'வஹ்ததுல் வுஜூத்' பற்றி சமிக்ஞை செய்து காட்டிய நபிகளார் - அல் குர்ஆன்
Allah - beginning with the name of the Most Gracious, the Most Merciful
وَمَا رَمَيْتَ اِذْ رَمَيْتَ وَ لٰـكِنَّ اللّٰهَ رَمٰى ۚ
(நபியே)...(பகைவர்கள் மீது மண்ணை) நீர் எறிந்தபோது அதனை நீர் எறியவில்லை,
அல்லாஹ்தான் எறிந்தான்;
ஸூரத்துல் அன்ஃபால் [8:17]
இந்த இறைவசனமும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்களுடைய முழுமையான புகழ் மாலையாகும். முதலில் இங்கு எந்த சம்பவத்தை பற்றி கூறப்பட்டுள்ளது என்று கவனிக்க வேண்டும்.
இரண்டாவதாக இங்கே நபிகளாரின் புகழ்மாலை எங்கு உள்ளது என்பதையும் அறியவேண்டும்.
இந்த இறைவசனத்தில் "பத்ரு போர் - ல் நடைபெற்ற சம்பவத்தை பற்றி கூறுகின்றது. ஹிஜ்ரி 2, ரமலான்
மாதத்தில் 17-ம் பிறையில் பத்ரு போர் நடைப்பெற்றது.
மக்கத்து காஃபிர்கள் போர் தடவாளங்கள் கொண்டு தன் சேனையுடன் மதினா நகர் மீது
படையெடுத்து கைப்பற்ற வந்தனர். மேலும் அஹ்லே மதினாவில் அல்லாஹ்வின் உதவி மற்றும்
ரசூல்லுல்லாஹ்வின் பரகத் போன்றவை தவிர வேறேதும் கிடையாது.
மக்கத்து காபிர்கள் ஏறத்தாழ 1000
நபர்கள் இருந்தார்கள் மற்றும் முஸ்லிம்கள் 313 பேர் இருந்தனர்.
காஃபிர்களிடம் உண்ண உணவு அருந்துவதற்கு நீர், பானங்கள் போன்றவை வைத்து இருந்தனர்.
முஸ்லிம்களோ வயிற்றில் கற்களை கட்டிக்கொண்டும் இரவு நேரங்களில் ஓத குர்ஆன் வசனங்களை கொன்டிருந்தனர்.
காஃபிர்களிடம் வில், வாள், இரும்பு கவசங்கள் போன்றவற்றை அதிகமாக வைத்து இருந்தனர்.
முஸ்லிம்களோ மரத்தினால் ஆன கட்டைகளையும், கிழிந்து போன உடைகளை உடலில் அணிந்து
இருந்தனர் அவர்களில் கால்களிலும் வெட்டுக்காயங்கள் இருந்தன.
காஃபிர்களிடம் பாடகர்களை கொண்ட பாட்டுக்களும், இசை கலைஞர்களை கொண்ட இசையும் கொண்டு பாடிக்கொண்டே இருந்தனர். முஸ்லிம்களிடம் குர்ஆனின் வசனங்களை
கொண்டும், தக்பீர் முழக்கங்களை
சொல்லி கொண்டும் இருந்தனர்,
காஃபிர்கள் இரவு வேளையில் மது பானங்களின் போதை மயக்கத்தில் மூழ்கிபோய் இருந்தனர்.
முஸ்லிம்கள் 'திக்ர்" என்ற இறை தியானத்துடன் இறைக்காதலின் மயக்கத்தில் மூழ்கிபோய் இருந்தனர்.
சுருக்கமாக சொன்னால் முஸ்லிம்கள் ரஹ்மானுடைய படையுடனும், காஃபிர்கள் ஷைத்தானுடைய படையுடனும் கொண்டிருந்தனர்.
முஸ்லிம்களின் இந்த வெளிப்படையான நிலைமையை பார்த்த நபிகளார் தனது சிரத்தை 'சஜ்தா'வில் வைத்து இறைவனிடத்தில் துஆ செய்தார்கள்.
ச்சோ ரோ'அபாசத் அனல்லாஹ் அஸ் தர்கத் கே ரவான புத் கே கோயத் நேக் பக்த்
கவிதை விளக்கம்:
பாருங்கள் ! ஹஸ்ரத் மூஸா அலைஹி சலாம் இறைவனுடன் சம்பாஷனை செய்ய தூர் மலைக்கு
சென்றார்கள். அங்கே ஒரு மரத்திலிருந்து சப்தம் வந்து கொண்டு இருந்தது.
'வனுதிய மினஸ்'ஷஜரதி அய்' யா மூஸா இன்னீ இ அனல்லா ரப்புல் ஆலமீன்'
ஓ மூஸாவே ! நான் தான் அகில உலகங்களின் இரட்சகன்
இது மரத்தின் சப்தமா? நான் தான் இறைவன் என்று அந்த மரம் கூறுகிறது ! நிச்சயமாக அந்த மரம்
இறைவன் இல்லை. ஆனால் இது இறைவனுடைய சம்பாஷனையாகும் இந்த சம்பாஷனை மரத்தின்
மூலம் கேட்டோம். அந்த மரம் 'மஸ்'ஹரே இலாஹி என்ற நிலைமையில் இருந்தது.
இதே போல் தான் மரக்கறியை நெருப்பில் போட்டு விட்ட பிறகு நன்றாக நெருப்பினால் அது எரியும் பொது அந்த நெருப்பின் தாக்கம் அந்த மரக்கறியின் மீது அதிகமானதும் அந்த மரக்கறியை தொட முடியாது, யாரும் அதை முன்பு இருந்த மரக்கறி தான் என்று சொல்ல மாட்டார்கள். அந்த மரக்கறியை நெருப்பு என்பார்கள்.
மற்றும் எவருக்கேனும் 'ஜின்' பிடித்துக்கொண்டால், அவர் ஜின் உடைய நிலைமையில் கூறுவார்
என்னுடைய பெயர் இது தான், நான் குறிப்பிட்ட ஒரு இடத்தை சார்ந்த ஜின். எனக்கு இந்த சக்திகள் எல்லாம் இருக்கின்றன என்று அந்த நபர் கூறுவார். இது என்ன அந்த நபருடைய பேச்சா? இல்லை ஜின்
உடைய பேச்சா? நிச்சயமா அந்த நபர் பேசவில்லை. பேசுபவர் சாதாரண மனிதர தான் அவர்கள் வழியாக சம்பாஷனை செய்வது அந்த குறிப்பிட்ட ஜின் ஆகும்.
அதே போல் தான் இந்த உடல் ஒரு மரக்கறியை போன்றதாகும், சம்பாஷனைகளும், செயல்களும்
அவனுடையது. மேற்சொன்னது எல்லாமே ஒரு எடுத்துக்காட்டாகும். இந்த 'தர்ஜாவிற்கு சென்ற சில ஆரிபீன்கள் "அனல்லாஹு, யா சுபஹாணி மா ஆழமு ஷானி. இன்னும் இது போன்று பல பல சொற்களை கூறுகிறார்கள். இந்த சொற்கள் எல்லாம் கூறியது இந்த ஆரிபிஃன்களா? நிச்சயமாக இல்லை. இந்த சொற்களை கூறிய நாவு ஆரிபிஃன்களுடையது ஆனால் சொல்லோ அல்லாஹ் உடையது.
ஆரிபிகளுக்கும் ஷைத்தானுக்கும் வித்தியாசங்கள் நிறையவே இருக்கின்றன. உதாரணம் "பிர்அவ்ன் கூறினான் : அனா ரப்புகுமுல் ஆலா (நான் உங்களின் மிகப்பெரிய ரப் ஆவேன்) என்று கூறினான் காஃபிர் ஆகிவிட்டான்.
இதே ஹஸ்ரத் மன்சூர் ஹல்லாஜ் அலைஹி ரஹ்மா கூறினார்கள்: "அனல் ஹக்” (நான் 'ஹக்' ஆவேன்)
இத்தருணத்தில் ஹஸ்ரத் மன்சூர் அலைஹி ரஹ்மா “நான்' என்ற அந்த 'அனானியத்' அழித்து
விட்டார்கள். எல்லாம் நீயே ! எல்லாம் நீயே ! என்று "பஃனா" ஆகிவிட்டார்கள்.
ஆனால் ஷரியத் சட்டம் ஹஸ்ரத் மன்சூர் அலைஹி ரஹ்மா மீது பாய்ந்தது அதன்படி "வாஜிபே கதல்"
(அவரை கொலை செய்தல் வாஜிபானது) 'அனல் ஹக்" என்று கூறியமையால் வெட்டப்பட்டு
கொல்லப்பட்டார்கள்.
மேலும் முஸ்தபா ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் எந்த தர்ஜாவிருக்கு சென்றாலும் ஒவ்வொரு
மூச்சிலும் "அனா அப்துஹு" நான் அல்லாஹ்வின் அடியான்" என்றே கூறினார்கள். எல்லா
படித்தரங்களையும் கடந்து சென்று கொண்டே இருந்தார்கள்.
மேற் சொன்ன இறைவசனத்தில், நேசரே நீங்கள் 'பஃனா பில்லாஹ்" உடைய தர்ஜாவில் சென்று
விட்டீர்கள், சம்பாஷனையும் செயலும் உங்களுடையது ஆனால் செய்பவன் நான்தான் என இறைவன்கூறுகின்றான்.
ஹஸ்ரத் மூஸா அலைஹி ஸலாம் இறைவனுடைய 'தஜல்லி'யாத் என்ற ரட்சக 'ஜாலலியத் தை கண்டு
மயங்கி விழுந்து விட்டார்கள்.
ஆனால் முஸ்தபா ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்களுடைய கண்களுக்கே எங்கள் உயிர் அற்பணம் ஆகட்டும். சுபுஹானல்லாஹ் மெஹ்ராஜ் உடைய விண்ணுலக யாத்திரையில் ரப்பை நேரில் மிக
சமீபமாக பார்த்துக்கொண்டே சம்பாஷனை செய்தார்கள்,
இமாம் அஹமத் ரழா கான் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் புகழ்பாடுகிறார்கள்:-
'மூஸா ஸஹோஷ் ரிப்'பத் பே எக் பர்து சிப்பாத்
தூ ஐன் சாத் மீ நக்ரி தபஸ்சுமி'
விளக்கம்:-
மூஸா அலைஹி ஸலாம் அவர்களுக்கு தூர் சினாய் மலையில் கிடைத்ததோ
இறைவனிடம் சம்பாஷனை என்ற ஒரு 'சிப்பாத்' மட்டுமே!
யா ரசூல்லுல்லாஹ் தங்களோ அந்த சிப்பாதுக்களின் உயிராக இருக்கின்றீர்கள் !
அல்லாஹ் இந்த ஒரு இறைவசனத்தில் மட்டும் இவ்வாறு குறிப்பிடவில்லை. மற்றொரு இடத்திலும் கூறுகின்றான், "நேசரே ! எவர்கள் உம்மிடத்தில் வாக்களித்தார்களோ அவர்கள் அல்லாஹ்விடமே
வாக்களித்தார்கள் இறைவனின் கை அவர்களின் கை மீது இருக்கின்றது'
(அத்தியாயம் : அல் பதா)
மற்றோரிடத்தில் இறைவன் கூறுகின்றான், என்னுடைய நபி சொந்தமாக எதுவும் கூறுவதில்லை
அவர்களுடைய சொல் எல்லாமே 'வஹி ஆகும்
(அத்தியாயம்: அல் நுஜும்)
இமாம் அஹமத் ரஸா கான் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் புகழ்பாடுகிறார்கள்:-
இஸ்கி ஹர் எக் சபான் வஹியே குதா
சஸ்மா எ இல்ம் ஒ ஹிக்மத் பேலாஹூ சாலம்
விளக்கம்:
"ரசூல்லுல்லாஹ் அவர்களின் ஒவ்வொரு சொல்லும் இறைவனின் வஹி ஞானம் மற்றும் ஹிக்மத்தின் ஊற்றிக்கு லட்சாதி லட்சம் உண்டாவதாக"
ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் இதிலிருந்து கிடைக்கும் பயன் என்னவென்றால், எவரேனும் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்களின் செயலையோ, சொல்லையோ, பொருளையோ எவரேனும் இகழ்ந்தால் அந்த நபர்
காஃபிர் ஆகிவிடுகிறார். ஏனென்றால் நபிகளாரை இகழ்வது ரப்பை இகழ்வது போன்றதாகும்.
மேலும் எவரேனும் எல்லா வணக்கங்களையும் முறையாக பேணியும், இறையச்சம் உடையவாராக
இருந்தும், மவ்லவியாக இருந்தும், முப்தியாக இருந்தும், ஷைக் ஆகா இருந்தும், அறிவாளியாக இருந்தும் ஏதோ ஒரு காரணத்திற்க்காக நபிகளாரின் புனித காலணியை தரக்குறைவாக பேசிவிட்டால்
அந்த நபரின் எல்லா வணக்க வழிபாடுகளும் அழிக்கப்பட்டு அந்த நபர் முர்த்தத் ஆகிவிடுகிறார், மேலும் காஃபிர் ஆகிவிடுகிறார். (ஷிபா ஷரிப், ரத்துல் முகஹ்தார், பத்'வா'யே ரஸ்வியா)
பாருங்கள் குர்ஆன் மஜீத் வசனம், அன் தஹ்பத ஆமாலுகும் வ அன்தும் லா தஷ்ஹுரூன்,
"பா அதப் பா நசிப் பே அதப் பே நசிப்'
எவரிடத்தில் பணிவு இருக்கின்றாதோ அவர் அதிஷ்டசாலி ஆவார!!
எவரிடத்தில் பணிவில்லையோ அவர் துரதிஷ்டசாலி ஆவார்!
ஆன்மீக பாதையை நாடுபவர்களின் முதல் கொள்கை பணிவு என்ற ஒன்று தான்...
ஏக இறைவன் நபியின் சமுகத்தின் மீதான பணிவை நம் அனைவருக்கும் அருள் புரிவானாக. ஆமீன்.
பிஜாஹே நபியில் கரீம் ஸல்லல்லஹு அலா முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம்
உர்து மூலம்:
ஹகிமுல் உம்மத் முஃப்தி அஹ்மத் யார் காஃன் நயமி அஷ்ரஃபி பதாயுனி அலைஹி ரஹ்மா
நூல்
ஷானே ஹபிபுர் ரஹ்மான் மின் ஆயாத்தில் குர்ஆன்
Comments
Post a Comment