Skip to main content

தேவ்பந்திய வஹ்ஹாபிய கொள்கைகு உட்பட்ட மதுரையில் உள்ள ஜாமிஆ நாஃபிஉல் உலூம் இஸ்லாமிய கல்லூரிக்கு உட்பட்ட இஸ்லாமியர் ஒருங்கிணைப்புக் குழு சார்பாக வெளியிடப்பட்ட பிரசுரத்திற்கு அஹ்லே சுன்னத் வ ஜமாத் ஒருங்கிணைப்புக் குழுவின் தக்க பதில்


தேவ்பந்திய வஹ்ஹாபிய கொள்கைகு உட்பட்ட  மதுரையில் உள்ள ஜாமிஆ நாஃபிஉல் உலூம் இஸ்லாமிய கல்லூரிக்கு உட்பட்ட இஸ்லாமியர் ஒருங்கிணைப்புக் குழு  சார்பாக கிட்ட தட்ட 15 வருடங்களுக்கு முன்பாக வெளியிடப்பட்ட பிரசுரத்திற்கு அக்காலத்தில் அஹ்லே சுன்னத் வ ஜமாத் ஒருங்கிணைப்புக் குழுவின் சார்பாக வெளியிடப்பட்ட பிரசுரத்தின் சாராம்சம் !!!



ஜமாஅத்துல் உலமா சபைக்குள் வஹ்ஹாபிய கொள்கைகுட்பட்ட தலைவர்களும் இருக்கிறார்கள் !!!  Click here

மதுரை மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபையின்  முன்னால் தலைவரும் தேவ்பந்திய வஹ்ஹாபிய கொள்கை  உட்பட்ட  மதுரையில் உள்ள மதரஸாவான ஜாமிஆ நாஃபிஉல் உலூம் இஸ்லாமிய கல்லூரியின் ஸாதபகரும் மறைசுடர் ஆசிரியருமான மௌலவி முஹம்மது காசிம் நிஜாமி பாகவி மற்றும் மௌலவி சபூர் முஹ்யித்தீன் மிஸ்பாஹி ஆகிய இருவரால்  தேவ்பந்திய தப்லீக் வஹ்ஹாபிகளின் பித்னாகளுக்கு முட்டு கொடுக்கும் விதமாக ஒர் ஃபத்வா வெளியிட்டார்கள்.



மௌலவி முஹம்மது காசிம் நிஜாமி பாகவி

இதில்  முக்கியமான மூன்று  கேள்விகளுக்கு எந்தவித ஆதாரங்கள் இன்றி திருக்குறள் சைஸ்க்கு ஃபத்வாவை கொடுத்து இருந்தார்கள்

இந்த ஃபத்வாவையும் இதற்கு  மறுப்பாக ஸுன்னத்  வல் ஜமாஅத் சார்பாக வெளியிடப்பட்ட மறுப்பையும் மேலும் தமிழ்நாடு சுன்னத் வல் ஜமாஅத் உலமா சபை வெளியிட்ட ஃபத்வாவை காண்பதற்கு  Click here  

தற்கு  மறுப்பாக ஸுன்னத்  வல் ஜமாஅத் சார்பாக வெளியிடப்பட்ட மறுப்பையும் கண்டவர்கள் தங்களின் நிலைப்பாட்டை தெரிவிக்க ஒரு சில வருடங்களுக்கு பிறகு  ஜாமிஆ நாஃபிஉல் உலூம் இஸ்லாமிய கல்லூரியின் சார்பாக.....

மறைவானவற்றை அறியும் ஆற்றல் அல்லாஹ்வுக்கு மட்டும் தான் என்ற தலைப்பில்   ஏந்தல் நபி அவர்களுக்கு அல்லாஹ்வால் வழங்கப்பட்ட மறைவான ஞானத்தை மறுத்தும் புனித இஸ்லாமிய கொள்கைகளுக்கு அப்பாற்பட்ட தேவ்பந்தி வஹாபிய கொள்கைகளை வெளிப்படுத்தியும் ஒரு பிரசுரம் மதுரை முழுவதும் வெளியிடப்பட்டது


இதற்கு மறுப்பாக அஹ்லே சுன்னத் வஜமாத் ஒருங்கிணைப்புக் குழு சார்பாக வெளியிடப்பட்ட தீர்ப்பு உங்கள் கையில் என்ற தலைப்பில் பெருமானாருக்கு மறைவான ஞானம் உண்டு என்று ஆதாரபூர்வமான தகவல்களை தொகுத்து வெளியிட்டு இருந்தார்கள்  அதை இங்கு ஒரு பதிவாக தருகின்றோம் படியுங்கள்....

இச் சம்பவம் நடந்து பல வருடங்களாகியும் நினைவில் வைக்கப்பட வேண்டிய ஒன்று என்பதால் இதை இந்த இனைய தளத்தில் தொகுத்து வழங்கிறோம்

தீர்ப்பு உங்கள் கையில்


ஏந்தல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு மறைவான ஞானம் உண்டா?

ஆக்கம் - மௌலவி முஹம்மத் லுக்மான் அஜீஸி அவர்கள்

ஈருலக பெருந்தலைவர், ஏக இறைவனின் இறுதித் தூதர் அண்ணலெம் பெருமானார் முஹம்மத் முஸ்தபா ரசூலுல்லாஹி  அவர்கள் தாம் அல்லாஹுத் தஆலா விடத்தில்படைப்புகளிலேயே மிக்க மேன்மையானவர்கள் என்பதையும், அவர்கள் தான் இறைவனுக்கு மிக்க நெருங்கிய நேசர் என்பதையும், அண்ணவர்களிடத்தில் மறைக்கும் அளவிற்கு மேன்மையான ஒரு பொருள் அகிலத்தில் இறைவனால் படைக்கப் படவில்லை என்றும், ஈமான் கொண்ட ஒவ்வொரு விசுவாசியின் பரிப்பூரணமான நம்பிக்கை ஆகும்.  

மேலும் ஏந்தல் நபி அவர்களுக்கு மறைவான ஞானம் உண்டு என்பது ஈமான் கொண்ட விசுவாசிகளின் தெள்ளத் தெளிவான நம்பிக்கையாகும்.
இதற்கு ஆதாரம் தேடுகின்றவர்கள் வெட்ட வெளிச்சத்திற்கும், பட்ட பகலுக்கும், ஆதாரம் தேடுகின்றவர்களைப் போன்றவர்கள், ஏனென்றால், நபி என்ற  வார்த்தைக்கு மறைவானவற்றை அறிவிக்கக் கூடியவர் என்று தான் பொருளாகும். மேலும் மறைவான ஞானத்தை அறிந்திருப்பவரால் தான் மறைவான விஷயங்களை அறிவிக்க முடியும் என்பதை அறிவுடையவர்கள் அறிவார்கள்.

ஆனால், பாமர இஸ்லாமிய சகோதரர்களை வழிகெடுப்பதிலும், சத்திய சன்மார்க்க உலமாக்களை பகைத்துக் கொள்வதிலும், அண்ணல் நபி அவர்களின் கண்ணியத்தையும், நேசத்தையும் உண்மையான விசுவாசிகளின் இதயங்களிலிருந்து அகற்றி விடுவதிலும் கண்ணும் கருத்துமாயிருக்கின்ற மோசடிக் காரர்கள் நபிகளாரின் காலத்திலேயே இருந்திருக்கும் போது, இன்றும் இருக்கத் தான் செய்வார்கள், தஜ்ஜால் வரும் வரைக்கும் எப்போதும் இருந்துக் கொண்டே இருப்பார்கள்.

அத்தகைய மோசடிக் காரர்களின், மோசடித்தனத்திலிருந்து பாமர  இஸ்லாமிய சகோதரர்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதற்காக சில ஆதாரங்களை மட்டும் தருகிறேன்.

1. மறைவானவற்றை நன்கறிபவன் (இறைவன்) தன்னுடைய மறைவான ஞானத்தை அவன் பொருந்திக் கொண்ட ரசூலைத் தவிர வெளிப்படுத்துவதில்லை.

(அல்குர் ஆன் பாகம் 29 அத்-72 வசனம் 26-27)

அதாவது, அல்லாஹ் ஜல்ல ஷானஹு வ தஆலா, தான் விரும்புகின்ற ரசூலுக்கு மறைவான ஞானத்தை வழங்குகின்றான். மற்ற அனைவருக்குமல்ல.

2. (பொது ஜனங்களான) உங்களுக்கு அல்லாஹ் மறைவான ஞானங்களை அறிவிக்க மாட்டான். ஆம் அல்லாஹ் தன் தூதர்களில் தான் விரும்பியவர்களைத் தேர்ந்தெடுத்துக் கொள்கின்றான்.

(அல்குர் ஆன் பாகம் 4 அத் 3 வசனம் 179)

அதாவது, அல்லாஹுதஆலா தனக்கு விருப்பமான ரசூல்மார்களுக்கு, மறைவான ஞானத்தை வழங்குவதற்கு தேர்ந்தெடுத்துக் கொள்கின்றான். பொது ஜனங்களுக்கு அத்தகைய ஞானம் அவன் வழங்குவதில்லை.

3. இந்த நபியவர்கள் மறைவானவற்றை அறிவிப்பதில் உலோபித் தனம் உடையவரல்ல.

(அல்குர் ஆன் பாகம்-30 அத்-82 வசனம்-24)

குறிப்பு : செல்வமே இல்லாத ஒருவரைப் பார்த்து யாரும் கஞ்சன் என்று சொல்வதில்லை. ஆனால் செல்வம் இருந்தும் அதனைத் தக்க சமயத்தில் தகுந்த மனிதருக்கு கொடுக்காதவரைத்தான் கஞ்சன் என்றும், உலோபியென்றும் குறிப்பிடுவர். இனி பூமான் நபியவர்கள் மறைவானவற்றை அறிவிப்பதில் கஞ்சத்தனம் உடையவரல்ல என இறைவன் கூறுகின்றன் எனில் நபிகளார் மறைவானவை அனைத்தும் அறிந்திருக்கின்றார்கள் என்பதுதான் இதன் பொருளாகும். இதுதான் உண்மையான விசுவாசிகளின் ஈமான் ஆகும்.

மேலும் இந்த வசனத்தின் அடிப்படையில் தப்ஸீர் கலை வல்லுனர்கள் கூறுவதாவது, அல்லாஹுத் தஆலா கூறுகின்றன்,

என்னுடைய தூதருக்கு இருக்கின்ற மறைவான ஞானத்தை உங்களுக்கு அறிவித்து தருவதில் உலோபி அல்ல. அவர்கள் உங்களுக்கும் கற்றுக் கொடுக்கின்றார்கள்

(ஆதாரம் தப்ஸீர் காஸின்)

இதிலிருந்து, மறைவான ஞானத்தை நபிகளார் அவர்கள் அறிந்ததுமட்டுமல்லாமல், தங்களை நேசிக்கின்றவர்களுக்கு கற்றும் கொடுக்கிறார்கள் என்று நன்கு புலனாகிறது. ஆதலால் நபிகளார் யாருக்கு மறைவான ஞானங்களை அறிவித்து தருகின்றர்களோ, அத்தகைய நபிகளாரின் நேசர்களுக்கும் மறைவான ஞானம் உண்டு என்பதில் சந்தேகமில்லை.

4. நபியே! (அதாவது மறைவானவற்றை அறிவிப்பரே!) இவையாவும் மறைவான செய்திகளாகும். உமக்கு நாம் இரகசியமாக அறிவிக்கின்றோம்.

(அல்குர் ஆன் பாகம்-3 அத்-3 வசனம்-44)

5. நபியேர் இது மறைவான விஷயங்களில் உள்ளதாகும் உமக்கு நாம் அறிவித்துத் தருகிறோம் அவர்கள் தங்களுடைய வேலையை நடத்தியபோதும் அவர்கள் சூழ்ச்சி செய்த போதும், நீர் அவர்களிடத்தில் இருக்கவில்லை.

(அல்குர் ஆன் பாகம்-13 அத்-12 வசனம்-102)

6. நபியே! இந்த மறைவான விஷயங்களை நாம் உமக்கு வஹீமூலம் அறிவிக்கின்றோம்.

(அல்குர் ஆன் பாகம்-12 அத்-11 வசனம்-49)

7. மறைவான விஷயங்களை அறிவிப்பவரே! நீர் எதையெல்லாம் அறியாமல் இருந்தீரோ, அவ்வனைத்தையும் (அல்லாஹ்) உமக்கு கற்றுத்தந்தான். (அதனால்) மேலும் உம்மீது அல்லாஹ்வின் மாபெரும் கிருபையாகும்.

(அல்குர் ஆன் பாகம்-5 அத்-4 வசனம்-113)

அல்லாஹ் ஜல்ல ஷானஹு வதஆலா தனது ஹபீபான நேசர் அண்ணல் நபி அவர்களுக்கு மறைவான ஞானத்தை வழங்கி இருக்கின்றான் என்று சுட்டிக் காட்டும் மேற்கூறப்பட்ட ஆதாரங்கள் அனைத்தும் வான்மறை குர்ஆனின் வசனங்களாகும்.

ஆரம்பத்தில் இருந்து கடைசி வரையிலும் உள்ள குர்ஆனின் அனைத்து வசனங்கள் மீதும் நம்பிக்கைக் கொண்டு ஏற்றுக் கொள்வது ஈமான் ஆகும்.
குர்ஆனின் ஒரு வசனத்தையாவது ஒருவர் ஏற்றுக்கொள்ளாமல் நிராகரிப்பாரேயானால், அவர் காபிர் என்றுத் தான் மார்க்கம் தீர்ப்புக் கூறும். ஆகையால் அவர் காபிர் என்றுத் தான கருதப்படுவாரே தவிர, அவர் ஒருபோதும் ஈமான் கொண்ட விசுவாசியாக மாட்டார்.

மேலும் குர்ஆனின் வசனங்களைக் கொண்டு ஏந்தல் நபி அவர்களின் மறைவான ஞானங்கள் ஐயத்திற்கு இடமில்லாது.  ஊர்ஜிதமான பின்பும், ஒருவர் நபிகளாரின் மறைவான ஞானத்தை முற்றிலும் நிராகரிப்பாரேயானால், அவர் மேற்கூறப்பட்ட வான்மறையின் ஏழு வசனங்களையும் நிராகரித்ததன் மூலம் இஸ்லாத்தை விட்டு வெளியேறியவராவார் என்றுத் தான் மார்க்கம் தீர்ப்பு சொல்லும் என்பதில் சந்தேகமில்லை,

ஆதாரம்? இதோ ஒரு சம்பவம்.

ஒருவருடைய ஒரு ஒட்டகம் காணாமல் போய் தேடியும் கிடைக்கவில்லை. ஏந்தல் நபிகளாரிடத்தில் கேட்கப்பட்டபோது, குறிப்பிட்ட ஒரு காட்டை சுட்டிக்காட்டி, அந்தக் காட்டில் உம்முடைய ஒட்டகம் இருக்கின்றது என்று சொன்னார்கள். அப்போது அங்கிருந்த ஒரு முனாபிக் என்ற நயவஞ்சகன், குறிப்பிட்ட அந்த காட்டில் ஒட்டகம் இருக்கின்றது என்று சொல்லும் முஹம்மதுக்கு () மறைவான ஞானம் ஏது? என்று பரிகாசமாக கேட்டதன் மூலம்  ஏந்தல் நபிகளாரின் மறைவான ஞானத்தை நிராகரித்தான். ஆதலால் அவனுக்காக மார்க்கத் தீர்ப்பு ஒன்று கூற வான்மறை வசனம் ஒன்று இறங்கியது. (நயவஞ்சகன் சொன்ன சொல்லைப் பற்றி)

நீர் அவர்களிடத்தில் கேட்பீராயின், நாங்கள் கேலியிலும், விளையாட்டுத் தனத்திலுமிருந்தோம் என்று அவர்கள் கூறுவார்கள். அல்லாஹ்வையும் அவனது வசனங்களையும், அவனது தூதரையுமா நீங்கள் கேலி செய்கின்றீர்கள்? நீங்கள் செய்யும் பரிகாசத்திற்கு வீண்புகழ் கூற வேண்டாம் நீங்கள் ஈமான் கொண்ட பின்னர் காபிராகிவிட்டீர்கள் என்று நபியே (மறைவானவற்றை அறிவிப்பவரே) நீர்கூறிவிடும்,

(அல்குர் ஆன் பாகம்-10 அத்-9 வசனம்-65, 66)

இந்த வசனம் இறக்கப்பட்டதன் நோக்கம்

ஹஜ்ரத் அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் நெருங்கிய மாணவர் ஹஜ்ரத் முஜாஹித் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றார்கள்.
மேற்கூறப்பட்ட இந்த வான்மறை வசனம் இறக்கப்பட்டதன் நோக்கம் என்ன வென்றால் முஹம்மத் () இன்னாருடைய ஒட்டகம் குறிப்பிட்ட அந்த காட்டில் இருக்கின்றது என்பதைக் கூறுகின்றார் முஹம்மது () க்கு மறைவான ஞானம் ஏது? என்று ஒரு முனாபிக் என்ற நயவஞ்சகன் சொன்ன காரணத்திற்காக அல்லாஹ் வான்மறை வசனத்தை இறக்கினான்:
"அல்லாஹ்வையும் அவனுடைய தூதரரையும் நீங்கள் கேலி செய்கின்றீர்களா? அவ்வாறு கேலி செய்வதன் மூலம் நீங்கள் காபிராகி போனீர்கள்".

ஆதாரம் : 1, தப்ஸீர் இமாம் இப்னு ஜரீர்

2. தப்ஸீர் துர்ருல் மன்சூர்

குறிப்பு : முஹம்மத் () க்கு மறைவான ஞானம் ஏது என்ற கேள்வியைக் கேட்ட நயவஞ்சகன் வெளித்தோற்றத்தில் நல்ல அம்சங்கள் பொருந்தியவராகவும், இஸ்லாமிய நெறிமுறையை மிகவும் பேணுபவராகவும் தான் காட்சியளித்தார். உள்ளத்திற்குள் இருந்த நயவஞ்சகத் தன்மையை வெளியில் காட்டிக் கொள்ளாமல் மறைவாகவே வைத்திருக்கும் பக்குவம் அவனிடத்தில் இருந்தது. மறைவான ஞானம் நபிகளாருக்கு ஏது? என்ற கேள்வி இவருடைய நயவஞ்சகத் தனத்தை வெளியேற்றியது.
  
இன்றும் வெளித்தோற்றத்தில் இஸ்லாமிய நெறி முறையை பின்பற்றி வாழும் முஸ்லிம்களாக தங்களைக் காட்டிக் கொண்டு, உலக ஆதாயத்திற்காக பித்தலாட்டங்கள் புரிபவர்கள், ஏந்தல் நபிகளாருக்கு மறைவான ஞானம் இல்லை என்று சொல்வதன் மூலம் தான், அவர்களுடைய மோசடித் தனமும், நயவஞ்சகத்தனமும், வெளியாகும் என்பதை மேற்கண்ட குர் ஆனின் ஃபத்வா எனும் தீர்ப்பைக் கொண்டு நன்குணரலாம்.

ஆதலால், ஏந்தல் நபி அவர்களின் மறைவான ஞானத்தை எவர் ஒருவர் நிராகரிக்கின்றாரோஅவர் தான் முஸ்லிம் என்பதை நிராகரிக்கின்றார் என்பது முற்றிலும்  உண்மை.

இல்மு மா கான வமா யகூன்

ஏந்தல் நபி   அவர்களுக்கு  அல்லாஹ் வழங்கிய மறைவான ஞானம் மிகுதியா? குறைவா? கொஞ்சமா? அதிகமா?
அல்லாஹுத் தஆலா தனது ஹபிபான நேசர் அண்ணலெம்  பெருமானார் அவர்களுக்கு, அகிலத்தின் ஆரம்ப நிலை முதல் இறுதி வரைக்கும் நிகழ்ந்த நிகழ்வுகளும் நிகழப் போகின்ற நிகழ்வுகளையும், வானங்களிலும், பூமியிலும், இவ்விரண்டிற்கு மத்தியிலும் இருக்கின்ற அனைத்துப் பொருள்களின் விரிவான ஞானத்தை வழங்கியிருக்கின்றான்.

அர்ஷ் முதல் பூவுலகு வரைக்கும் உள்ள அனைத்து வஸ்துக்களையும், ஏன் ஆழக் கடலில் இருக்கின்ற அனைத்து வஸ்துக்கள் முதற்கொண்டு ஏந்தல் நபி அவர்கள் அறிவார்கள். நபிகளாருக்கு மறைவானது என்று சொல்லப்படக் கூடிய ஒரு பொருளும் அகிலத்தில் இல்லை. அதற்குத் தான் இல்மு மாகான வமாயகூன் என்று சொல்லப்படுகின்றது.

ஆதாரம்?
வான்மறை கூறுகின்றது.

நபியே! நீர் எதையெல்லாம் அறியாமல் இருந்தீரோ, அவ்வனைத்தையும் உமக்கு அல்லாஹ் கற்றுத் தந்தான்.

(அல்குர் ஆன் பாகம்-5 அத்-4 வசனம்-113)

இந்த வசனத்தின் அடிப்படையில் ஏந்தல் நபிகளாருக்கு தெறியாதது என்று சொல்லக்கூடிய எந்த ஒரு பொருளும் அகிலத்தில் இல்லை என்பது மிகவும் தெளிவானதே!

ஏந்தல் நபிகளாருக்கு மறைவான ஞானம் இல்லை என் வாதாடுகின்றவர்கள் சுட்டிக்காட்டும் சில சம்பவங்களும், நிகழ்வுகளும் முற்றிலும் அல்லாஹ்வின் வேதம் முழுமையாக இறக்கப்பட்டதற்கு முன்னால் நிகழ்ந்தவைகள்.

ஏந்தல் நபி அவர்கள் படைக்கப்பட்டவுடனேயே அவர்களுக்கு மறைவான ஞானங்கள் அனைத்தும் அருளப்பட்டு விட்டன என்று விசுவாசிகளில் எவரும் கூறிவிடவில்லை. முன்னால் அவர்கள் அறியாமல் இருந்தார்கள் எவற்றையெல்லாம் அறியாமல் இருந்தார்களோ, அவற்றையெல்லாம் அல்லாஹ் வஹியின் மூலம் அறிவித்து விட்டான். அதற்குப் பின் இன்று வரைக்கும் உள்ள அத்தனை விஷயங்களையும் நபிகளார் அறிவார்கள் என்று மேற்கூறப்பட்ட வான்மறை வசனம் தெள்ளத் தெளிவாக சுட்டிக் காட்டுகின்றது.

மேலும் எந்த ரசூல் மீது வான்மறைக் குர் ஆன் இறக்கப்பட்டதோ அந்த ரசூல் குர்ஆன் அறியமாட்டார்களென்று எவராலும் கூற முடியாது வான்மறையில் இருக்கின்ற அத்தனை விஷயங்களையும் நபிகளார் அறிவார்கள் என்றுத் தான் ஒவ்வொரு விசுவாசியின் ஈமான் ஆகும்.

இனி வான்மறையில் என்ன இருக்கின்றது என்பதையும் கவனிப்போமாக!

வான்மறையில் இறைவன் கூறுகின்றான்.

1. நபியே! ஒவ்வொரு விஷயத்தையும் தெளிவாக விவரிக்கக் கூடிய இவ்வேதத்தை நாம் உம்மீது இறக்கியருளியிருக்கின்றோம்.

(அல்குர் ஆன் பாகம்-14 அத்-16 வசனம்-89)

2. (இந்த வேதம்) பொய்யான கட்டுக்கதையன்று இதற்கு முன்னாள் இருந்தவையை உண்மைப்படுத்துவதாகும். மேலும் ஒவ்வொரு விஷயத்தையும் விவரித்து கூறுவதாகும்.

(அல்குர்ஆன் பாகம் 13 அத்-13 வசனம் 111)

3. இவ்வேத நூலில் எந்த ஒரு விஷயத்தையும் நாம் விட்டு வைக்கவில்லை.

(அல்குர்ஆன் பாகம்-7 அத்-6 வசனம்-38)

குறிப்பு : தெளிவாக விவரிக்கக் கூடிய ஒவ்வொரு விஷயமும், குர்ஆனில் இடம் பெற்று இருக்கின்றது என்பதையும் எந்த ஒரு விஷயத்தையும் அல்லாஹ் இவ்வேதத்தில் அறிவிக்காமல் விட்டு வைக்கவில்லை என்பதையும் மேற்கூறப்பட்ட வசனங்கள் தெள்ளத் தெளிவாக கட்டிக் காட்டுகின்றன.

ஆதலால், அகிலத்தில் நிகழ்ந்த, நிகழ்ந்துக் கொண்டிருக்கின்றஇனி நிகழப் போகின்ற ஒவ்வொரு விஷயமும், அனைத்து ஞானங்களும், கல்விகளும், அகிலத்தில் படைக்கப்பட்ட அத்தனைப் பொருள்களும், செயல்பாடுகளும், அதன் தன்மைகளும், இலக்ஷனங்களும், குணங்களும் அனைத்தும் இவ்வேதத்தில் இடம் பெற்றிருக்கின்றன. இந்த வேதத்தில் எந்த ஒரு விஷயமும் இடம் பெறாமல் விட்டுவைக்கப்படவில்லை என்றுத்தானே பொருளாகும். அவ்வாறாயின்,

எந்த ரசூல் மீது அத்தகைய வேதம் இறக்கப்பட்டதோ, அந்த ரசூல் எந்த விஷயத்தை அறியாமலா இருந்துவிடுவார்கள்?

ஆதலால், நபிகளாருக்கு மறைவானது என்று சொல்லப்படக்கூடிய ஒரு பொருளும் அகிலத்தில் இல்லை அனைத்து ஞானங்களையும் ஏந்தல் நபி அவர்கள் அறிவார்கள் என்பது தான் ஊர்ஜிதமாகிறது.

ஏந்தல் நபி அவர்களின் மறைவான ஞானங்களை, அல்லாஹ்வின் மறைவான ஞானங்களோடு ஒப்பிட்டு, ஷிர்க் என்று சொல்வது  மடமைத்தனமான வழிகேடாகும். ஏனென்றால், வித்தியாசம் இருக்கின்றது

1. நபிகளாருக்கு இருக்கின்ற மறைவான ஞானம் அல்லாஹ்வால் அருளப்பட்டதாகும். ஆனால், அல்லாஹ்வுக்கு இருக்கின்ற மறைவான ஞானம் எவராலும் அருளப்பட்டதல்ல. ஆதலால், அல்லாஹ்வின் ஞானம் தாதி ZAATHI ஆகும். நபிகளாரின் ஞானம் அதாயி அதாவது சுயமானது அல்ல. அது அல்லாஹ்வால் அருளப்பட்டதாகும்.

2. அகிலத்தின் ஆரம்பநிலை முதல், இறுதிநிலை வரைக்கும் எனப்படுவது, காலத்தின் இரண்டு எல்லைகளைக் குறிக்கும். அதற்கிடையில் உள்ள அனைத்து வஸ்துக்களும், அதன் தன்மைகளும், இலக்ஷணங்களும் அந்த இரண்டு எல்லைகளுக்குட்டதாகும். அதற்குத்தான் "முதனாஹி" என்று சொல்லப்படுகிறது அதைப்போல அர்ஷ் முதல் பூவுலகம் வரை கிழக்கிலிருந்து மேற்கு வரைக்கும் என்பது (ஹுதூது மகானி) இடத்தின் இரு எல்லைகளையும் குறிக்கும். அதற்கிடையிலும் உள்ள பொருள்கள் அனைத்தும், அதன் தன்மைகள் யாவும் (முதனாஹி) இரண்டு எல்லைகளுக்குட்பட்டதாகும். மேலும் அவைகளின் ஞானங்களும் (முதனாஹி) எல்லைக்கு உட்பட்டவையாகுமாதலால், நபிகளாரின் ஞானமும் எல்லைக்கு உட்பட்டதாகும்.

ஆனால் அல்லாஹ்வின் ஞானம் (ஃகய்ரு முதனாஹி) எல்லைகளுக்கு அப்பாற்பட்டதாகும். அவனுடைய ஞானத்தை பல்லாயிரக்கணக்கான மலைகளுக்கும் முன் ஒரு அற்பமான அணுவுக்கும், பல்லாயிரக் கணக்கான கடல்களுக்கு முன்னாள் ஒரு சொட்டுக்கும் உள்ள வித்தியாசத்தையும் கூட உவமைப்படுத்தி கூற முடியாது. அத்தகைய உவமையை விட்டும் அல்லாஹ் தூய்மையானவன்.

ஆதலால், நபிகளாரின் ஞானத்தை அல்லாஹ்வின் ஞானத்தோடு ஒப்பிட்டு சமநிலைப்படுத்தி ஷிர்க் என்று சொல்வது மடமைத்தனமும், வழிகேடும் ஆகும். அல்லாஹ்வின் மேன்மைப் பற்றிய அறியாமைத் தான் அத்தகைய வழிகேட்டிற்கு மூலக் காரணமாகும்.
ஆதலால், அல்லாஹ்வின் ஞானம் (ஃகய்ரு முதனாஹி) எல்லைகள் வரையறைக்கும் அப்பாற்பட்டதாகும்.

ஒப்பிட்டும் கூட கூற முடியாத இந்த வித்தியாசத்தை சமநிலைப்படுத்தி ஷிர்க் என்று எவ்வாறு கூற முடியும்? இந்த வித்தியாசத்தையும் அறியாத மடையர்கள் பத்வா கொடுக்கின்றார்கள், பத்வா கொடுப்பதற்கு தகுதி இவர்களுக்கு ஏது?

வான்மறையில் பல இடங்களில் அல்லாஹ் கூறுகின்றான் இன்னஹு ஹுவஸ் ஸமீஉல் பசீர்" நிச்சயமாக அவன் தான் கேட்பவனாகவும், பார்ப்பவனாகவும் இருக்கின்றான்.

நாமும் கேட்கின்றோம், பார்க்கின்றோம் என்றால் இணையாகிவிட்டதா? ஒருவர் தன்னைக் கேட்கக் கூடியவராகவும், பார்க்கக் கூடியவராகவும் வாதிட்டால் அவர் இணைவைப்பாளரா? முஷ்ரிக்கா?

உலகத்தில் பார்க்கக் கூடிய அத்தனைப் பேர்களும் குருடர்களாகேட்கக் கூடியவர்கள் அனைவரும் செவிடர்களா? அல்லது அவ்வாறு கருதுவது மடமைத் தனமா?

இஸ்லாத்தின் இளைய தலைமுறைகள் இதனை  சிந்திக்க மாட்டார்களா? பேருக்காகவும், புகழுக்காகவும் உலக ஆதாயத்திற்காகவும் சத்தியத்தை எடுத்துக் கூறாமல், அசத்தியத்தையே கூறி வழி கெடுக்கும்  நயவஞ்சகக் கூட்டத் தலைவர்களை இனம் கண்டு கொள்ள  மாட்டார்களா?

ஏந்தல் நபியின் மறைவான ஞானத்தை நிராகரிக்கின்ற குழப்பவாதிகள்,

மறைமுகமானவைப் பற்றிய ஞானம் தனக்கிருப்பதாக வாதிடுபவன் பொய்யன்என்றும் யாராவது ஒருவர் இறைத்தூதரையோ, இறைநேசரையோ, வானவர், இமாம்பற்றிய  இத்தகைய (அதாவது மறைவான ஞானத்தை அறிவார்கள் என்று)  நம்பிக்கைகள் கொண்டால் அவர் இணைவைப்பாளரே! முஷ்ரிக்  ஆவார்என்றும் பத்வா கொடுகின்றனர்.

அவ்வாறு கூறுவதன் மூலம் பாமர இஸ்லாமிய சகோதரர்களை மிகவும் சூசகமாக தங்களுடைய சூழ்ச்சி வலையில் சிக்க வைத்து வழி கெடுக்க முயலுகின்றனர். எப்படி தெரியுமா?

மறைவான ஞானம் தனக்கிருப்பதாக கூறும் இறைநேசர்களான நபிமார்களையும், வலிமார்களையும், இமாம்களையும், ஷூஹதாக்களையும் பொய்யர்கள் என்றும், அவர்களைப் பின்பற்றி வாழும் உண்மையான விசுவாசிகளை முஷ்ரிக் இணைவைப்பாளர் என்றும் மிகவும் சூசகமாக சொல்கின்றனர். நபிமார்களைப் பொய்யர்கள் என்று கருதுகின்றவர்களுக்கு ஈமான் ஒரு கேள்விக் குறி ஆகும் என்பதை நினைவில் வைத்தவாறு கீழ்கண்ட ஆதாரங்களை கவனியுங்கள்.

ஹதீஸ் எண்:- 1

அமீருல் மூமினீன் ஹஜ்ரத் உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுகின்றார்கள்

எந்தல் நபி   அவர்கள் ஒருமுறை எங்கள் மத்தியில் நின்று, படைப்புகள் படைக்கப்பட்ட ஆரம்பநிலை முதல் சொர்க்க வாதிகள் சொர்க்கத்திலும், நரகவாதிகள்  நரகத்திலும், செல்லும் வரைக்கும் உள்ள எல்லா நிகழ்வுகளின் நிலைகளையும் பற்றி கூறிவிட்டார்கள். நினைவில் வைத்தவர்கள் நினைவில் வைத்தார்கள். மறந்தவர்கள் மறந்து போனார்கள்.

(ஆதாரம் புகாரி - மிஷ்காத் பக்-506)

இமாமுல் அஜல் அல்லாமா மஹ்மூத் அய்னி ரஹ்மதுல்லாஹி  அலைஹி அவர்கள் இந்த ஹதீஸின் அடிப்படையில் கூறுகின்றார்கள்.
 “ஏந்தல் நபி அவர்கள் ஆரம்பம் முதல் இறுதி வரைக்கும் அனைத்து படைப்புகளின் நிலைகளையும் ஒரே மஜ்லிஸில் கூறியிருப்பது ஒரு மாபெரும் மேன்மையான அற்புதமாகும் என்பதற்கு இந்த ஹதீஸ் ஆதாரமாகும்".

(ஆதாரம் - உம்ததுல்காரி ஷரஹுல் புகாரி)
                                          

மேலும், ஹாபிலுல் ஹதீஸ் இமாம் அஸ்கலானி ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் இதே ஹதீஸின் அடிப்படையில் கூறுகின்றார்கள்.

"படைப்புகளின் ஆரம்ப நிலை முதற்கொண்டு அழிவுவரைக்கும், இன்னும் மறுமை நாளில் எழுப்பப்படும் வரைக்கும் உள்ள அனைத்து நிலைகளையும் குறித்து ஒரே நேரத்தில் ஏந்தல் நபி   அவர்கள் கூறிவிட்டார்கள். நபிகளாரின் இந்த செய்தி அகிலத்தின் ஆரம்பம் முதல் இறுதி நாள் வரை சூழ்ந்திருக்கின்றது. ஒரே நேரத்தில் இவ்வனைத்தையும் கூறிவிடுவது, நாயகத்தின் ஒரு மாபெரும் சிறந்த அற்புதமாகும் என்பதற்கு இந்த ஹதீஸ் ஆதாரமாகும்.

(ஆதாரம் ஃபத்ஹுல்பாரி ஷரஹுல் புகாரி)

இதைப்போன்ற கருத்தையே இமாம் அஹ்மத் கஸ்தலானி  ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் இர்ஷாதுல்பாரி ஷரஹு புகாரியிலும், அல்லாமா அலி காரி மிர்காத் ஷரஹு மிஷ்காத் என்ற கிரந்தத்திலும் இடம் பெறச் செய்திருக்கின்றார்கள்.

ஹதீஸ் என் :-2

ஹஜ்ரத் ஹுஜைபா ரலியல்லாஹூ அன்ஹூ அவர்கள் அறிவிக்கின்றார்கள்.

ஏந்தல் நபி அவர்கள் எங்கள் முன் நின்றார்கள். அதே நின்ற இடத்தில் நின்றவாறு கியாம நாள்  வரைக்கும் நிகழப்போகின்ற ஒரு விஷயத்தைக் கூட சொல்லாமல்  விட்டுவைக்கவில்லை (அதாவது நிகழப் போகின்றவற்றை அனைத்தும்   கூறிவிட்டார்கள்) நினைவில் இருந்தவர்களுக்கு நினைவில் இருந்தது.  மறந்தவர்கள் மறந்துப் போனார்கள்.                       
(ஆதாரம் - மிஷ்காத் பக்கம் 461)

ஹதீஸ் எண் 3

ஹஜ்ரத் அம்ரூப்னு அக்தப் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றார்கள்,

எந்தல் நபி அவர்கள் ஒரு நாள் பஜ்ர் தொழுகைக்குப் பின் மிம்பர் மீது ஏறினார்கள். அதற்குப் பின் லுஹர் வரைக்கும் பிரசங்கம் செய்தார்கள் (பின்பு லுஹர் நேரத்தில்) இறங்கி லுஹர் தொழுதபின் மீண்டும் மிம்பர் மீது ஏறி அஸர் வரைக்கும் பிரசங்கம்   செய்தார்கள் பின்பு அஸர் தொழுதார்கள் மீண்டும் மிம்பர் மீது ஏறி சூரியன் அஸ்தமிக்கும் வரை பிரசங்கம் செய்தார்கள். அந்த நாளன்று அகிலத்தில் நிகழ்ந்தவைகளும், நிகழப்போகின்றவைகள் அனைத்தையும்  கூறி விட்டார்கள். எங்களில் எவர் அதிக ஞாபகம் வைத்தவரோஅவர்தான் எங்களில் அதிக ஞானமுடையவர்.

(ஆதாரம் முஸ்லிம் மிஷ்காத் பக்கம் - 543)

குறிப்பு : மேற்கூறப்பட்ட ஹதீஸ்கள் மூலம் ஏந்தல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அகிலத்தின் ஆரம்ப முதல் உலகம் முடியும் வரை, சொர்க்கவாதிகள் சொர்க்கத்திலும், நரக வாதிகள் நரகத்திலும் பிரவேசிப்பது முதற்கொண்டு ஒரே இடத்தில் நின்றவாறு ஒரு விஷயத்தையும் விட்டு வைக்காமல் ஒவ்வொரு விஷயத்தையும் நபிகளார்  அறிந்தது மட்டுமல்லாமல்  நபிதோழர்களுக்கும் அறிவித்து தந்து விட்டார்கள் அவற்றில் எந்த நபித்தோழருக்கு எவ்வளவு நினைவில் இருப்பதை அல்லாஹுத் தஆலா நாடினானோ, அவ்வளவு நினைவில் இருந்தது. மேலும் எந்த நபித் தோழர்களுக்கு நபிகளார் அவர்கள் கற்றுத் தந்த மறைவான ஞானங்களை, நினைவில் வைத்து அவற்றை பாதுகாப்பதற்குரிய தவ்பீகை வல்ல நாயன் தந்தருள் புரிந்தானோ அவர்கள் கியாம நாள் வரைக்கும் நிகழ்ந்த, நிகழப் போகின்றவைகளைத்தும் அறிந்ததுடன், அந்த ஞானத்தை அவர்கள் வெளிப்படுத்தியும் கொண்டிருந்தார்கள். அவர்கள் அந்த ஞானத்தை வெளிப்படுத்திக் கொண்டிருந்தது. சுய இலாபத்திற்காகவோ, உலக ஆதாயத்திற்காகவோ, பேரும் புகழுக்காகவோ அல்ல. ரசூலின் மகத்துவத்தை நம்மால் கணக்கீடு செய்ய முடியாது என்று சிந்தித்துணர்வதற்காக,

இமாம் அபூ உமர் இப்னு அப்துல்பர் கிதாபுல் இல்ம் என்ற கிரந்தத்தில், அபு துபைல் ஆமிருப்னு வாஸிலா ரலியல்லாஹு அன்ஹுஅவர்கள் மூலம் ரிவாயத்துச் செய்கின்றார்கள்.

அவர்கள் கூறுகின்றார்கள் எனக்கு முன்னால், ஒரு பிரசங்கத்தில் அமீருல் மூமினீன் ஹஜ்ரத் அலி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள்.
என்னிடம் கேளுங்கள் இறைவன் மீது சத்தியமாக கியாம நாள் வரைக்கும் நிகழப் போகின்ற எதை வேண்டுமானாலும் கேளுங்கள் அதனை நான் கூறிவிடுவேன்".

இந்த ஹதீஸின் அறிவிப்பில் ஹஜ்ரத் அலி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கியாம நாள் வரைக்கும் உள்ள மறைவான ஞானம் தனக்கு இருப்பதாக கூறுகின்றார்கள்.

இன்னும் ஏராளமான ஹதீஸ்கள் மேற்கண்ட தலைப்பில் கிரந்தங்களில் குவிக்கப்பட்டிருக்கின்றன.
ஈமான் கொண்ட விசுவாசிகள் தீர்ப்பு கூறுவதற்கு இந்த ஆதாரங்களே போதுமானதாகும்.


இனி தீர்ப்பு உங்கள் கையில்

சொல்லுங்கள்.

மேற்கண்ட  ஹதீஸ்கள்  அடிப்படையில்,

எந்தல்   நபி    அவர்கள் தங்களுக்கு மறைவான ஞானங்கள் உண்டு எனக் கூறுகின்றார்கள். மறைவான அத்தனை ஞானங்களும் சஹாபாக்களுக்கு அறிவித்தும் தருகிறார்கள்

பெருமானாரின் மறைவான ஞானத்தை நிராகரிக்கின்றவர்கள் 'மறைவான ஞானம் தனக்கு இருப்பதாக வாதிடுபவன் பொய்யன் என்று சொல்கின்றனர்.

எது உண்மை?.... தீர்ப்பு உங்கள் கையில்,

2. ஏந்தல் நபி அவர்கள் உண்மையாளரா பொய்யரா ? அல்லது தங்களை உத்தம புத்திரர்களாகக் கருதிக் கொண்டிருக்கும் இவர்கள் உண்மையாளர்களா? வழி கேடர்களா?

தீர்ப்பு உங்கள் கையில்,

3. ஹத்ரல் அலி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கியாம நாள் வரைக்கும் நிகழப் போவதை எதை வேண்டுமானாலும் கேளுங்கள் இறைவன் மீது சத்தியமாக கூறிவிடுவேன் என்று கூறியிருப்பதன் மூலம் தங்களுக்கு மறைவான ஞானம் இருப்பதாக வாதாடுகிறார்கள். எந்தல்  நபிகளாரின் நான்காம் கலிபா அமீருல் மூமினீன் ஹஜ்ரத் அலி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் பொய்யரா? அல்லது அவர்களைப் பொய்யர் என்று சூசகமாகச் சொல்லும் இந்த வழிகேடர்கள் பொய்யர்களா?
தீர்ப்பு உங்கள் கையில்,

மேற்கூறப்பட்ட ஆதாரங்கள் அடிப்படையில் ஏந்தல் நபி அவர்களின் மறைவான  ஞானங்களை ஏற்றுக் கொண்ட, அண்ணலாரின் நற்றவக்கிளைஞர்கள், நபிகளாருடன் உரையாடி, உறவாடி, உடல் பொருள் ஆவியனைத்தையும் அர்பணித்த உத்தம ஸஹாபாக்கள், தாபிஈன்கள் தபஉத்தாபியீன்கள், தப்ஸீர் கலை வல்லுனர்கள், ஹதீஸ்கலை வல்லுனர்கள், நான்கு மத்ஹபின் இமாம்கள், இறைநேசர்கள் வலிமார்கள், சத்திய மார்க்க உலமாக்கள், அனைவரும் ஏன் உண்மையான விசுவாசிகள் அனைவரும்

இணைவைப்பவர்களா? முஷ்ரிக்களா?

அல்லது எந்தவொரு தெளிவான ஆதாரமின்றி நபிகளாரின் மறைவான ஞானத்தை நிராகரித்து, அதனை ஏற்றுக்கொண்ட உண்மையான விசுவாசிகளை இணைவைப்பாளர் என்று கூறும்

இந்த  நயவஞ்சகர்கள் காபிர்களா?
தீர்ப்பு உங்கள் கையில்,

காபிர்களைப் பார்த்து காபிர் சொல்லக் கூடாது என்று பிரச்சாரம் செய்து கொண்டிருக்கும் இவர்கள் உண்மையான முஸ்லிம்களை முஷ்ரிக் என சொல்ல தயங்குவதில்லை ஏன்?

நபிகளாரின் மறைவான ஞானத்தை ஏற்றுக் கொண்ட உண்மை விசுவாசிகளை முஷ்ரிக் இணைவைப்பாளர்கள் என்று சொல்லுவதற்கு தயக்கமில்லாதவர்களை, முஸ்லிம்கள் என்று எந்த விசுவாசி ஏற்றுக் கொள்வார் ?  
                                   
தீர்ப்பு உங்கள் கையில்,

அத்தகைய நயவஞ்சகர்களோடு நட்புக் கொண்டு அவர்களோடு உறவாடலாமா? அவர்களுடைய சகவாசகத்தில் இருக்கலாமா? அவர்களுக்கு ஸலாம் சொல்லலாமா? நான்கு மத்ஹபுக்கு உட்பட்ட அஹ்லே சுன்னத் வஜாம அத் பள்ளியில் இந்த நயவஞ்சகர்களை இமாமாக நியமிக்கலாமா? அவர்களுக்குப் பின்னால் நின்று தொழுகலாமா? அதற்கு மீறியும் அவர்களைப் பின் தொடர்ந்து தொழுகும் தொழுகை சரியாக நிறைவேறுமா?

தீர்ப்பு உங்கள் கையில்.

நீங்கள் சொல்லும் தீர்ப்புக்கு நாளை மறுமையில் கேட்கப்படுவீர்கள் என்பதை மறந்துவிட வேண்டாம். அல்லாஹுத் தஆலா உண்மையான தீர்ப்பை ஏற்றுக் கொள்வதற்கான தவ்பீகை உண்மையான விசுவாசிகளுக்குத் தந்தருள் புரிவானாக! ஆமீன்.

எச்சரிக்கை

அல்லாஹுத் தஆலா, ஏந்தல் நபி அவர்களுக்கு மறைவான ஞானங்கள் அனைத்தும் வழங்கியிருக்கின்றான் என்பதை வான்மறை வசனங்களைக் கொண்டும், ஹதீஸ்களைக் கொண்டும், தெளிவான ஆதாரங்களை உங்களுக்கு முன் தெளிவுபடுத்திவிட்டோம்.

மேற்கூறப்பட்ட ஆதாரங்கள் தவறானவைகள் என்று எவராவது முன்வந்து நிரூபித்துத்துக் காட்டிவிட்டால், அவருக்கு ஆயிரம் ரூபாய் இனாமாகத் தருவதற்கு தயாராக இருக்கின்றோம். ஆனால் இதற்கு மாற்றமான எந்த ஒரு தெளிவான ஆதாரத்தை எவராலும் தர இயலாது என்பது உறுதி. அதாவது, மறைவான ஞானம் ஏதும் எனக்கு அல்லாஹ் வழங்கியதல்ல என்று நபிகளார் கூறியிருக்க வேண்டும். அல்லது நான் நபிகளாருக்கு மறைவான ஞானத்தை வழங்கவில்லை என்று வான்மறையில் அல்லாஹ் கூறியிருக்க வேண்டும். அத்தகைய ஒரு தெளிவான ஆதாரத்தை உலகமே ஒன்று திரண்டாலும், நிச்சயமாக அவர்களால் தர இயலாது. ஆதலால் தான் ஏந்தல் நபி அவர்களுக்கு மறைவான ஞானம் உண்டு என்பது ஒவ்வொரு ஈமான் கொண்ட விசுவாசியின் பரிப்பூரணமான நம்பிக்கை ஆகும். இது தான் அஹ்லே சுன்னத் வஜமாஅத்தின் கொள்கையும் ஆகும்.

மேற்கூறப்பட்ட தெளிவான ஆதாரங்களை வழங்கிய பின்பும், ஒருவர் நபிகளாரின் மறைவான ஞானத்தை நிராகரிப்பதன் மூலம் நபிகளாரை இகழ்வாரேயானால், அவர் அஹ்லே சுன்னத் வஜமாஅத்தைச் சார்ந்தவருமல்ல, எந்த ஒரு மத்ஹபையும் சார்ந்தவருமில்லை, சொல்லப் போனால் அவர் முஃமினே அல்ல. அவர் செல்லும் இடத்தை வான்மறை சுட்டிக் காட்டுகின்றது.

எவனொருவன் நேர்வழி இன்னதென்று தனக்குத் தெளிவான பின்னரும் இத்தூதரை விட்டு பிரிந்து மூமின்கள் செல்லாத வழியில் செல்கின்றானோ, அவனை அவன் செல்லும் வழியிலேயே செல்லவிட்டு நரகத்திலும் அவனை நுழையச் செய்வோம். அதுவோ சென்றடையும் இடங்களில் மிக்க கெட்டதாகும்.

(அல்குர் ஆன் பாகம்-5 அத்-4 வசனம்-115)


வெளியீடு

அஹ்லே சுன்னத் வஜமாஅத்
ஒருங்கிணைப்புக் குழு

மதுரை









Comments

Popular posts from this blog

ஷெய்கனா மலேசியா வாப்பா அவர்கள் ஷேக் அப்துல்லாஹ் ஜமாலி & நூரிஷா தரீக்கா உடைய தொடர்பையும் துன்டிக்க சொல்லி எழுதிய கடிதம்

ஷெய்கனா மலேசியா வாப்பா அவர்கள் அபுதாஹீர் சிராஜி அவர்களுக்கு ஷேக் அப்துல்லாஹ் ஜமாலி உடைய தொடர்பையும் நூரிஷா தரீக்கா உடைய தொடர்பையும் துன்டிக்க சொல்லி எழுதிய கடிதம்

தப்லீக் ஜமாஅத் விஷயத்தில் தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமாவின் கள்ள மௌனம்

*தப்லீக் ஜமாஅத் விஷயத்தில் தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமாவின் கள்ள மௌனம்* *_______________________________* *தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமாவிற்கு மௌலான மௌலவி M.Kமுஹம்மத் காஷிம் மஹ்ளரி (இமாம் ஏழு லெப்பை பள்ளி - நாஹுர் ஷெஃரிப் ) அவர்கள் மற்றும் 60க்கு மேற்பட்ட உலமாக்கள் வழிகெட்ட தப்லீக் ஜமாஅத்தை வழிகெட்ட வஹ்ஹாபிய இயக்கம் என்று அறிவிக்க  வழியுறுத்தி  எழுதிய கடிதம்*  ■─➻ _தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபை இதுவரை வழிகெட்ட பி. ஜெ தவ்ஹீத் ஜமாஅத்தை எதிர்த்து குரல் கொடுத்திருக்கிறது._ *இல்யாஸ் தப்லீக் ஜமாஅத்தும் தவ்ஹீத் ஜமாஅத்தை போல் ஒர் வஹ்ஹாபிய பிரிவுதானே.* _தப்லீக் ஜமாஅத்தை ஆதரிக்கின்ற சென்னை காஃஷிபுல் ஹுதா, திருச்சி அன்வாருல் உலூம் போன்ற அரபுக் கல்லூரிகள்_ _இஸ்லாத்தில் அனுமதிக்கப்பட்ட புனித காரியங்களான_  *மவ்லித், உரூஸ்* _போன்றவற்றை கூடாதென ஃபதவா வழங்கியிருக்கிறார்கள். இந்த தப்லீக் ஜமாஅத்தை ஆதரிக்கின்ற டில்லி குதுப்கானா , பேகம்பூர், தின்டுக்கல் என்ற முகவரியில் இருந்து வெளியிட்ட கலீல் அஹ்மது கீரனூரி எழுதிய தப்லீக் ஜமாஅத்தின் குற்றசாட்டுகளும், தக்கபதில்களும் என்ற தமிழ் மொழிபெயர்ப்பு நூலில் 136 பக்கத

தமிழ்நாடு அஹ்லிஸ் ஸுன்னத் வல் ஜமாஅத் உலமா சபையின் செயற்குழு கூட்டத்தில் உலமா பெருமக்களால் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்

தமிழ்நாடு அஹ்லிஸ் ஸுன்னத் வல் ஜமாஅத் உலமா சபையின் செயற்குழு கூட்டத்தில் உலமா பெருமக்களால் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள். Download  Pdf 1. புனித ஹரமைனுஷ் ஷரீஃபைன் மற்றும் இந்தியாவின் உலமா பெருமக்களால் குஃப்ரு ஃபத்வா வழங்கப்பட்ட வழிகேடர்களான 1.குலாம் அஹ்மத் காதியானி 2.காஸிம் நானோத்தவி 3.கலீல் அஹ்மத் அம்பேட்வி 4.அஷ்ரஃப் அலி தானவி 5.ரஷீத் அஹ்மத் கங்கோஹி ஆகியோர்களும் அவர்களைப் பின்பற்றுவோரும் காஃபிர்கள் என்பதில் சந்தேகம் இல்லை. 2. நூரி ஷாஹைதராபாத்தில் ஜாமிஆ இலாஹியாத்தே நூரியா என்ற மதரஸாவை, வழிகெட்ட தேவ்பந்து வஹ்ஹாபி மதரஸாவை ஸ்தாபித்த காஸிம் நானோத்தவியின் பேரரான மௌலவி காரி தையப் காஸிமியை வைத்து நடத்திய திறப்பு விழா கல்வெட்டு ஆதாரம் (பார்க்க தர்கா இதழ் ஜனவரி - 2021) கிடைத்துள்ள படியாலும், நூரிஷா மதரஸாவின் பைலாவில் மதரஸாவை தொடர்ந்து நடத்தமுடியாமல் போனால் தேவ்பந்து அதை தத்தெடுத்துக் கொள்ளும் என்னும் ஷரத்து உள்ளது என்ற செய்தி தெரியவந்திருப்பதாலும் ஹைதராபாத் நூரிஷா தரீகாவினருக்கும், வழிகேடர்களான தேவ்பந்து வஹ்ஹாபிய முல்லாக்களுக்கும் உள்ள தொடர்பு வெளிச்சமாகியுள்ள படியாலும், மேலும் நூரிஷா தரீக்காவின்