர்க் ஏற்படுகின்றது.
அடையாறு ஆசான் அவர்களே!
தக்வியத்துல்
ஈமான் ஆசிரியரின் மேற்கண்ட ஷிர்க்கின் வகைகளை கூர்ந்து கவனியுங்கள்.!
வலிமார்கள், நபிமார்கள் மூலம் வஸீலாத்தேடுதல்.,
அவர்களுக்காக நேர்ச்சை செய்தல், ,பறக்கத்தை நாடி அவர்களின்
பெயரை வைத்தல், அவர்களின் பெயரால்
ஈசாலுத்தவாப் செய்தல், உள்ளிட்ட யாவும் ஷிர்கென்று பட்டியலிட்டிருப்பதைக் கவனியுங்கள்.
பல
மில்லியன் முஸ்லிம்கள் இவரால் காபிராக்கப்பட்டிருக்கும் கொடுமையை ஏன் நீங்கள்
புரிந்து கொள்ளத்தவறினீர்கள்? தனது வாதத்தை நிறுவ ஏதும் ஆதாரங்களை திருக்குர்ஆனிலிருந்தோ , ஹதீதிலுருந்தோ
கூறியிருக்கின்றாரா? இல்லையே ! அறிஞர்களின் எந்த வொரு நூலிலிருந்தும் ஆதாரம் மேற்கோளாகக் காட்டாமல் சுயவிருப்பத்தில் புதிய தொரு
ஷரிஅத்தை உருவாக்கி காரணமின்றி
முஸ்லிக்களை முஷ்ரிக்காக்கியிருக்கும்
கொடுமையை எப்படி உங்கள் மனம் ஏற்றுக்
கொண்டது.?
குர்ஆனையும்,
ஹதீதையும் விட்டு விட்டு அடிப்படையில்லாத வைகளை ஏற்பதும்.தக்வியத்துல் ஈமானில் உள்ளதை வார்த்தைக்கு வார்த்தை ஏற்பதும் தக்வயத்துல் ஈமானின் தீர்ப்பின்படி அவர்களே முஷ்ரிக்காகி விடுகின்றனர்.
இஸ்மாயீல் திஹ்லவி கூறுவதைக் கேளுங்கள்.!
"அவர்கள்அல்லாஹ்வை
மாபெரும் அதிபதியாக ஏற்றுக் கொள்கின்றனர். அத்துடன் அதைவிட சிறிய அதிபர்களாக அறிஞர்களையும் குருமார்களையும் ஆக்கிக் கொள்கின்றனர். இவ்வாறு
அவர்களுக்கு ஏவப்படவில்லை.இதன் மூலம் "அவர்கள்
ஷிர்க் இணை வைக்கின்றார்கள் என்பது நிரூபணமாகின்றது."
ஏகத்துவமும் இணைவைத்தலும். பக்:26,
இந்தியாவின் அறிவு ஜோதி ஷைய்குனா ஷாஹ் அப்துல் அஸீஸ் முஹத்திதுத் திஹ்லவி கத்தஸல்லாஹு ஸிர்ரஹுல் அஸீஸ் அவர்கள் தப்ஸீர் அஸீஸியில் ,
பக்: 450ல் பின்வருமாறு வரைகின்றார்கள்.
"அல்லாஹ்வின்
வழக்கமான செயல்களான பிள்ளைவரம் கொடுத்தல்,
செல்வத்தைக் கொடுத்தல், நோய் நிவாரணமளித்தல் உள்ளிட்டவையை முஷ்ரிக்குகள்
கெட்ட ஆத்மாக்கள்., புத்துக்கள் பக்கம் சேர்க்கின்றனர்.
அதனால் அவர்கள் காபிராகிவிடுகின்றனர். முஸ்லிம்கள்
அல்லாஹ்வின் பெயரின் விளைவாக, அல்லது அல்லாஹ்வின்
படைப்புக்களானம "ருந்துக்கள், அல்லது , அல்லாஹ்வின் நேசர்களின்
துஆவின் பலனாகக்கருதுகின்றனர். அதாவது, அல்லாஹ்விடம் துஆக்கேட்டு மக்களின் தேவையை நிறை வேற்றுகின்றனர். இந்த நம்பிக்கையால் அவர்களின்
ஈமானில் எது வித குறையும் நிகழாது.
இஸ்மாயீல்
திஹ்லவியின் ஷிர்க் பீரங்கியிலிருந்து ஷாஹ் அப்துல் அஸீஸ் முஹத்திதுத் திஹ்லவியும் தப்ப முடிய வில்லை !
மௌலவியவர்களே.!
நீங்கள் யாரைத்திருப்திப்படுத்த இவ்வாறு பேசினீர்கள்? தக்வியத்துல் ஈமானின் ஷிர்க் பட்டியலில்
நீங்களும் பல முறை மாட்டியிருப்பீர்கள் என்பதை உங்களின் கடந்த காலப் பேச்சுக்களை
நீங்களே மீட்டிப்பாருங்கள்.!
தக்வியத்துல்
ஈமான் என்ற நூலின் உள்ளடக்கம் தவ்ஹீத்., ஷிர்க் என்ற போர்வையில்
"நபிமார்களையம், வலிமார்களையும் இழிவுபடுத்துவதோடு
ஷரீஅத்தின் கட்டமைப்பை சீரழிப்பதாகும். என்பதை
மேலோட்டமாகப் பார்க்கின்ற ஒரு முஃமினால் கூட அறிய முடியுமானதை பாக்கியாத்தில் ஓதி,
முனைவர் பட்டமும் பெற்ற உங்களால் எப்படி விளங்க
முடியாது போனது என்பது
தான் ஆச்சரியமாக இருக்கின்றது.!
மெளலவியவர்களே!
நீங்கள் முனைவர் பட்டம் பெற்றவர்.மற்றவர்கள் போன்று சிந்திக்காமல் ஆழமாக ஆராய்ந்து
முடிவெடுக்கும் தகுதியைப்பெற்றவர். முறையியல் ஒழுங்கில் தர்க்கரீதியாக ஆராயும்திறன்
இருப்பவருக்குத்தான் முனைவர் பட்டம் வழங்கப்படும். உங்களுக்கு இத்தகுதி உண்டு என்ற
நம்பிக்கையில் பின் வரும் வாதத்தை முன்வைக்கின்றேன்.
கருத்தூன்றிப்படித்து தெளிவான பதிலைத் தருவீர்கள் என்று நம்புகின்றேன்.
"யார்
அல்லாஹ்வுடைய உரிமையை அவனுடைய படைப்பிற்கு
கொடுத்தாரோ அவர் மிகப்பெரிய உரிமையை
கீழ்த்தரமான ஒருவருக்கு கொடுத்து விட்டார். என்பதாகும். ஒரு அரசனுடைய கிரீடத்தை
தோட்டியின் தலையில் சூட்டுவதற்கு ஒப்பாகும் . இதை விட பெரிய
அநீதி வேறென்ன இருக்க முடியும்.?
." ஒவ்வொரு படைப்பும் அது பெரியதாயினும், சிறியதாயினும் அல்லாஹ்வின் முன்னிலையில்
ஒரு தோட்டியின் ,நிலையை விடத் தாழ்ந்ததே
ஏகத்துவமும் இணைவைத்தலும்
பக் :
37
மௌலவியவர்களே.!
மேற்கண்ட கூற்றை கவனித்துப்பாருங்கள்!
"ஒவ்வொரு
படைப்பும் அது பெரிதாயினும், சிறிதாயினும்" என்பதில் ,நபிமார்ளும் குறிப்பாக றசூலுள்ளாஹி சல்லல்லாஹு அலைஹி வசல்லமவர்களும் அடங்குவார்களா?
இல்லையா.? ."ஒவ்வொரு படைப்பும்."
என்ற கூற்றில் பொதுவாகவும், "அது பெரியதாயினும் சிறிதாயினும்"என்பதில்
குறிப்பாகவுமிருப்பதை புரிந்து கொள்வதற்கு அதிக ஆரய்ச்சி அவசியமில்லை.!
மேற்படி
கூற்றின்படி., ஒரு தோட்டி அதாவது, சக்கிலியன்
அல்லாஹ்வுக்கு முன்னால், நபிமார்கள் ஏன் றசூலுள்ளாஹ்வை
விட உயர்ந்தவன் என்ற கீழ்த்தரமான குப்றியத்தான இக்கூற்றை
எப்படி நீங்கள் அங்கிகரித்தீர்கள் .???
இதுமட்டுமல்ல
! இந்தக்கயவனின் ஒழுக்கங்கெட்ட கூற்றுக்களை மேலும் படியுங்கள்!
"நபிமார்களும், வலிமார்களும் அவன் முன்னால் எந்த சக்தியுமற்ற அணுவை விடக் குறைந்தவர்கள்.." அல்லாஹ்வுடைய ஆதிக்கமோ வானம்புமி யெல்லாம் தன்னகத்தே சுற்றி வழைத்துக்கொண்டிருக்கின்றது.இவ்வளவு
விசாலமாக இருந்தும் அம்மாபெரும் அரசனுடைய மகிமையைத்
தாங்க முடியாதது. அவனுடைய மகிமையால் இவைகள் ஆடிக்கொண்டும் அதிர்ந்து கொண்டும் இருக்கின்றன.
ஏகத்துவமும் இணைவைத்தலும் பக்.: 113.
இதில்,அல்லாஹ்வை
அர்ஷிலிருக்கும் சடப்பொருளாக ஏற்பதோடு,
நபிமார்களையும்,
வலிமார்களையும் அல்லாஹ்வுக்கு முன்னால் அணுவை
விட குறைந்தவர்கள் என்று வெளிப்படையாவே கூறியிருப்பதை ஏற்பவனை முஸ்லிகக் கருத முடியுமா?
மேலும் கூறுவதைக் கேளுங்கள்!
"மனிதர்கள் தங்களுக்குள் சகோதரர்களே! எவன் பெரியவனாக இருக்கின்றானோ
அவன் பெரிய சகோதரன் ஆவான். அவனுக்கு பெரிய
மனிதர்களுக்குக் கொடுக்க வேண்டிய கண்ணியம்
கொடுங்கள். மேற்படி
நூல் : பக் ,120
"ஒரு
நாள் நானும் இறந்து
மண்ணோடு சேரக்கூடியவனாக இருக்கின்றேன். பக் : 121
மௌலவியவர்களே! மனிதர்கள் என்று பொதுவாகக் கூறியிருப்பதால் றசூலுள்ளாஹி சல்லல்லாஹு
அலைஹி வசல்லமவர்களும் அடங்குவார்கள். வஹாபிகளைப் போன்றே இஸமாயீல் திஹ்லவியும் றசூலுள்ளாஹி சல்லல்லாஹு அலைஹி வசல்லமவர்களை நம்மைப்
போன்ற சாதாரணவராகக் கூறுவதையும் ,சாதாரணமானவருக்குரிய
மரியாதையளவு தான் கொடுக்க வேண்டும் என்று கூறுவதையும், சாதாரமானவர்கள் மரணிப்பது போன்றே நபியவர்களும்
மரணித்து மண்ணோடு மண்ணாகிவிட்டார்கள்
என்று இந்த சாபத்திற்குரியவன்
எழுதியதைப் பார்த்த பின்பும் அவரைச்சுத்தப்படுத்த முன்வந்த உங்களின் ஈமானை எப்படி
எடை போடுவது?
தக்வியத்துல்
ஈமான் என்ற ஆபாசக் களைஞ்சியத்தை
மேலோட்டமாக வேனும் படித்து அதை ஏற்பவனுக்கு
சாதாரண முஸ்லிமின் கடைசிப்
பட்டியலிலிருப்பதற்கும் தகுதி கிடையாது. அப்படியிருக்க, படித்துப்பட்டம் பெற்றவர்களின்
நிலை எப்படியிருக்கும் என்பதை சிந்தித்துப் பாருங்கள்.!!
நீங்கள்
சுன்னத் வல் ஜமாஅத் மேடைகளில் றசூலுள்ளாஹி சல்லல்லாஹு அலைஹி வசல்லமவர்களைப் பற்றியும்,
வலிமார்களைப்பற்றியும் பேசியதெல்லாம் உங்களுக்கில்லையா?
மனதில்
இல்லாததை வாயால் பேசுவதற்குத்தான் நயவஞ்சகம் என்று ஷரீஅத் நாமம் சூட்டியிருக்கின்றது. ஆபத்தான இப்பெயரை இலவசமாக வாங்க ஏன்
ஆசைப்படுகின்றீர்கள்? நன்றாக சிந்தித்து இக்கேடு கெட்ட எண்ணத்திலிருந்து தாமதிக்காமல் தவ்பாச்செய்யுங்கள்
! மௌலவி அவர்களே.! தக்வியத்துல் ஈமான் என்ற
நூலில் சொல்லப்படாதவற்றை பரேலவிகள் பொய்யாகக் குற்றம் சுமத்துவதாக உங்கள் உரையில்
குறிப்பிட்டிருந்தீர்கள்.
உங்களது
குற்றச்சாட்டு இதுதான். "முகம்மதுர் ரசூலுள்ளாஹ் சொல்லத் தேவையில்லை என்று " தக்வியத்துல் ஈமான் " என்ற நூலில்
இருப்பதாக கூறியிருப்பது பற்றி நீங்கள் கூறும் போது, தக்வியத்துல் ஈமான் என்ற நூல்
தன்னிடம் இருப்பதாகவும், அதை தான் படித்ததாகவும் ,அதில் குற்றச்சாட்டு ஒரு புரட்டல்
என்றும் விளக்கிவிட்டு ,தக்வியத்துல்
ஈமானிலிருக்கும் உண்மையான விளக்கத்தை குறிப்பிட்டுள்ளீர்கள். மௌலவியவர்களே! உங்களின் இந்த விளக்கம் எனக்கு ஆச்சரியத்தைக்
கொடுத்தது.
மௌலவியவர்களே! "தக்வியத்துல் ஈமான் "என்ற
நூலை படித்துப்பார்த்தேன். நீங்கள் குறிப்பிடும்
குற்றச்சாட்டோ, அதற்கான விளக்கமோ அங்கு காணவில்லை! பரேலவிகளைக்
குற்றவாளியாக்கி தேவ்பந்திகளை நியாயப்படுத்தி , சுத்தப்படுத்தும் நோக்கத்தில்தான்
இவ்வாறு பேசினீர்களோ என்று ஐயுற
வேண்டியுள்ளது.
மௌலவி
அவர்களே! நீங்கள் நாவன்மையுள்ள பேச்சாளர் என்பதை
ஏற்கின்றோம். அதேநேரம் தேவ்பந்தி, பரேலி பிரச்சினைகளைப் பற்றிய தெளிவு உங்களுக்கில்லை.!
என்பது உறுதி.!
தக்வயத்துல்
ஈமான் என்ற நூல் உங்களிடமிருப்பதாகவும் அதை நீங்கள் வாசித்ததாகவும் கூறுவதை என்னால்
ஒரு போதும் ஏற்க முடியவில்லை! நீங்கள் மேடைகளில் பரேலவியைப் போன்று பேசுகின்றீர்கள்.
எண்ணத்தில் தேவ்பந்தியென்று நம்புகின்றீர்கள். ஏன் இந்த முரண்பாடு?
மௌலவியவர்களே! பரேலவிகளுக்கு தேவ்பந்திகளைப் போன்று புதுமார்க்கம் கிடையாது. அசல் சுன்னத் வல்ஜமாஅத்தின் மறு பெயர் தான் "பரேலவிகள்"
என்பதை தேவ்பந்திகளின் சுயரூபத்தை நீங்கள்
விளங்கினால் மட்டுமே புரிந்து கொள்வீர்கள்.
தேவ்பந்திகளின்
கொள்கைகளை நீங்கள் அறிவதற்கு
உங்களிடமிருக்கும் "தக்வியத்துல்
ஈமான் ." என்ற நூலை ஈமானியப்பார்வையோடு படியுங்கள்.! தேவ்பந்திகள்
காபிரை விட மோசமானவர்களாக உங்களுக்குத் தெரிவார்கள். ஒரு முஃ மினுக்கு மிகவிருப்பமானவர் றசூலுள்ளாஹிசல்லல்லாஹு அலைஹி வசல்லமவர்கள் தான்
என்பதை நீங்கள் ஏற்றுக்கொண்டால் " பரேலவிகள்"
உங்களின் மிகமிக பிரியத்திற்குரிய நண்பர்களாகத் தெரிவார்கள். இதற்கு எதிர்மறையான பார்வை
இருந்தால் உங்களுக்காகப் பிரார்த்திப்பது தவிர
மாற்று வழி இல்லை.
மௌலவியவர்களே!
உங்களின் பேச்சு தீன் பணி பெறுமதியற்றதாக ஆகக்கூடாது என்பதற்காகவே
இதைக்கூறினேன்.
மௌலவியவர்களே!
தேவ்பந்தின் நிறுவனர் காசிம் நானோத்தவி பற்றியும்
பேசியிருக்கின்றீர்கள். அதிலும் , பரேலவிகள் காரணமின்றி "குப்று" பத்வா கொடுப்பதாக
ஒரு குற்றச்சாட்டை முன்வைக்ககின்றீர்கள். அதுபற்றியும் ஒரு தெளிவு கொடுக்கப்பட வேண்டும்
என்று கருதுகின்றேன். இன்ஷாஅல்லாஹ்!.
மௌலவியவர்களே!
திட்டவட்மாகத் தெரியாதவைகளை மேடைகளில் பகிரங்கமாவும்
ஆக்ரோசமாகவும் பேசுவதை தவிர்த்துக் கொள்ளுங்கள். மக்களின் கவனத்தையும், பாராட்டையும் பெறுவதற்காகப் பேசுவது
இஸ்லாம் வரும்பாத செயல் என்பதை நீங்கள் நன்கு அறிவீர்கள்.
இன்னும் வரும்.
Comments
Post a Comment