*பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம். நஹ்மதுஹு வ நுஸல்லீ அலா ரசூலிஹில் கரீம்.*
*நியாயத் தராசு*
*வழங்கும்...*
*@திரைக்குப் பின்னால்!@*
☪☪☪
*முதலாவது பதிவு :*
*(பொய்யைப் பகிரும் வேலை)*
அன்பான கண்ணியமான பாகவி உலமாக்களே எனது ஆன்மீக தந்தை அமீரே ஷரீயத் முன்னாள் பாக்கியாத்துஸ்ஸாலிஹாத் அரபுக்கல்லூரியின் பேராசிரியர் மர்ஹும் யஃகூப் ஹஜ்ரத் அவர்கள் கடந்த 1972 அல்லது 1973 ல் கல்லூரியின் முதல்வர் Falfari ஹஜ்ரத்கிப்லா(ரஹ்) அவர்கள் முற்கால பாக்கியாத்துஸ்ஸாலிஹாத்தின் முப்fதிகள் மார்க்க ரீதியாக வழங்கிய பfத்வாக்களை ஒன்று சேர்த்து ஒரு நூலாக வெளிவந்தால் அது முஸ்லிம் சமுதாயம் பலன் அடையுமென்ற நோக்கில் அந்த பொருப்பை நமது அமீரே ஷரீஅத் மர்ஹும் அவர்களிடம் ஒப்படைத்து அதை முறையாக தர்தீப் செய்து அந்த நூலுக்கு ப்Fத்தாவா பாக்கியாத் யென்று பெயரிட்டு அந்த நூலை கல்லூரியின் பட்டமளிப்பு விழாவில் கர்நாடக அமீரே ஷரீஅத் மர்ஹும் அபூஸவூத்(ரஹ்)அவர்களின் முன்னிலையில் இந்த நூல் வெளியிடப்பட்டது என்ற செய்தி முன்னாள் பாக்கியாத்தின் பேராசிரியர் கான் பாக்கவி அவர்களுக்கு தெளிவாகவே தெரியும் "கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்" அந்த நேரத்தில் பாக்கியாத்தின் பரேலிவியத்தின் சிந்தனையுள்ள சில உலமாக்கள் அதை வெளிவராது தடுக்க முயற்சி செய்தார்கள் தோல்வியடைந்தது மட்டுமல்ல கல்லூரியில் இருந்து வெளியாகிவிட்டார்களென்பதும் கான் பாகவி அவர்களுக்குத் தெரியும். இதிலே மிக ஆச்சரியப்படக்கூடிய விஷயம் என்ன வெனில் நமது அமீரே ஷரீஅத் அவர்களிடம் கல்வி பயின்ற சில பாக்கவிகள் நமது அமீரே ஷரீஅத் அவர்கள் வஹ்ஹாபி போக்குள்ளவர்கள் என்று இன்றும் கூறுவதை என்னுடைய காதால் கேட்டுள்ளேன் என்னை பொறுத்த மட்டிலும் இன்று தமிழக உலமாக்களில் உண்மையான அஹ்லுஸ்ஸுன்னத் வல் ஜமாஅத்தின் கொள்கையில் உறுதியாக இருந்தவர்கள் நமது அமீரே ஷரீஅத் அவர்கள்தான் என்பதை தமிழக பாக்கவிகள் புரிந்து கொள்ளவேண்டும்.
Your's faithfully
Hafiz Qari M Md.Yousuff Baqavi.Ex Imam Masjidh Jame Singapore.
*-------------*
☪
*மேலே உள்ள*
*பொய்த் தகவலை*
*தோலுரித்துக் காட்டும்*
*உண்மைத் தகவல் கீழே...!*
*--------------*
☪☪☪
*இரண்டாவது பதிவு :*
*(உண்மையை தோலுரித்துக் காட்டும் பதிவு).*
*மரணித்தவர்களின் நன்மைகளை பேசுங்கள் குறைகளை பேசாதீர்கள்* என்கிற நபி மொழி காதில் ஒலித்துக் கொண்டிருப்பதால் உங்களின் அமீரே ஷரீஅத் அவர்களை பற்றி வரும் செய்திகளுக்கு பதில் பதிவுகள் இடாமல் " விவாதம் வேண்டாம் . தங்களின் பதிவை அழித்து விடுங்கள் " என்கிற ஒற்றை வார்த்தையோடு அட்மின்கள் அமைதி காக்கிறார்கள் என்று நினைக்கிறேன்...
ஆனால் தாங்கள் உங்களின் யாகூப் ஹல்ரத் அவர்களின் பெருமையை பேசுவதோடு நிறுத்தாமல் "பாக்கியாத் ஃபத்வா" விஷயத்தில் எங்களின் மூத்த உஸ்தாத்மார்களை கேவலமாகவும் , அவர்கள் தந்திரம் செய்தார்கள் அது பலிக்காமல் வெளியேற்றப் பட்டார்கள்.. என்கிற கடுமையான வார்த்தைகளில் பதிவை இட்டு அதை அட்மின்கள் அழிக்க சொன்ன பின்பும் அது அழிக்கப் படாமல் இருப்பதால் அதன் உண்மைத் தன்மை தளத்தில் உள்ள பாகவிகள் தெரிய வேண்டும் என்று இதை பதிவு செய்கிறேன் ...
*தென்னிந்தியாவின் மூத்த முன்னோடி மதரஸாவான , தாய்க்கல்லூரி என்று பெயர் பெற்ற பாக்கியாத் என்கிற ஓர் சுன்னத் ஜமாஅத் கொள்கை* கொண்ட நிறுவனத்தை நீங்கள் தூக்கி பிடிக்கும் இந்த *யாகூப் விஷாரமி* பணம் படைத்த ஒரு சிலருடன் கூட்டணி அமைத்துக்கொண்டு சன்னம் சன்னமாக சிதைத்த மோசமான வரலாற்றுக்கு சொந்தக்காரர்.
அப்படித்தான் பாக்கியாத் ஃபத்வா வின் விஷயத்திலும் தன் குள்ள நரி தந்திரத்தை இவர் காட்டினார் .
*அன்றைய முஸ்லிம்களிடையே, ஏன்
இன்றும் கூட "பாக்கியாத் ஃபத்வா" விற்கென தனி அடையாளம் தமிழக முஸ்லிம்கள் இடையே உண்டு...*
ஆனால் அந்த புகழ் பெற்ற ஃபத்வாக்கள் தன் வஹ்ஹாபிஸ மஸ்லக்கிற்கு மாற்றமாக ... குறிப்பாக பல ஃபத்வா க்கள் சுன்னத் ஜமாத் கொள்கைக்கு ஆதரவாக இருப்பது இந்த யாகூப் விஷாரமியின் கண்களை உறுத்தியது...
எனவே சில பணம் படைத்த நிர்வாகிகளின்..? ஆதரவோடு அஃலா ஹலரத் அவர்களின் ஃபத்வாக்களின் உண்மைத்தன்மையை மறைத்து சில உள்ளடி வேலைகளை இவர் செய்து தன் வஹ்ஹாபிச மஸ்லக் கிற்கு தோதுவாக அதை மாற்றம் செய்து 24.04.1988 அன்று நடை பெற்ற பாக்கியாத்தின் பட்டமளிப்பு விழாவில் தமிழில் மொழி பெயர்க்கப்பட்ட *பாக்கியாத் ஃபத்வா தமிழ் மொழி பெயர்ப்பு* என்ற புத்தகத்தை வெளியிட்டார்கள் .
வெளியிடப்பட்ட இந்த "ஃபத்வா பாக்கியாத்" என்ற புக் உண்மையான மொழிபெயர்ப்பு அல்ல மாறாக உட் சொருகளும், தவறான அர்த்த மாற்றங்களும் உடையவை என்பதற்கான ஆதாரம் என்ன தெரியுமா..?
இதுபற்றி முஸ்லிம் லீக் தலைவர் அப்துல் சமத் அவர்கள் 15/09/1988 மணிச்சுடர் இதழில் பாக்கியாத் பெயரால் மோசடி பிரசுரம் என்ற தலைப்பிட்டு இந்த ஃபத்வா பாக்கியாத் குறித்து மதிப்புரை எழுதி இருக்கிறார்கள்.
நீங்கள் சொல்வது போல அதில் ஃபத்வா வை பற்றியோ, யாகூப் ஹழ்ரத் பற்றியோ புகழ்ந்தெல்லாம் எழுதப்படவில்லை .. மாறாக *"அஃலா
ஹல்ரத் காலமாகி அரை நூற்றாண்டுகளுக்கு மேலாகி விட்ட நிலையில் பாக்கியாத் பதிவு ஏட்டில் உள்ள சுமார் 375 ஃபத்வா களை மட்டும் ஒரு குறிப்பிட்ட மஸ்லக்கை பின் பற்றும் குழப்பவாதிகள் சிலர் தந்திரமாக தங்களின் கொள்கைகளை உட் புகுத்தி வெளியிட்டிருக்கிறார்கள்"..* என்கிறது அவர்களின் மதிப்புரை..
ஃபத்வாக்கள் வெளியிடப்படும் முன் அது முதல்வர் ( அப்துல் ஜப்பார் ஹழ்ரத்) அவர்களின் அனுமதியையோ பேராசிரியர்களின் அனுமதியை யோ பெற்றதாகவும் தகவல் இல்லை ... என்றும் இது மிகப்பெரும் மோசடித் தனத்தொடு வெளியிடப் பட்ட ஃபத்வா.. என்று மணிச்சுடர் பத்திரிக்கையின் உரிமையாளரான அப்துல் ஸமத் அவர்கள் கடும் கண்டனத்தை தன் இதழில் பதிவு செய்தார்கள் .
இவரது தந்தை யார் தெரியுமா..? திருக்குர்ஆனை முதன்முதலாக தமிழாக்கம் செய்த அப்துல் ஹமீத் பாகவி அவர்கள் ஆகும்
*பாக்கியாத்தில் ஓதியவர்கள் மட்டுமல்ல .. அவர்களின் வாரிசுகளின் ரத்தத்தில் கூட பாக்கியாத்தின் பிரியம் இருக்கும் என்பதற்கான உதாரணம் அது*.. அந்த பிரியத்தினால்தான் .. தன் பெயரில் எழுதாமல் *பாகவியின் மைந்தன்* என்ற பொருள்படும் *இப்னுல் பாகவி* என்ற பெயரில் அப்துஸ்ஸமத் அவர்கள் இந்த ஃபத்வாவுக்கு எதிரான கடுமையான பதிவை தன் இதழில் வெளியிட்டு இருந்தார்கள் இதுதான் உண்மை ..
பாக்கியாத்தின் மஸ்லக் என்ன ? என்பதற்கு பல்லாயிரக் கணக்கான பாகவிகள் உயிருள்ள சாட்சிகளாக வெளியுலகில் உலா வருகிற போது சூரியனுக்கு டார்ச் அடித்து வெளிச்சம் காட்டிய கதையாக இந்த யாகூப் விஷாரமி என்கிற பெரியவர் பாக்கியாத்தின் மஸ்லக் என்பது இதுதான் என்று ஒரு வஹ்ஹாபிஸ
மாயத் தோற்றத்தை தன் சூழ்ச்சியின் மூலம் ஏற்படுத்த முயன்றிருக்கிறார் என்பதே பாகவிகள் அறிந்த உண்மை ..
தமிழக மக்களும்,மற்ற பாகவிகளும் அரைத்தூக்கத்தில் தஃலீம் கேட்பவர்களை போல் எதைக்கூறினாலும் ஏற்றுக் கொள்வார்கள்.. என இவர்கள் நினைத்தது நடைபெறவில்லை .
*"பெரிய மனிதர்கள்" என்கிற போர்வையில் இருந்து கொண்டு ஓர் சிறந்த ஸ்தாபனத்தை ஒரு சிலருடன் கூட்டணி அமைத்துக் கொண்டு சிதைத்ததில் இவரின் பங்கு பாகவிகளால் மன்னிக்க முடியாதது ..*
ஏதோ இந்த யாகூப் ஹழ்ரத் தான் உண்மையான சுன்னத் ஜமாஅத்தின் அடையாளம் என்பது போல் நீங்கள் பதிவிட்டிருப்பது நகைப்புக்குறியது ...
ஏனென்றால் தமிழகத்தை மாசு படுத்திய வஹாபிஸ சாத்தான்களுக்கு ஆரம்ப கால ஆசிர்வாதம் வழங்கியதோடு மட்டுமல்லாமல் தன் சென்னை மதரஸா வில் அவர்களை அரவனைத்தவர்களே இவர்கள்தான் என்பதை இந்த சமூகம் மறக்காது ..
*இவர் பாக்கியாத்திற்கு செய்த துரோகத்தை அறிந்த உண்மையான பாகவிகள் யாரும் இந்த பெரிய மனிதரை தூக்கி பிடிக்க மாட்டார்கள் . அப்படி பெருமை பேசி இந்த பெரியவரை தூக்கி பிடிப்பவர் உண்மை பாகவி யாக இருக்க முடியாது என்பதே உண்மை .*
*-------------*
*By :*
*நியாயத் தராசு,*
*+91 86675 20683,*
*10/02/2019///Sun.*
*--------------*
*@*
*நியாயத் தராசு...*
*மெய்யையும்*
*பொய்யையும்*
*பிரித்தறிந்து*
*பிறர்க்குத் தருமே!!!*
*---------------*
Comments
Post a Comment