Skip to main content

சுன்னத் ஜமாத் கோட்டையான சித்தார்கோட்டையை சீரழிக்க துடிக்கும் அன்வாருஸ்ஸுப்பா

*"சுன்னத் ஜமாத்" கோட்டையான சித்தார்கோட்டையை சீரழிக்க துடிக்கும்  "அன்வாருஸ்ஸுப்பா"*

    ✿•┈┈•┈┈•⊰✿⊱•┈┈•┈┈•✿
*ஹுத் ஹுத் பறவையின்                   எச்சரிக்கை ரிப்போர்ட் ..*
                  *( 1 )*
    ✿•┈┈•┈┈•⊰✿⊱•┈┈•┈┈•✿

ராமநாதபுரத்தில் இருந்து சுமார் 13 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக்கிறது "சித்தார்கோட்டை" எனும் சிற்றரசன் கோட்டை....
சித்தார்கோட்டை மற்றும் அதனைச் சுற்றியுள்ள "வாழுர்" போன்ற ஊர்களிலும் பெருவாரியாக வாழும்  முஸ்லிம்கள் மீலாத், மௌலூத், கந்தூரி, என சுன்னத் ஜமாஅத் கொள்கையுடன் ஒற்றுமையுடன் வாழ்ந்து வருகின்ற அழகிய ஊர் அது...

*அதற்கு காரணம்... பல வலிமார்களின் தர்ஹாக்கள் இவ்வூரைச் சுற்றிலும் அமைந்திருப்பது இவர்களின் சுன்னத் ஜமாஅத் கொள்கை பிடிப்பிற்கான ஆதாரம்.... அதுமட்டுமல்ல... "இன்றைய சித்தார்கோட்டைக்கு" ஆரம்பத்தில் "சிற்றரசன் கோட்டை" என்று பெயர் வைத்தவர்களே "கீழக்கரை பல்லக்கு வலியுல்லாஹ்" (ரஹ்) அவர்கள்தான்...*

இப்படி ஊரிலும் , உணர்விலும் சுன்னத் ஜமாத்தின் கோட்டையாக திகழ்கிற சித்தார்கோட்டையின் அனைத்து பள்ளிகளிலும் ஆரம்ப காலத்தில் புரவாச்சேரி ஜுபைர் ஹழ்ரத் அவர்களின் மக்தப் பாடத்திட்டமும் , தற்போது "ரவ்லாத்துள் ஜன்னா" பாடத்திட்டமும் அழகிய முறையில் இன்றுவரை நடத்தப்பட்டு வருகிறது...

பதினைந்து வருடங்களுக்கும் மேலாக அங்கு இமாமாக சிறப்பாக பணியாற்றி வருகிற மூத்த ஆலிம் பெருந்தகை மதரஸா மாணவர்களையும் ஊர் மக்களையும் வைத்து வாரம் தவறாமல் ராத்தீப் மஜ்லிஸ், திக்ரு மஜ்லிஸ் மீலாது,  மௌலூது என முன்னோர்களின் அழகிய சுன்னத் ஜமாத் பாரம்பரிய நிகழ்வுகளை இன்றும் அங்குள்ள பள்ளிகளில் தொடர்ந்து நடத்தி வருகிறார்கள்...

*"அன்வாருஸ் ஸுஃபா" என்கிற வஹாபிஸம்..*

சுன்னத் ஜமாத்தின் கோட்டையாக திகழ்கிற சித்தார் கோட்டை எனும் அழகிய தேன்கூட்டை "அன்வாருஸ் ஸுஃபா" என்கிற வஹாபிஸ கல்லெறிந்து கலைக்கும் முயற்சியில் இப்போது அங்கு களமிறங்கி இருக்கிறது  "அன்வாருஸ் ஸுஃபா" என்கிற வஹாபிய கூட்டம்....

எங்கெல்லாம் சுன்னத் ஜமாத் பள்ளிகள் இருக்கிறதோ அங்கெல்லாம் களமிறங்கி தன் வஹாபிய கொள்கையான ஸுஃபாவை வன்முறையாக திணிப்பது அவர்களுக்கு கைவந்த கலை..

அப்படித்தான் இங்கும் தன் வழக்கமான நயவஞ்சக சூழ்ச்சியுடன் இமாமை அணுகாமல் அங்குள்ள தப்லீக் அமீர்சாப்களின் உதவியுடன் பள்ளியின் நிர்வாகத்தை அணுகி ஜும்மா பயாணுக்கு அனுமதி கேட்டு ராம்நாட்டின்  ஸுஃபா முஆவின் ஆன பாரதிநகர் இமாமை முதலில் சித்தார்கோட்டை பெரிய பள்ளியில் களமிறக்கி இருக்கிறது இந்த "ஸுஃபா" டீம்"....

ஆனால் பக்கா சுன்னத் ஜமாத்தின் கோட்டையான சித்தார்கோட்டையில் ஸுஃபா பற்றிய முஆவினின் பேச்சு எடுபடாமல் போக... அங்கிருந்த இமாம்களும்... வந்தவர்களிடம் ஸுஃபா பாடத்திட்டம் "வஹாபிஸ கொள்கை உடையது" என்று அன்வார் ஸுஃபா பாடத்திட்டத்தின் சில  பக்கங்களையும் பள்ளி நிர்வாகிகளிடம் காட்டியிருக்கிறார்கள்...

தங்களின் திட்டம் பலிக்கவில்லை.. என்பதை உணர்ந்த "ஸுஃபா டீம்" அடுத்து பலம் வாய்ந்த ஒருவரை களமிறக்கினால்தான் நம் சூழ்ச்சி வெற்றிபெறும்... என்பதை புரிந்து ஸுஃபாவை உள்ளே நுழைக்க இவர்களால் களமிறக்கப்பட்ட பெரிய மனிதர் யார்.. என்று தெரியுமா...?  இரண்டு எழுத்தில் தன் பெயரை *பொருத்தமாய்* வைத்திருக்கும்  கடந்த மாநில சபையின் முன்னாள் செயலாளர் தான் அந்த நல்ல மனிதர்..?

*பண பலத்தில் சிக்கிய ஆளுமை...*

தமிழக பள்ளிவாசல் முழுவதும் தன் பாடத்திட்டத்தை நிர்ப்பந்தமாக உள்ளே புகுத்தி தமிழகத்தின் வருங்கால நம் சந்ததிகளை வஹாபிஸ கொள்கையை உடையவர்களாக மாற்ற துடிக்கும் இந்த ஸுஃபாகாரர்கள் தன் சூழ்ச்சி பலிக்காத இடங்களில்  தமிழகத்தின் பெரும் ஆளுமைகளை தன் பண பலத்தால் வசியப்படுத்தி, அடிமைப்படுத்தி, அவர்களை தங்களின் காரியங்களை செயல் படுத்திக் கொள்வதற்காக பயன்படுத்திக் கொள்வதுண்டு..

சென்னை போன்ற பெருநகரங்களில் கூட இவர்களின் பண பலத்தில் சிக்கிய பல ஆளுமைகளின் வரலாறை இதற்கு முன் பல கட்டுரையில் *ஹுத் ஹுத்* உங்களுக்கு அடையாளப்படுத்தி இருக்கின்றது....

அதேபோன்று சித்தார் கோட்டையில் தங்களின் முயற்சி வெற்றி பெற அடுத்தகட்ட முயற்சியாக அங்கு களமிறக்கப்பட்டவர்தான் கடந்த மாநில சபையின் முன்னாள் செயலாளர்...

இவரால் சித்தார் கோட்டை பள்ளிவாசல்களில் அடுத்தடுத்த ஜும்மா பயான்களும், அதனைத் தொடர்ந்து அன்று மாலையே பெண்கள் பயான் நடைபெறுகிறது... அவரின் பேச்சின் சுருக்கத்தை உங்களுக்கு நான் சொல்லி விடுகிறேன்...

"தமிழக முஸ்லிம்களிடம் தீனும் , மார்க்கமும் வளர முக்கிய காரணம் தப்லீக்தான்... இன்று அந்த தப்லீக்கை ஆலிம்களும் , சமூகமும் புறக்கணித்துக் கொண்டிருப்பதால் பல இயக்கங்களும் , மார்க்கத்தில் குழப்பமும்  உருவாகி சமூகம் பிளவுபட்டு கிடக்கிறது.".. எனவே இந்த  "அன்வாருஸ் ஸுஃபா " பாடத்திட்டம் உங்கள் குழந்தைகளை , அடுத்த தலைமுறையை சிறந்த முஸ்லிம்களாக வாழ வைக்கும் .." என்று  "அன்வாருஸ் ஸுஃபா " வின் பெருமைகளை மட்டுமே ஜும்மா பயான், மற்றும் பெண்கள் பயானில்    அள்ளித்தெளித்து... கொடுத்த காசுக்கு வஞ்சகமில்லாமல் பேசி முடிக்கிறார் அந்த இரண்டு எழுத்து மௌலவி...

அந்தப் பள்ளி நிர்வாகமும், சில விஷயம் தெரிந்த  வயதில் முதிர்ந்த சுன்னத் ஜமாத் பெரியவர்களும்  "அன்வாருஸ் ஸுஃபா "  வஹ்ஹாபிய கொள்கை உடைய பாடத்திட்டம் அல்லவா..? என்று கேட்க இதை ஏற்கனவே எதிர் பார்த்து இருந்த அந்த  இரண்டு எழுத்து முன்னாள் செயலாளர்.... தான் பதவி வகித்த போது இந்த "அன்வாருஸ் ஸுஃபா "  விற்கு  அனுமதி வழங்கிய மாநில சபையின் முத்திரையிட்ட அனுமதி கடிதத்தை காட்டி "பார்த்தீர்களா...! எங்கள்  ஜமாஅத்துல் உலமா சபையே இதற்கு அனுமதி வழங்கியிருக்கிறது" என்று காட்டியிருக்கிறார்...

*"அன்வாருஸ் ஸுஃபா "  என்கிற வஹாபிஸ கூட்டத்தின் உண்மை அடிமை விசுவாசி தான் என்பதை காட்ட இவர் செய்த இன்னொரு குள்ளநரி தந்திரம் என்ன தெரியுமா....?*

*இவர் சபையின் செயலாளராக இருந்த ஆரம்ப பொழுதில் அதாவது 2013ல் எழுதிக்கொடுத்த சபையின் லட்டரில் உள்ள பழைய தேதியை மாற்றி இன்றைய மாநில சபை பதவியேற்பதற்கு 20 நாட்களுக்கு முன் உள்ள தேதியை அதாவது 2017 ஆகஸ்ட் மாதம் கொடுத்தது போல் புதிதாக பதிவிட்டு சமீபகால அனுமதி கடிதம் போல புதுப்பித்து அதை அங்குள்ள நிர்வாகிகளிடம் காட்டியிருக்கிறார்..*

சித்தார் கோட்டையின் இமாம்கள் இந்த இரண்டெழுத்து முன்னாள் செயலாளரிடம் " இப்படி ஒரு நாடகத்தோடு இந்த  "அன்வாருஸ் ஸுஃபா " வை உட்புகுத்த வேண்டிய அவசியம் என்ன...? உங்களிடம் உண்மை இருந்தால் முறையாக அதை கொண்டுவர முயற்சிக்க வேண்டியது தானே.. நீங்கள் செய்வதை எல்லாம் பார்க்கும் போது இங்கு வற்புறுத்தலாக , வன்முறையாக அல்லவா "அன்வாருஸ் ஸுஃபா " வை நுழைப்பது போல் தெரிகிறது" என்று கேட்க "நாங்கள் முறையாகத்தான் நடந்துகொள்கிறோம் மவுலானா"... என்று தேன் தடவி அவர் கூற... "அப்படியானால் நீங்கள் முதலில் இங்குள்ள இமாம்களை அல்லவா இதற்கு முதலில் அணுகியிருக்க வேண்டும்...
எங்களிடம் ஆலோசனை கேட்காமல் , எங்களை அணுகாமல் இங்குள்ள அமீர்சாப்கள் பிடித்து நிர்வாகிகளை அணுகுகிறீர்களே .... மாபெரும் ஆலிம்களின் சமூகத்திற்கு மாநில செயலாளராக பொறுப்பு வகித்த நீங்கள் இப்படி ஒரு கீழ்த்தரமான வேலையைச் செய்வது உங்களுக்கே அசிங்கமாக தெரியவில்லையா"...? என்று கேட்டிருக்கிறார்கள்..

"சரி .. முன்னாள் மாநில சபையின் அனுமதி லட்டரை கொண்டு வந்திருக்கிறீர்களே.. புதிய மாநில சபை பதவி ஏற்று இரண்டு வருடங்கள் ஆகிறது.. இன்றைய மாநில சபையின் அனுமதி கடிதம் காட்டுங்கள்"... என்பதற்கு தலையை சொறிந்து விட்டு வெளியேறி இருக்கிறார்கள்... இந்த முன்னாள் செயலாளரும் அவருடன் வந்த " ஸுஃபா "
டீமும்..

*படைத்தவனுக்கு மட்டுமே அடிபணிய வேண்டும்... என்று சமூகத்திற்கு சொல்லிக்கொடுக்கும் ஆலிம்களில் சிலர் பணத்திற்கு அடிபணிந்து இதுபோன்ற வஹாபிஸ "ஸுஃபா "  க்களிடம் அடிமையாகி போவதை நினைத்து ஆலிம் சமூகமே வெட்கப்பட வேண்டியிருக்கிறது..*

காரைக்குடியில் பெரிய பள்ளியின் தலைமை இமாமாக பணியாற்றிக் கொண்டிருக்கும் கண்ணியம் நிறைந்த  இரண்டெழுத்து நாயகர் தன் பள்ளியின் ஜும்மாவைக் கூட விட்டுவிட்டு இந்தப் சித்தார்கோட்டை வந்து "அன்வாருஸ் ஸுஃபா " விற்காக கொடி பிடித்துக் கொண்டு நிற்கிறார் என்றால்.... இந்த வஹ்ஹாபிய சாத்தான்களிடம் சிக்கியிருக்கும் மற்ற சாதாரண இமாம்களின் நிலை என்ன...? என்பதை கொஞ்சம் இன்றைய மாநில சபையின் பொறுப்புதாரிகள் உணர வேண்டும்..

*சித்தார் கோட்டையில் பதினைந்து வருடங்களுக்கும் மேலாக மக்களிடம் நல்ல பெயருடன் சிறப்பான இமாமாக பணிபுரிந்து வரும் அந்த இமாம் இன்று இந்த "அன்வாருஸ் ஸுஃபா " அங்கு ஏற்படுத்திய குழப்பத்தால் அங்கு இருப்பதா..? வேண்டாமா..? என்கிற நிர்பந்த நிலைக்கு அவர்களால் இன்று  ஆளாகியிருக்கிறார் என்றால் .... பேரன் பேத்திகளுடன் நிம்மதியான ஒரு வாழ்க்கையை சித்தார்கோட்டை வாழ்ந்து வந்த அந்த இமாமின் வாழ்க்கை இன்று குளத்தில் எறிந்த கல்போல் நிம்மதியற்று இருக்கிறதே...*

ஏற்கனவே இந்த   "அன்வாருஸ் ஸுஃபா "வால் அலைக்கழிக்கப்பட்ட இமாம்களின் பட்டியல்கள் தமிழகத்தில் அதிகரித்து வரும் சூழலில் இதோ சித்தார்கோட்டை பள்ளியின் இமாம்களும் அவர்களின் சூழ்ச்சியில் சிக்கி நிம்மதியற்று இருக்கிறார்கள்...

சித்தார்கோட்டை மட்டுமல்ல... இதனை தொடர்ந்து இவர்களின் சூழ்ச்சி வலை வேதாரண்யம் அருகில் *தோப்பு* கள் நிறைந்த *துறை* முகத்தைக் கொண்ட இஸ்லாமிய சமூகம் நிறைந்திருக்கும் ஊரிலும் இப்போது இந்த "அன்வாருஸ் ஸுஃபா " என்கிற வஹாபிஸ கூட்டம் கால்பதிக்க பெரும் முயற்சிகளிலும், சூழ்ச்சிகளும் ஈடுபட்டிருப்பதாக அங்குள்ள மூத்த ஆலிம் பெருமக்கள் வருத்தத்தோடு கூறும் செய்திகளை...  இன்றைக்கு தமிழக ஆலிம்களுக்காக பல நல்ல திட்டங்களை செய்துவருகிற மாநில  சபையின் பொறுப்பில் இருக்கும் மிகச்சிறந்த தலைமைகள் இவர்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுப்பது காலத்தின் அவசியமான ஒன்றாக இருக்கிறது...

*இன்று சித்தார்கோட்டை, நாளை வேதாரண்யம், அடுத்து தேரிழந்தூர்... என்று இவர்களின் வஹாபிஸ வலைகளை ஸுஃபாவின் மூலம் விரித்துக்கொண்டே செல்வதை கண்டும் காணாமல் இருப்போமானால் நம் தமிழக முஸ்லிம்களின்  வருங்கால சந்ததி சுன்னத் ஜமாத் கொள்கையிலிருந்து காணாமல் போவது மட்டுமல்ல... கண்ணியமிக்க இமாம்களின் வாழ்க்கையும் இவர்களால் நிம்மதியற்று போய் விடும் மாபெரும் அபாயம் இன்று தமிழகத்தில் நிலவிக் கொண்டிருப்பதை இன்றைய மாநில உலமா சபை உணர வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது .....*

*பூனைக்கு யார் மணி கட்டுவது..?*

இவர்கள் இப்படியே ஒவ்வொரு மாவட்டமாக தங்களின் வஹாபிஸ வேர்களை "அன்வாருஸ் ஸுஃபா "என்கிற பாடத்திட்டத்தின் மூலம் புகுத்த நினைக்கிற இந்த வஹாபிஸ கூட்டத்திற்கு மணி கட்டுவது எப்போது..?

தங்களின் பாடத்திட்டத்தை ஏற்றுக் கொண்டால் அதே இடத்தில் தொடர்ந்து வேலை... இல்லை என்றால் நீங்கள் கால் நூற்றாண்டை கடந்து அங்கு இமாமத் பணியில் இருந்தாலும் உங்களை அப்புறப்படுத்திவிட்டு எங்கள் "அன்வாருஸ் ஸுஃபா "வை வேறு ஆலிமை கொண்டு வந்து வைத்து அங்கே நிலை நிறுத்துவோம் ... என்று பல ஆலிம்களின் எதிர்காலத்தையே கேள்விக்குறியாக்கி கொண்டிருக்கிற இவர்களின் சூழ்ச்சியில் ... ஆலிம்களின் நலனில் அக்கறை கொண்டிருக்கிற இன்றைய ஜமாஅத்துல் உலமா சபை தகுந்த எச்சரிக்கையும் நடவடிக்கையும் எடுக்காத பட்சத்தில் எங்கள் வாழ்வையும், வாழ்வாதாரத்தையும் நாசப் படுத்துகிற இவர்கள் விஷயத்தில்  ஜமாஅத்துல் உலமா சபை நடவடிக்கை  எடுக்க ஏன் தயக்கம் காட்டுகிறது..? என இவர்களால் பாதிக்கப்பட்ட நூற்றுக்கணக்கான இமாம்களுக்கு மத்தியில் மெதுவாக ஒலித்துக் கொண்டிருக்கும் அந்த குரல் நாளடைவில் பெருங் கூட்டமாய் ஓங்கி ஒலிக்கும்  நாள் வெகு தூரத்தில் இல்லை...

*ஹுத் ஹுத் சொல்வது போல் "இமாம்கள் கேவலப்படுத்த படுகிறார்கள்... பணி நீக்கம் செய்யப்படுகிறார்கள்"... என்பதெல்லாம் பொய்யான தகவல் என்று இன்றைய சபையின் பொறுப்புதாரிகள் நினைப்பார்களேயானால்... "அன்வாருஸ் ஸுஃபா "வால் பாதிக்கப்பட்ட இமாம்கள் எங்களைத் தொடர்பு கொள்ளலாம்.. அவர்களின் ரகசியம் பாதுகாக்கப்படும் ".... என்று மட்டும் ஒரு அறிக்கை செய்யட்டும்.. அடுத்து இருபத்து  நாலு மணி நேரமும் உங்கள் கைபேசி ஓய்வில்லாமல் ஒலித்துக்கொண்டிருக்கும் என்பது மட்டும் உண்மை...*

இதையும் தாண்டி தன் எதிர்கால வாழ்க்கையை நினைத்து பிரியமில்லாமல் இந்த "அன்வாருஸ் ஸுஃபா " பாடத்தை நடத்தி வரும் பள்ளிகளில் இமாமாக பணியாற்றும் ஆலிம்கள் அங்கு இவர்களை கண்காணிக்கிற அமீர் சாப்புகளிடம் தினந்தோறும் கேவலப்பட்டு நிற்கிற சில நிஜ நிகழ்வுகளை அடுத்த பதிவுகளில் ஹுத் ஹுத் உங்களுக்கு விரிவாக சொல்லி காட்டும் இன்ஷா அல்லாஹ்.....

*ஹுத் ஹுத் மீண்டும் தன் சிறகுகளை விரிக்கும் இன்ஷா அல்லாஹ்..*

Comments

Popular posts from this blog

ஷெய்கனா மலேசியா வாப்பா அவர்கள் ஷேக் அப்துல்லாஹ் ஜமாலி & நூரிஷா தரீக்கா உடைய தொடர்பையும் துன்டிக்க சொல்லி எழுதிய கடிதம்

ஷெய்கனா மலேசியா வாப்பா அவர்கள் அபுதாஹீர் சிராஜி அவர்களுக்கு ஷேக் அப்துல்லாஹ் ஜமாலி உடைய தொடர்பையும் நூரிஷா தரீக்கா உடைய தொடர்பையும் துன்டிக்க சொல்லி எழுதிய கடிதம்

தப்லீக் ஜமாஅத் விஷயத்தில் தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமாவின் கள்ள மௌனம்

*தப்லீக் ஜமாஅத் விஷயத்தில் தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமாவின் கள்ள மௌனம்* *_______________________________* *தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமாவிற்கு மௌலான மௌலவி M.Kமுஹம்மத் காஷிம் மஹ்ளரி (இமாம் ஏழு லெப்பை பள்ளி - நாஹுர் ஷெஃரிப் ) அவர்கள் மற்றும் 60க்கு மேற்பட்ட உலமாக்கள் வழிகெட்ட தப்லீக் ஜமாஅத்தை வழிகெட்ட வஹ்ஹாபிய இயக்கம் என்று அறிவிக்க  வழியுறுத்தி  எழுதிய கடிதம்*  ■─➻ _தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபை இதுவரை வழிகெட்ட பி. ஜெ தவ்ஹீத் ஜமாஅத்தை எதிர்த்து குரல் கொடுத்திருக்கிறது._ *இல்யாஸ் தப்லீக் ஜமாஅத்தும் தவ்ஹீத் ஜமாஅத்தை போல் ஒர் வஹ்ஹாபிய பிரிவுதானே.* _தப்லீக் ஜமாஅத்தை ஆதரிக்கின்ற சென்னை காஃஷிபுல் ஹுதா, திருச்சி அன்வாருல் உலூம் போன்ற அரபுக் கல்லூரிகள்_ _இஸ்லாத்தில் அனுமதிக்கப்பட்ட புனித காரியங்களான_  *மவ்லித், உரூஸ்* _போன்றவற்றை கூடாதென ஃபதவா வழங்கியிருக்கிறார்கள். இந்த தப்லீக் ஜமாஅத்தை ஆதரிக்கின்ற டில்லி குதுப்கானா , பேகம்பூர், தின்டுக்கல் என்ற முகவரியில் இருந்து வெளியிட்ட கலீல் அஹ்மது கீரனூரி எழுதிய தப்லீக் ஜமாஅத்தின் குற்றசாட்டுகளும், தக்கபதில்களும் என்ற தமிழ் மொழிபெயர்ப்பு நூலில் 136 பக்கத

தமிழ்நாடு அஹ்லிஸ் ஸுன்னத் வல் ஜமாஅத் உலமா சபையின் செயற்குழு கூட்டத்தில் உலமா பெருமக்களால் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்

தமிழ்நாடு அஹ்லிஸ் ஸுன்னத் வல் ஜமாஅத் உலமா சபையின் செயற்குழு கூட்டத்தில் உலமா பெருமக்களால் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள். Download  Pdf 1. புனித ஹரமைனுஷ் ஷரீஃபைன் மற்றும் இந்தியாவின் உலமா பெருமக்களால் குஃப்ரு ஃபத்வா வழங்கப்பட்ட வழிகேடர்களான 1.குலாம் அஹ்மத் காதியானி 2.காஸிம் நானோத்தவி 3.கலீல் அஹ்மத் அம்பேட்வி 4.அஷ்ரஃப் அலி தானவி 5.ரஷீத் அஹ்மத் கங்கோஹி ஆகியோர்களும் அவர்களைப் பின்பற்றுவோரும் காஃபிர்கள் என்பதில் சந்தேகம் இல்லை. 2. நூரி ஷாஹைதராபாத்தில் ஜாமிஆ இலாஹியாத்தே நூரியா என்ற மதரஸாவை, வழிகெட்ட தேவ்பந்து வஹ்ஹாபி மதரஸாவை ஸ்தாபித்த காஸிம் நானோத்தவியின் பேரரான மௌலவி காரி தையப் காஸிமியை வைத்து நடத்திய திறப்பு விழா கல்வெட்டு ஆதாரம் (பார்க்க தர்கா இதழ் ஜனவரி - 2021) கிடைத்துள்ள படியாலும், நூரிஷா மதரஸாவின் பைலாவில் மதரஸாவை தொடர்ந்து நடத்தமுடியாமல் போனால் தேவ்பந்து அதை தத்தெடுத்துக் கொள்ளும் என்னும் ஷரத்து உள்ளது என்ற செய்தி தெரியவந்திருப்பதாலும் ஹைதராபாத் நூரிஷா தரீகாவினருக்கும், வழிகேடர்களான தேவ்பந்து வஹ்ஹாபிய முல்லாக்களுக்கும் உள்ள தொடர்பு வெளிச்சமாகியுள்ள படியாலும், மேலும் நூரிஷா தரீக்காவின்