Skip to main content

ஷாதுலிய்யா தரீக்கத் போர்வையில் தப்லீக் வஹ்ஹாபியிஷம் நுழைந்த கதை

#விவாதம்_நடந்த_திகதி
1998 - 08 - 11,12 ம் திகதிகளில் இரண்டு நாள் விவாதம் ஒன்று நடந்தது.....

#இலங்கைக்குள்_வஹ்ஹாபிய_தப்லீக்_ஜமாஅத்_இறக்குமதியான_ஆண்டு 1952...

இவர்கள் நாங்கள் தரீக்காவாதிகள் நாங்கள் ஷாதுலிய்யா தரீக்கா என்று தான் நுழைந்தார்கள்.முதன் முதலாக இந்தியாவில் இருந்து கொழும்பு சம்மாங்கோட்டை ஜும்ஆப் பள்ளி வாயலுக்குத்தான் இவர்கள் மூட்டை முடிச்சிகளோடு வந்தார்கள்...

ஆம் இவர்களும் தரீக்கா தான்.இவர்கள் ஷாதுலிய்யா தரீக்கா என்பதையும் ஏற்று இவர்கள் மத்ஹபை பின்பற்றுகிறார்கள் என்று இலங்கைக்குள் இவர்களை சரி கண்டு ஏற்றுக்கொண்டவர்கள் மறைந்து போன மூத்த அறிஞர் பெருமக்கள்....

அன்றிலிருந்து இன்று வரை வஹ்ஹாபிய தேவபந்தி தப்லீக் ஜமாஅத்தினர்களை ஆதரித்து சரி கண்டு அவர்களும் அஹ்லுஸ் சுன்னத் வல் ஜமாஅத்து தான் அவர்களும் தரீக்கா தான் என்று தொங்கிக்கொண்டிருப்பவர்கள் ஷாதுலிய்யா தரீக்கத்தையுடையவர்களே! ( குறிப்பிட்டவர்களைத் தவிர)

அதனால் சில ஷாதுலிய்யா ஸாவியாக்களின் வழிகாட்டல் பராமரிப்பு தலைமைத்துவம் எல்லாம் தப்லீக் ஜமாஅத்தைச் சேர்ந்தவர்களாலேயே கண்காணிக்கப்படுகிறது..உதாரணமாக ஏறாவூர் ஸாவியா......

#விவாத_மாநாடு

1998 ம் ஆண்டு 8 ம் மாதம் 11,12 ம் திகதிகளில் இரண்டு நாள் விவாதம் இந்தியா #காயல்பட்டணத்தில் நடைபெற்றது...

அஹ்லுஸ் சுன்னத் வல் ஜமாஅத் Vs தேவபந்திய வஹ்ஹாபிய தப்லீக் ஜமாஅத்

அஹ்லுஸ் சுன்னத் வல் ஜமாஅத் சார்பாக தலைமை வகித்தவர்கள் சங்கைக்குரிய அல் ஆலிம் அல்லாமா மர்ஹும் S.S. கலந்தர் மஸ்தான் ரஹ்மானி (நவ்வரல்லாஹு மர்கதஹு)  ஹஸ்ரத் அவர்களும் சங்கைக்குரிய அல்லாமா அல் ஆலிம் அஷ் ஷைக் மர்ஹும் ஸைபுத்தீன் அலி பாகவி ரஹ்மானி ( நவ்வரல்லாஹு மர்கதஹு)  ஹஸ்ரத் அவர்களும் கலந்து கொண்டார்கள்.....

தேவபந்திய வஹ்ஹாபி தப்லீக் ஜமாஅத் சார்பாக காயல்பட்டணம் #ஸாவியதுஸ்_ஷாதுலிய்யா-ஷாதுலிய்யா தரீக்கத்தின் ஸாவியா தரப்பினர்கள் கலந்து கொண்டார்கள்.....

தலைப்பாக தப்லீக் ஜமாஅத்தின் ஸ்தாபகர் மௌலானா இல்யாஸ் அவர்களின் ஷைகாகிய ரஷீத் அஹ்மத் கங்கோஹி தன்னுடைய பதாவா ரஷீதிய்யா என்ற நூலில் வஹ்ஹாபிஷத்தை சரி கண்டு இப்னு அப்துல் வஹ்ஹாப் அந் நஜ்தியை சரி கண்டு எழுதி இருப்பது பற்றியது....

அதில் முக்கியமாக கலந்துகொண்டவர் மௌலவி A.M. அப்துல்லாஹ் மக்கி காஷிஃபி தேவபந்தி அவர்கள்...
விவாதத்தின் பின் ஷாதுலிய்யா தரீக்கத்தின் ஸாவியா தரப்பினர் தேவபந்திகள் மதிக்கக்கூடிய பக்கா தப்லீக் ஜமாஅத்தைச் சேர்ந்த மௌலவி கலீல் அஹ்மத் கீரநூரி யைக் கொண்டு மாநாடு ஒன்றும் நடத்தினார்கள்.....

மௌலவி அப்துர் ரஊப் பஹ்ஜி மிஸ்பாஹி அவர்களுக்கு எதிராக மாநாடு நடத்துகிறோம் வஹ்ததுல் வுஜுதுக்கு எதிராக போர்தொடுக்கிறோம் என்று 3 வருடத்திற்கு முன்னால் காலி பஹ்ஜதுல் இப்றாஹிமிய்யா கலாசாலையில் ஷாதுலிய்யா தரீக்கத்தின் கலீபாக்களால் மாநாடு ஒன்று நடந்தது.
அதில் விஷேட பேச்சாளராக அழைக்கப்பட்டவர் இதே தேவபந்திய வஹ்ஹாபி தப்லீக் ஜமாஅத்தைச் சேர்ந்த மௌலவி அப்துல்லாஹ் மக்கி அவர்கள் தான்......

அச்சமயமே நீங்கள் மாநாடு நடத்துவதென்றால் நடத்துங்கள்.வழிகேட்டை வழிகேடாக சொல்லுங்கள்.அதற்கு நாமும் ஆதரவு வழங்குவோம்.அதை ஹக்கான அஹ்லுஸ் சுன்னத் வல் ஜமாஅத் அறிஞர் பெருமக்களைக் கொண்டு நடத்துங்கள் என்று ஒரு விமர்சனத்தை #அர்_ராபிததுல்_அஷ்அரிய்யா வாட்ஸ்அப் தளத்தில் அது பற்றி பேசினேன்.
அப்துல்லாஹ் மக்கி அவர்களுடன்  தொலைபேசியூடாக 9 நிமிடங்கள் அழைத்து அவர் கொண்ட கொள்கைபற்றி நிலைப்பாடு பற்றி பேசினேன்.அந்த ரெகோடிங் இன்னும் உண்டு..
அப்படி பேசி அவரின் உண்மை முகத்தை வெளிக்காட்டினேன்.ஆனால் அஹ்லுஸ் சுன்னத் வல் ஜமாஅத்துடைய சில உலமாக்கள் முனாபிக்தனமாகத்தான் நடந்துகொண்டார்கள்..பஹ்ஜி பட்டம் பெற்று வெளியேறிய சில உலமாக்கள் சண்டை பிடித்தார்கள்.கேவலமாக திட்டினார்கள்.வழிகேட்டை உணரவில்லை.
ஆனால் நான் அல்ஹம்துலில்லாஹ் அசையவும் இல்லை.ஆடவும் இல்லை.வழிகேட்டை சொல்லி பெரும் கட்டுரை ஒன்றே எழுதினேன்......

#ஸாவியதுல்_பாஃஸியதுஸ்_ஷாதுலிய்யா_150_ம்_ஆண்டு_நிறைவு_நினைவு_விழா

நாளை 5ம் திகதி சனிக்கிழமை 6 ம் திகதி ஞாயிற்றுக்கிழமை காயல்பட்டணம் ஷதுலிய்யா தரீக்கத்தின் ஸாவியாவில் 150 ம் ஆண்டு நிறைவு நினைவு விழா நடக்கிறது.அதில் பட்டம்பெருவோர்களும் உண்டு.....

வெகுவிமர்சையாக நடக்க இருக்கும் அவ்விழாவில் பல உலமாக்கள் கலந்து கொள்கிறார்கள்.இலங்கையில் இருந்தும் சென்றிருக்கிறார்கள்.பயான் நிகழ்த்த உள்ளார்கள்.

அதில் முக்கியமாக சில உலமாக்களின் பெயரை சுட்டி அடையாளம் இட்டுள்ளேன்.

1- தேவபந்திய வஹ்ஹாபிய தப்லீக் ஜமாஅத்தைச் சேர்ந்த மேற்கூறிய அதே மௌலவி அப்துல்லாஹ் மக்கி காஷிஃபி தேவபந்தி கலந்துகொள்கிறார்கள்..

2- இலங்கையைச் சேர்ந்த ஷாதுலிய்யா தரீக்கத்தின் கலீபதுல் குலபா மௌலவி அப்துல் ஹமீத் பஹ்ஜி அவர்கள் கலந்து கொள்கிறார்கள்.

3- இலங்கையைச் சேர்ந்த கலீபதுஸ் ஷாதுலி மௌலவி முஹம்மத் பாரி ஹஸ்ரத் அவர்கள் கலந்துகொள்கிறார்கள்.

4- இலங்கையைச் சேர்ந்த மௌலவி பஸ்லான் அஷ்ரபி யமனி அவர்கள் கலந்து கொள்கிறார்கள்.

5- தேவபந்திய வஹ்ஹாபிய தப்லீக் ஜமாஅத்தின் தாருல் உலூம் மத்ரஸாவின் ஸ்தாபகர் காஸிம் நானூத்தவி என்பவரை இவர் பெரும் வலியுல்லாஹ் என்று போற்றி ரஹ்மஹுல்லாஹ் என்று போற்றிப்புகழ்ந்த,இந்திய மண்ணில் வஹ்ஹாபிஷத்தை இறக்குமதி செய்த இப்னு அப்துல் வஹ்ஹாப் அந் நஜ்தியின் கிதாபுத் தவ்ஹீத் ஐ தக்விய்யதுல் ஈமான் ஆக உர்துக்கு மாற்றிய வஹ்ஹாபி இஸ்மாயீல் திஹ்லவியையும் அவரின் தக்விய்யதுல் ஈமான் எனும் அந்த நூலையும் சரி கண்டு போற்றிப் புகழ்ந்து பேசிய தப்லீக் ஜமாஅத்தைச் சேர்ந்த மௌலவி சதீதுத்தீன் பாக்கவி அவர்களும் கலந்து கொள்கிறார்கள்...

6- இவர் சந்தேகத்தின் பார்வையில் சொல்கிறேன்....

இலங்கையைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும் என எண்ணுகிறேன். தேவபந்திய வஹ்ஹாபிய தப்லீக் ஜமாஅத்தின் இலங்கையில் தப்லீக் ஜமாஅத்தில் மிக முக்கியமான அறிமுகமான மௌலவி அப்துல் காலிக் தேவபந்தி அவர்கள் கலந்துகொள்கிறார்கள்.

இவர் நான் சொன்ன அதே தப்லீக் ஜமாஅத்தின் ஆலிம் தானா.....?
அல்லது வேறு ஆலிம் ஆ..?என்பதை சற்று பரிசீலிக்க வேண்டி உள்ளது.
நான் சொன்ன அதே ஆலிம் ஆக இருந்தால் அல்ஹம்துலில்லாஹ்.......

#விமர்சனம்

ஷாதுலிய்யா தரீக்கத்தின் ஸாவியா தரப்பினர்கள் அஹ்லுஸ் சுன்னத் வல் ஜமாஅத் என்றால் ஏன் மேற்கூறிய தேவபந்திய தப்லீக் வஹ்ஹாபிகளை பேச்சாளர்களாக அழைக்கிரீர்கள்.......??

அஹ்லுஸ் சுன்னத் வல் ஜமாஅத் என்று மார்தட்டிக் கொண்டு இந்த தேவபந்திகளோடு சேர்ந்து கொண்டு பயான் நிகழ்த்த ஒரே மேடையில் கூட்டுச் சேரும் மௌலவி அப்துல் ஹமீத் பஹ்ஜி மௌலவி முஹம்மத் பாரி ஹஸ்ரத் மௌலவி பஸ்லான் அஷ்ரபி யமனி அவர்களே #தேவபந்திய_வஹ்ஹாபிய_தப்லீக்_ஜமாஅத் பற்றி உங்கள் நிலைப்பாடு என்ன.....??

என்பதை அல்லாஹ்வைப் பயந்து வெளிப்படையாக ஹக்கை மக்களுக்கு சொல்லி உங்கள் நிலைப்பாட்டை உறுதி செய்யுங்கள்.........

ஏனெனில் உங்களில் நிறைய மக்கள் நீங்கள் எல்லாம் ஹக்கான அஹ்லுஸ் சுன்னத் வல் ஜமாஅத் என்று நினைத்துக்கொண்டிருக்கிறார்கள்......

எனவே உங்கள் நிலைப்பாட்டை தப்லீக் ஜமாஅத் பற்றி வெளிப்படையாகவே சொல்லுங்கள்.....

பேர் புகழுக்கும் பிரபல்யத்தையும் நாடாது இஃலாஸோடு செயற்பட்டு உங்கள் நிலைப்பாட்டை சொல்லுங்கள்........

ஷாதுலிய்யா தரீக்கத்தின் முரீதீன்களே!முஹிப்பீன்களே!கலீபாக்களே!
இது பற்றி உங்கள் நிலைப்பாட்டை தெளிவாக பகிரங்கமாகவே சொல்லுங்கள்...

புனிதமான ஷாதுலிய்யா தரீக்கத்திற்கு ஏன் இழிநிலையை உண்டு பன்ன வேண்டும் என்ற கேள்வியை தொடுக்கிறோம்.......

அப்படி நீங்கள் உங்கள் நிலைப்பாட்டை சொல்லிவிட்டால் ஷாதுலி நாயகத்தின் பெயரை இழுக்காமல் ஷாதுலிய்யா தரீக்கத்தை உபயோகப்படுத்தாமல் முனாபிகீன்களாக நடக்காமல் நீங்கள் தப்லீக் ஜமாஅத் என்றே சொல்லிக்கொள்ளுங்கள்.....

அப்படி நீங்கள் உங்கள் நிலைப்பாட்டை சொல்லி ஒதுங்கினால் இப்படியான விமர்சனங்கள் எல்லாம் வராதல்லவா.........

அஹ்லுஸ் சுன்னத் வல் ஜமாஅத் என்று சொல்லிக்கொண்டு முனாபிக்கீன்களாக நடக்காதீர்கள்....ஏனைய தரீக்கத்தின் முரீதீன்கள் உண்மையை உணர்ந்து ஹக்கை மட்டும் வெளிப்படையாக பேசக்கூடியவர்களாக இருங்கள்...
உலமாக்கள் பணத்திற்கும் புகழுக்கும் பதவிக்கும் பிரபல்யத்திற்கும் பொண்ணாடைக்கும் விலை போகாதீர்கள்.ஹக்கை ஹக்காக சொல்லுங்கள்...

எதிர்ப்புகள் வரும் என்ற அச்சமா......?
அல்லது உலகாதாயத்தை தேடுகிரீர்களா......?

ஆம் என்றால் அஹ்லுஸ் சுன்னத் வல் ஜமாஅத் என்ற புனிதநாமத்தை கெடுக்காதீர்கள்.தரீக்காவாதிகள் என்று மார்தட்டாதீர்கள்.....

சூஃபி நாயகம் கத்தஸல்லாஹு ஸிர்ரஹுல் அஸீஸ் அவர்கள் போல் கூரிய வாளாக நின்று பாருங்கள்.அதுவே ஹக்கை உணர்த்தும்.ஈமானின் சுவையை பெற்றுத் தரும்...வழிகேட்டையும் பிழையையும் பார்த்து மௌனம் சாதிக்காது அல்லது உலகாதாயத்தை தேடாது வீரியமாக அஞ்சாமல் வீர நடை போடும்......

எனவே மேற்குறித்த கேள்விக்கனைகளுக்கு தெளிவையும் உங்கள் நிலைப்பாட்டையும் எதிர்பார்த்தவனாக!!!!!

எத்துனை எதிர்ப்புகள் வந்தாலும் ஹக்கை ஹக்காகம் வழிகேட்டை வழிகேடாகவும் முனாபிக்கீன்களை அடையாளம் காட்டி மக்களை ஓர் நிலைப்படுத்தும் வரை இன்ஷா அல்லாஹ் ஓயமாட்டேன்.சொல்லிக்கொண்டே இருப்பேன்

மௌலவி நிஸ்வர் பாதிபி காதிரி
ஏறாவூர் இலங்கை
0094774447757

Comments

Popular posts from this blog

ஷெய்கனா மலேசியா வாப்பா அவர்கள் ஷேக் அப்துல்லாஹ் ஜமாலி & நூரிஷா தரீக்கா உடைய தொடர்பையும் துன்டிக்க சொல்லி எழுதிய கடிதம்

ஷெய்கனா மலேசியா வாப்பா அவர்கள் அபுதாஹீர் சிராஜி அவர்களுக்கு ஷேக் அப்துல்லாஹ் ஜமாலி உடைய தொடர்பையும் நூரிஷா தரீக்கா உடைய தொடர்பையும் துன்டிக்க சொல்லி எழுதிய கடிதம்

தப்லீக் ஜமாஅத் விஷயத்தில் தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமாவின் கள்ள மௌனம்

*தப்லீக் ஜமாஅத் விஷயத்தில் தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமாவின் கள்ள மௌனம்* *_______________________________* *தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமாவிற்கு மௌலான மௌலவி M.Kமுஹம்மத் காஷிம் மஹ்ளரி (இமாம் ஏழு லெப்பை பள்ளி - நாஹுர் ஷெஃரிப் ) அவர்கள் மற்றும் 60க்கு மேற்பட்ட உலமாக்கள் வழிகெட்ட தப்லீக் ஜமாஅத்தை வழிகெட்ட வஹ்ஹாபிய இயக்கம் என்று அறிவிக்க  வழியுறுத்தி  எழுதிய கடிதம்*  ■─➻ _தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபை இதுவரை வழிகெட்ட பி. ஜெ தவ்ஹீத் ஜமாஅத்தை எதிர்த்து குரல் கொடுத்திருக்கிறது._ *இல்யாஸ் தப்லீக் ஜமாஅத்தும் தவ்ஹீத் ஜமாஅத்தை போல் ஒர் வஹ்ஹாபிய பிரிவுதானே.* _தப்லீக் ஜமாஅத்தை ஆதரிக்கின்ற சென்னை காஃஷிபுல் ஹுதா, திருச்சி அன்வாருல் உலூம் போன்ற அரபுக் கல்லூரிகள்_ _இஸ்லாத்தில் அனுமதிக்கப்பட்ட புனித காரியங்களான_  *மவ்லித், உரூஸ்* _போன்றவற்றை கூடாதென ஃபதவா வழங்கியிருக்கிறார்கள். இந்த தப்லீக் ஜமாஅத்தை ஆதரிக்கின்ற டில்லி குதுப்கானா , பேகம்பூர், தின்டுக்கல் என்ற முகவரியில் இருந்து வெளியிட்ட கலீல் அஹ்மது கீரனூரி எழுதிய தப்லீக் ஜமாஅத்தின் குற்றசாட்டுகளும், தக்கபதில்களும் என்ற தமிழ் மொழிபெயர்ப்பு நூலில் 136 பக்கத

தமிழ்நாடு அஹ்லிஸ் ஸுன்னத் வல் ஜமாஅத் உலமா சபையின் செயற்குழு கூட்டத்தில் உலமா பெருமக்களால் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்

தமிழ்நாடு அஹ்லிஸ் ஸுன்னத் வல் ஜமாஅத் உலமா சபையின் செயற்குழு கூட்டத்தில் உலமா பெருமக்களால் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள். Download  Pdf 1. புனித ஹரமைனுஷ் ஷரீஃபைன் மற்றும் இந்தியாவின் உலமா பெருமக்களால் குஃப்ரு ஃபத்வா வழங்கப்பட்ட வழிகேடர்களான 1.குலாம் அஹ்மத் காதியானி 2.காஸிம் நானோத்தவி 3.கலீல் அஹ்மத் அம்பேட்வி 4.அஷ்ரஃப் அலி தானவி 5.ரஷீத் அஹ்மத் கங்கோஹி ஆகியோர்களும் அவர்களைப் பின்பற்றுவோரும் காஃபிர்கள் என்பதில் சந்தேகம் இல்லை. 2. நூரி ஷாஹைதராபாத்தில் ஜாமிஆ இலாஹியாத்தே நூரியா என்ற மதரஸாவை, வழிகெட்ட தேவ்பந்து வஹ்ஹாபி மதரஸாவை ஸ்தாபித்த காஸிம் நானோத்தவியின் பேரரான மௌலவி காரி தையப் காஸிமியை வைத்து நடத்திய திறப்பு விழா கல்வெட்டு ஆதாரம் (பார்க்க தர்கா இதழ் ஜனவரி - 2021) கிடைத்துள்ள படியாலும், நூரிஷா மதரஸாவின் பைலாவில் மதரஸாவை தொடர்ந்து நடத்தமுடியாமல் போனால் தேவ்பந்து அதை தத்தெடுத்துக் கொள்ளும் என்னும் ஷரத்து உள்ளது என்ற செய்தி தெரியவந்திருப்பதாலும் ஹைதராபாத் நூரிஷா தரீகாவினருக்கும், வழிகேடர்களான தேவ்பந்து வஹ்ஹாபிய முல்லாக்களுக்கும் உள்ள தொடர்பு வெளிச்சமாகியுள்ள படியாலும், மேலும் நூரிஷா தரீக்காவின்