Skip to main content

மதுரை மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபையின் முக்கிய ஃபத்வாவிற்கு தமிழ்நாடு சுன்னத் வல் ஜமாஅத் உலமா சபையின் தக்க பதில் ( ஃபத்வா )


மதுரை மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபையின் முக்கிய ஃபத்வாவிற்கு  தமிழ்நாடு சுன்னத் வல் ஜமாஅத் உலமா  சபையின் தக்க பதில் ( ஃபத்வா )










அனுப்புநர்:

நாள் :22-4-03 எம். ஸனாவுல்லாஹ், 11, பாரதியார் நவீன சிறப்பங்காடி, பெரியார் பஸ் ஸ்டாண்ட், மதுரை. பொருள்: மதுரை மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபையினரால் தரப்பட்ட பதவாவுக்கு பதில் பத்வா பெறுதல் சம்பந்தமாக.

கண்ணியத்திற்கும் மரியாதைக்குமுரிய தமிழ்நாடு சுன்னத் வல் ஜமாஅத் உலமாசபையாருக்கு அஸ்ஸலாமு அலைக்கும். நான் இந்த வராம் ஜும்ஆ தொழுகைக்காக பள்ளிவாசலுக்கு சென்றபோது அங்கேவைத்து ஒரு நோட்டீஸை தந்தார்கள். அந்த நோட்டீஸ் மதுரை மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபையினரால் தரப்பட்டிருந்த பத்வாவை ஆதாரமாகக் கொண்டு வெளியிடப்பட்டிருந்தது. அந்த பத்வாவில் "யாரஸூலல்லாஹ்! இறைவனின் பொருட்டால் நீங்கள் எங்கள் மீது கிருபை செய்யுங்கள் என்று துஆ செய்வது கூடுமா?" என்னும் கேள்விக்கு "அவ்வாறு துஆ செய்வது கூடாது ஹராம்'' என்றும், ஏனெனில் நபியவர்களுக்கு யார்மீதும் கிருபை செய்ய உரிமையோ தகுதியோ இல்லையென்றும் பத்வா தந்துள்ளனர். இது சரியா?

அடுத்து "நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு "இல்முல் கைப்" (மறைவா னவை பற்றிய ஞானம்) உண்டா ?" என்னும் கேள்விக்கு, “நபியவர்களுக்கு மறைவானவை பற்றிய ஞானம் என்பது அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாஅத்தின் நடுநிலையான பத்வாவுக்குரிய சொல்படி கிடையாது'' என்றும், நபியவர்களுக்கு மறைவான ஞானம் இருப்பதை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டுமென்ற அவசியமில்லை" என்றும், "ஒருவர் இல்முல் கைபை ஏற்றுக் கொள்ளாவிட்டால் காபிராகி விடுவார் என எவரேனும் சொன்னால் (ஒரு முஸ்லிமை காபிரென்று சொல்பவர் தானே காபிராகி விடுவார் என்னும் கொள்கை சட்டப்படி) அவ்வாறு சொன்னவர் இஸ்லாத்தை விட்டும் வெளியேறி விடுவார்” என்றும் பத்வா தந்துள்ளனர். இது சரியா?

இவ்வாறே "அவ்லியாக்களின் பெயர் சொல்லி குர்பானி கொடுப்பது கூடுமா?'' என்னும் கேள்விக்கு "அவ்லியாக்களின் பெயர் சொல்லி குர்பானி கொடுத்தால் அந்த அறுப்பு கூடாது. அந்த கறியை சாப்பிடுவது ஹராம்' என்றும் பத்வா தந்துள்ளனர். இது சரியா? தயை கூர்ந்து இம்மூன்று கேள்விகளுக்கும் பதில் பத்வா தருமாறு கேட்டுக் கொள்கிறேன்.

பதில்:

யாரஸூலல்லாஹ்! இறைவனுக்காக எங்கள் மீது கிருபை செய்யுங்கள் என துஆ கேட்பது கூடும். ஏனெனில் அல்லாஹ் அவனது வேதத்தில் நபிகளாரை "பில் முஃமினீன "ரவூஃபுன்' ரஹீம்" (சூறா-ஆல இம்ரான், வசனம்-179) என்று கூறுகிறான். இதில் ரவூஃபுன் என்பதற்கு "கிருபையாளர்'' என்பதுதான் அர்த்தமாகுமாதலால் அல்லாஹ் நபியவர்களை கிருபையாளராக படைத்திருக்கும் போது நபியவர்களிடம் கிருபை செய்யுங்கள் என்று கேட்பது குற்றமாகாது. இனி அவ்வாறு துஆ செய்வது கூடாது ஹராம் என்பதற்கு எந்த இஸ்லாமியக் கிரந்தங்களிலும் ஆதாரமில்லை. இதேபோல நபியவர்களுக்கு கிருபை செய்வதற்குரிய அதிகாரமோ தகுதியோ இல்லையென்று இவர்கள் தமது பத்வாவில் கூறியிருப்பது இவர்களின் சபை உலமாக்களின் சபையா என்னும் சந்தேகத்தை ஏற்படுத்துவதோடு இவர்கள் இஸ்லாத்தை பற்றிய சரியானதோர் தெளிவில்லாதவர்கள் என்பதையும் புலப்படுத்துகிறது.

அடுத்து நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு இல்முல் கைப் (மறைவானவற்றை பற்றிய ஞானம்) இறைவனால் அருளப்பட்டுள்ளது என்பதுதான் நபித்தோழர்கள், இமாம்கள், ஸலபுகளான முன்னோர்கள், ஃகலபுகளான பின்னோர்களின் அழுத்தமான சொல்லாகும் என்பதோடு இது குர்ஆன், ஹதீஸ், இஜ்மாஃ, கியாஸ் போன்றவற்றை கொண்டும் ஆதாரப்படுத்தப்பட்டுள்ளது.


இதுபற்றி குர்ஆனில் "அன்றி மறைவானவற்றை அல்லாஹ் உங்களுக்கு அறிவிக்க மாட்டான். எனினும் தனது ரஸூல்மார்களில் தான் விரும்பியவர்களை அல்லாஹ் தேர்ந்தெடுத்துக் கொள்வான்' என்னும் வசனத்திலும், “அவர் (நபியவர்கள்) மறைவானவைகளை (அறிவிப்பதில்) கஞ்சத்தனம் செய்பவரல்ல" என்னும் வசனத்திலும், “நாம் உம்மீது கிதாபை (குர்ஆனை) இறக்கி வைத்தோம். அதில் சொல்லப்படாதது எதுவுமேயில்லை” என்னும் வசனத்திலும், எல்லாவற்றை பற்றியும் கூறப்பட்டுள்ள அக்குர் ஆனை “ரஹ்மா னாகிறவன் குர்ஆனை உமக்கு கற்பித்தான்" என்னும் வசனத்திலும் அல்லாஹ் நபியவர்களுக்கு அனைத்து மறைவான ஞானமும் அருளப்பட்டுள்ளது என்பதை உறுதிப்படுத்துகிறான்.இவ்வாறே அல்லாமா கஸ்தலானி ரஹிமஹுல்லாஹ் அவர்கள் ஹழ்ரத் அப்துல்லாஹ் பின் உமர் ரழியல்லாஹு அன்ஹு அவர்களை கொண்டு கூறுகின்றனர். “நிச்சயமாக அல்லாஹ் உலகம் முழுவதையும் எனக்குமுன் ஆக்கி வைத்திருக்கிறான். இன்னும் நான் அதில் என்னென்ன உள்ளதோ அதையும் இனி என்னென்ன இறுதிநாள் வரை தோன்றுமோ அதையும் பார்த்துக் கொண்டிருக்கிறேன். இன்னும் உலகின் எல்லா பகுதிகளும் ஓரங்களும் எனக்கு முன்னால் எவ்வாறு இருக்கின்றதெனில் எப்படி எனது உள்ளங்கையை பார்த்துக் கொண்டிருக்கிறேனோ அப்படி" என்று கூறுகின்றனர்.


இவ்வாறே இமாம் தப்ரானி அவர்கள் ஹழ்ரத் அபூதர்தா ரழியல்லாஹு அன்ஹு அவர்களைக் கொண்டு கூறுகின்றனர். "நபியவர்கள் எங்களை எந்த நிலையில் விட்டுச் சென்றனர் எனில் ஒருபறவை தனது சிறகை விரிப்பதை கூட எங்களுக்குச் சொல்லாமல் விட்டுவிடவில்லை. அதைப்பற்றியும் எங்களுக்கு அறிவித்துத் தந்திருந்தனர்'' எனக் கூறுகின்றனர்.

இதேபோல மிஷ்காத் என்னும் நூலின் பாபுல் ஈமான் என்னும் பாடப்பிரிவில் ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலா மவர்கள் நபியவர்களிடம் இறுதிநாளை குறித்து கேட்கும்போது, அது முஹர்ரம் மாதம் என்றும், பிறை பத்து என்றும், வெள்ளிக்கிழமை என்றும் கூறப்பட்டுள்ள ஹதீஸை ஹழ்ரத் உமர் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றனர். இதேபோல நபியவர்களின் உம்மத்துக்களால் நம்பிக்கை கொள்ளப்பட்டுள்ள நரகம், சுவர்க்கம், அர்ஷு, குர்ஸி , லவ்ஹு, கலம், வானவர், ஜின்கள், ஹூருல் ஈன்கள் போன்றவையனைத்தையும் மறைவானவற்றின் ஞானத்தை கொண்டிருந்த நபியவர்களைக் கொண்டுதான் நாம் ஈமான் கொண்டிருக் கிறோம். ஆதலால் இதன்றி "நபி" என்னும் வார்த்தைக்கே "மறைவானவற்றை அறிவிப்பவர்'' என்பதுதான் அர்த்தமாகுமாதலால் நபியவர்களுக்கு மறைவானவற்றை பற்றிய ஞானம் உண்டு என்பதை விசுவாசிப்பது அவசியத்திலும் அவசியமாகும்.

இதேபோல தப்ஸீர் தப்ரியிலும் தப்ஸீர் துர்ருல் மன்ஸூரிலும் ஹழ்ரத் அப்துல்லாஹ் பின் அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹு அவர்களைக் கொண்டு அறிவிக்கப்படும் ஹதீஸொன்று காணப்படுகிறது. அதாவது, "அவர்கள் சொன்னார்கள். (குர்ஆனிலுள்ள) வலயின் ஸஅல்தஹும் என்னும் ஆயத்துக்குரிய தப்ஸீரை சொல்லும்போது, முனாபிக்கீன்களில் ஒருவன், முஹம்மத் எங்களிடம் கூறுகிறார். இன்னானுடைய ஒட்டகம் இன்னின்ன ஓடைகளில் இருக்கிறது என்று கூறுகிறார். அவருக்கு மறைவானவற்றை பற்றி என்ன தெரியும்? என்று சொன்னான். அதைக்கேட்ட இறைவன் இந்த ஆயத்தை இறக்கி அவனிடம் கூறி விடுங்கள். அல்லாஹ் ரஸூல் மற்றும் அவனுடைய ஆயத்துக்களை பொய்பிக்கிறாயா? நீ ஈமான் கொண்ட பின் காபிராகி விட்டாய் எனக்கூறுமாறு இறைவன் கூறுகிறான்.

அடுத்து வலிமார்களின் பெயரால் குர்பானி கொடுக்கலாமா என்னும் கேள்வியில் அக்கேள்வியை கேட்டவர்களும் சரி. அதற்கு பத்வா தந்தவர்களும் சரி. கேள்விக்குரிய தரத்தை புரிந்து கொள்ளாமலேயே பத்வா தந்துள்ளனர். நபிகளாருடைய காலத்திலிருந்து இன்று வரையுள்ள எந்தவொரு முஸ்லிமும் இன்னாருக்காக என்று நிய்யத்துச் செய்து அதை பிஸ்மில்லாஹி அல்லாஹு அக்பர் என்று கூறித்தான் அறுத்து வருகின்றனர். இதுவரை எந்த முஸ்லிமும் ஒரு வலியின் பெயரை அல்லது ஒரு நபியின் பெயரை சொல்லி குர்பானி கொடுத்ததாக வரலாறே இல்லை.

மேலும் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லமவர்கள் ஹழ்ரத் அலியவர்களிடம் ஒரு ஆட்டை கொண்டுவருமாறு கூற, ஆடு கொண்டு வரப்பட்ட போது நபியவர்கள் அந்த ஆட்டை இது எனது உம்மத்துக் களுக்காக என்றுகூறி அதன்பின் பிஸ்மில்லாஹி அல்லாஹு அக்பர் என்று குர்பானி செய்தனர். இந்த நடை முறையை தழுவித்தான் இன்றுவரை முஸ்லிம்கள் செயலாற்றி வருகின்றனர். ஆகையால் ஒரு வலியின் பெயராலோ அல்லது ஒரு நபியின் பெயராலோ அல்லது ஏதாவதொரு முஸ்லிமான நபரின் பெயராலோ நிய்யத்துச் செய்து குர்பானி கொடுப்பது கூடும். அல்லாஹ்வே எல்லாம் அறிந்தவன்.




Comments

Popular posts from this blog

ஷெய்கனா மலேசியா வாப்பா அவர்கள் ஷேக் அப்துல்லாஹ் ஜமாலி & நூரிஷா தரீக்கா உடைய தொடர்பையும் துன்டிக்க சொல்லி எழுதிய கடிதம்

ஷெய்கனா மலேசியா வாப்பா அவர்கள் அபுதாஹீர் சிராஜி அவர்களுக்கு ஷேக் அப்துல்லாஹ் ஜமாலி உடைய தொடர்பையும் நூரிஷா தரீக்கா உடைய தொடர்பையும் துன்டிக்க சொல்லி எழுதிய கடிதம்

தப்லீக் ஜமாஅத் விஷயத்தில் தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமாவின் கள்ள மௌனம்

*தப்லீக் ஜமாஅத் விஷயத்தில் தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமாவின் கள்ள மௌனம்* *_______________________________* *தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமாவிற்கு மௌலான மௌலவி M.Kமுஹம்மத் காஷிம் மஹ்ளரி (இமாம் ஏழு லெப்பை பள்ளி - நாஹுர் ஷெஃரிப் ) அவர்கள் மற்றும் 60க்கு மேற்பட்ட உலமாக்கள் வழிகெட்ட தப்லீக் ஜமாஅத்தை வழிகெட்ட வஹ்ஹாபிய இயக்கம் என்று அறிவிக்க  வழியுறுத்தி  எழுதிய கடிதம்*  ■─➻ _தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபை இதுவரை வழிகெட்ட பி. ஜெ தவ்ஹீத் ஜமாஅத்தை எதிர்த்து குரல் கொடுத்திருக்கிறது._ *இல்யாஸ் தப்லீக் ஜமாஅத்தும் தவ்ஹீத் ஜமாஅத்தை போல் ஒர் வஹ்ஹாபிய பிரிவுதானே.* _தப்லீக் ஜமாஅத்தை ஆதரிக்கின்ற சென்னை காஃஷிபுல் ஹுதா, திருச்சி அன்வாருல் உலூம் போன்ற அரபுக் கல்லூரிகள்_ _இஸ்லாத்தில் அனுமதிக்கப்பட்ட புனித காரியங்களான_  *மவ்லித், உரூஸ்* _போன்றவற்றை கூடாதென ஃபதவா வழங்கியிருக்கிறார்கள். இந்த தப்லீக் ஜமாஅத்தை ஆதரிக்கின்ற டில்லி குதுப்கானா , பேகம்பூர், தின்டுக்கல் என்ற முகவரியில் இருந்து வெளியிட்ட கலீல் அஹ்மது கீரனூரி எழுதிய தப்லீக் ஜமாஅத்தின் குற்றசாட்டுகளும், தக்கபதில்களும் என்ற தமிழ் மொழிபெயர்ப்பு நூலில் 136 பக்கத

தமிழ்நாடு அஹ்லிஸ் ஸுன்னத் வல் ஜமாஅத் உலமா சபையின் செயற்குழு கூட்டத்தில் உலமா பெருமக்களால் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்

தமிழ்நாடு அஹ்லிஸ் ஸுன்னத் வல் ஜமாஅத் உலமா சபையின் செயற்குழு கூட்டத்தில் உலமா பெருமக்களால் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள். Download  Pdf 1. புனித ஹரமைனுஷ் ஷரீஃபைன் மற்றும் இந்தியாவின் உலமா பெருமக்களால் குஃப்ரு ஃபத்வா வழங்கப்பட்ட வழிகேடர்களான 1.குலாம் அஹ்மத் காதியானி 2.காஸிம் நானோத்தவி 3.கலீல் அஹ்மத் அம்பேட்வி 4.அஷ்ரஃப் அலி தானவி 5.ரஷீத் அஹ்மத் கங்கோஹி ஆகியோர்களும் அவர்களைப் பின்பற்றுவோரும் காஃபிர்கள் என்பதில் சந்தேகம் இல்லை. 2. நூரி ஷாஹைதராபாத்தில் ஜாமிஆ இலாஹியாத்தே நூரியா என்ற மதரஸாவை, வழிகெட்ட தேவ்பந்து வஹ்ஹாபி மதரஸாவை ஸ்தாபித்த காஸிம் நானோத்தவியின் பேரரான மௌலவி காரி தையப் காஸிமியை வைத்து நடத்திய திறப்பு விழா கல்வெட்டு ஆதாரம் (பார்க்க தர்கா இதழ் ஜனவரி - 2021) கிடைத்துள்ள படியாலும், நூரிஷா மதரஸாவின் பைலாவில் மதரஸாவை தொடர்ந்து நடத்தமுடியாமல் போனால் தேவ்பந்து அதை தத்தெடுத்துக் கொள்ளும் என்னும் ஷரத்து உள்ளது என்ற செய்தி தெரியவந்திருப்பதாலும் ஹைதராபாத் நூரிஷா தரீகாவினருக்கும், வழிகேடர்களான தேவ்பந்து வஹ்ஹாபிய முல்லாக்களுக்கும் உள்ள தொடர்பு வெளிச்சமாகியுள்ள படியாலும், மேலும் நூரிஷா தரீக்காவின்