Skip to main content

முஸ்தஃபா ‎ﷺ ‏அவர்கள் அனைத்து மொழிகளையும் அறிந்தவர்கள் ‎- ‏அல் குர்ஆன்

*முஸ்தஃபா ﷺ அவர்கள் அனைத்து
மொழிகளையும் அறிந்தவர்கள் -
அல் குர்ஆன்*

Allah - beginning with the name of - the Most Gracious, the Most Merciful

தமிழாக்கம் :- அஜீமுத்தீன் ஹஷ்மதி

http://az-zalzalah.blogspot.com/2020/07/blog-post_21.html


وَمَا قَدَرُوا اللّٰهَ حَقَّ قَدْرِهٖۤ اِذْ قَالُوْا مَاۤ اَنْزَلَ اللّٰهُ عَلٰى بَشَرٍ مِّنْ شَىْءٍ


அல் குர்ஆன் ஷரிஃப், அத்தியாயம்: அன்ஆம், வசனம் - 91

மற்றும் யூதர்கள் அல்லாஹ்வை மதிக்க வேண்டிய முறையில் மதிக்கவில்லை ஏனெனில் அவர்கள், 

"அல்லாஹ் எந்த ஒரு மனிதர் மீதும் எந்த வேதத்)தையும் இறக்கவில்லை" என்று கூறுகின்றனர்; [6:91]

வெளிப்படையில் இந்த திருவசனம் யூத காஃபிர்களின் அசிங்கங்களைப் பற்றி எடுத்துக் கூறுகிறது.

ஆனால் ஈமானுடைய மனக்கண்னைக் கொண்டு கூர்ந்து கவனிப்போமாயின் முஸ்தஃபா ﷺ
அவர்களுடைய மாண்பினை உறுதிப்படுத்தும் புகழாரம் கொண்ட பூக்கள்  பூத்துக் குலுங்கி அதன் நறுமணம் நம் இருதயங்களில் சென்றடைந்து ஈமானின் நறுமணம் வீசுவதினை உணரலாம்.

இந்த திருவசனம் அருளப்பட்ட சம்பவமானது ஒரு முறை யூதர்களின் ஒரு கூட்டம் (ஜமாத்)
தங்களுடைய அறிஞர்களின் தலைவரான மாலிக் இப்னு சைஃப் என்பவனை அழைத்துக் கொண்டு நம் நபி ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்களிடத்தில் விவாதம் செய்ய வந்தார்கள்.

நம் நபிகளார் அந்த மாலிக் இப்னு சைஃப் என்பவனை நோக்கி கூறினார்கள். ஓ மாலிகே! நான்
அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்து உன்னிடத்தில் சொல்கிறேன். அல்லாஹ் ஹஸ்ரத் மூஸா அலைஹி ஸலாம் அவர்கள் மீது தவ்ராத் என்னும் வேதத்தை இறக்கி வைத்தான். என்ன ? நீ தவ்ராத் வேதத்தில் பார்த்து இருக்கின்றாயா? 

அதில் 'இன்னல்லாஹ பைக(z)ஸு அல் ஹிப்ரஸ்சமின்" அதாவது
அல்லாஹுதாலா பருமனான (குண்டான) ஆலிம்களை தனது பகைவன் என அல்லாஹ் கூறுகிறான்,


அப்போது அந்த யூதன் மாலிக் இப்னு சைஃப் கூறினான் ஆம் ! பார்த்து இருக்கின்றேன். நாயகம்
ஸல்லல்லாஹஹு அலைஹி ஸல்லம் கூறினார்கள்: தவ்ராத் வேதத்தில் உள்ள
இறைக்கட்டளையின் படி நீ அல்லாஹ்வின் பகைவன் ஆவிர்.

இவ்வாறு சொன்னதும் அந்த (யூதன்) மாலிக் கோபமடைந்து கூறினான்:

"இறைவன் எந்த மனிதரின் மீதும் எதையும் இறக்கி வைக்கவில்லை".
அத்தருணத்தில் மேற்க் குறிப்பிடப்பட்ட இறைவசனம் அருளப்பட்டது.


அதில் கூறப்பட்டுள்ளதாவது, அந்த யூதர்கள் அல்லாஹ்வின் மகிமையை அறிந்துக் கொள்ளவில்லை. அவர்கள் இறைவனின் வேதங்களையும், நபிமார்களையும் நிராகரிக்கின்றார்கள்.
பின்பு ஹஸ்ரத் மூஸா அலைஹி ஸலாம் தவ்ராத் வேதம்
இறக்கி வைக்கப்பட்டுள்ளது எனில் அவ்வேதம் யாரால் இறக்கிவைக்கப்பட்டது? என்று வினா எழும்பியது ! எல்லா யூதர்களும் மாலிக்கின் இந்த பேச்சை செவியுற்று, மாலிக் மீது ஆட்சேபம் தெரிவித்தனர்.

இந்த மாலிக் என்பவனைத் தான் அனைத்து யூதர்களும் பெருமையாக அழைத்து வந்திருந்தனர். ஆனால் இப்போது மாலிக்கை அழைத்து வந்த யூதர்களே மாலிக்கை நிராகரித்தனர். (தஃப்ஸீர் மதாரிக் மற்றும் தஃப்ஸீர் காஹ்ஸின்)
இந்த சம்பவத்திலிருந்து நபி ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அன்னவர்களின் சில "சிப்பாத்"கள் வெளிப்படுகின்றன.
அதில் முதலாவதாக முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் "ஆலிமே இல்மெ லதுன்னி"
ஆவர்கள். அதாவது 'இல்மே லதுன்னி' எனப்படும் இறைவனால் அறிவிக்கப்படுகின்ற "மறைவான
ஞானம்" உள்ளவர்கள்.

நம் நபிகளார் எவரிடத்திலும் எந்த ஒரு கல்வியையும் கற்றுக் கொள்ளவில்லை. எந்த ஒரு அறிஞரின் உதவியையும் பெறவில்லை இருந்தாலும், நம் நபிகளார் விவாதம் செய்யும் முறையினை நேர்த்தியான
நுண்கலையினை சான்றுரைக்கின்றார்கள்.
இந்த முறையை பேணிக் காத்தமைக்காக அதிபுத்தி சாலிகளும் தலைவணங்குவார்கள். விவாதம் ஆரம்பிக்குமுன்னே ஆதாரத்தை முன்வைத்து அதை நிரூபித்தும் விட்டார்கள், அவர்கள் பின்பற்றும் கொள்கையின் படி அந்த யூதனானவன் மார்க்கமில்லாதவனாக இருக்கும் போது யூதனிடத்தில் என்ன
விவாதம் செய்ய இயலும்?
இரண்டாவதாக, தவ்ராத் வேதமானது இப்ராணி மொழியில் உள்ளதாகும். தவ்ராத் வேதத்தை நபிகளார் எவரிடத்திலும் கற்றுக்கொள்ளவில்லை. மேலும் இப்ராணி மொழியையும் எவரிடத்திலும் கற்றுக்
கொள்ளவில்லை.

சுபஹானல்லாஹ் ! நம் நபியின் ஞான ஆற்றல் முன் நம்முடைய ஆசிரியர்கள் அர்ப்பணமாகட்டும். தவ்ராத் வசனங்களின் மீதும் நபிகளாரின் பார்வை இருக்கின்றது மேலும் இப்ராணி
மொழிப் பற்றிய ஞானமும் இருக்கின்றது.


நபிமார்கள் அனைவரும் கற்றுணர்ந்தவர்களாக தான் அவதரிக்கின்றார்கள். ஹஸ்ரத் ஆதம் அலைஹி ஸலாம் பிறந்தபோதே அர்ஷ் மீது எழுதி இருந்த கலிமா தைபாவை படித்துக்கொண்டார்கள் மற்றும்
இறைவனிடத்தில் கேட்டார்கள், இறைவனே ! உனது பெயர் அருகிலிருக்கும் இந்த பெயர் (முஹம்மத்) யாருடையது? இறைவன் கூறினான் ஆதமே! அந்த பெயர் கொண்டவரை நான் படைத்திருக்காவிட்டால்
உங்களையும் படைத்திருக்கமாட்டேன்.

ஹஸ்ரத் ஆதம் அலைஹி ஸலாம் படிக்க, எழுத அறிந்துக்கொள்ளும் முன்பே இந்த கலிமாவை எப்படி
படித்தார்கள் என்றால்?
ஆம்! நூரே நுபுவத்தின் (முஹம்மத் ﷺ ) பொருட்டால் படித்தார்கள்.
(மதாரிஜுன் நுபுவத்)
குர்ஆன் ஷரிஃபில் கூறப்பட்டுள்ளதாவது
"வமா அர்சல்னா மிர் ரசூலி யில்லா பிலிசானி கவ்மிஹி"
அந்தந்த சமூகத்தார்கள் பேசும் மொழியிலேயன்றி நாம் எந்த ஒரு தூதரையும் அனுப்பி வைக்கவில்லை நாயகம் ﷺ அவர்கள் எல்லா சமூகத்தார்களின் தூதராவார்கள். இதிலிருந்து
நாம் அறிவது என்னவென்றால் எல்லா மொழிகளையும் நம் நபிகளார் அறிந்துள்ளார்கள்.
குர்ஆன் கூறுகிறது, அல்லாஹ் ஹஸ்ரத் ஆதம் அலைஹி ஸலாம் அவர்களுக்கு எல்லாப்
பெயர்களையும் கற்றுக்கொடுத்துள்ளான். முஃப்'அஸ்ஸிரின்கள் கூறுகிறார்கள் எல்லா மொழிகளையும் ஹஸ்ரத் ஆதம் அலைஹி ஸலாம் அவர்களுக்கு இறைவன் கற்றுக் கொடுத்துள்ளான். நபி முஹம்மத் ﷺ அவர்களுடைய ஞானமானது ஹஸ்ரத் ஆதம் அலைஹி ஸலாம் அவர்களுடைய ஞானத்தை விட அதிகமானதாகும். இதன் மூலம் அல்லாஹ் நபிகளாருக்கு எல்லா மொழிகளின் ஞானத்தையும் வழங்கியுள்ளான். ஹஸ்ரத் சல்மான் ஃபார்ஸி ரழியல்லாஹு அன்ஹு அவர்களிடம் நபி அலைஹி ஸலாம் கேள்வி யொன்றைக் கேட்டார்கள் "ஷிகம் தர்த்" இது பாரசீக(Persian Language) மொழியாகும்.


மூன்றாவதாக மாலிக் இப்னு சைஃப் என்ற யூதன் இறைவனின் உள்ளமையைப் பற்றி
நிராகரிக்கவில்லை. ஆனால் இறை வேதங்களையும் நபிமார்களையும் நிராகரித்தான். இங்கே அல்லாஹ்
"இவர்கள் அல்லாஹ்வின் மகிமையை அறிவதில்லை" என்று கூறுகிறான். இதிலிருந்து நாம் அறிவது என்னவென்றால் "நபிமார்களை நிராகரிப்பது என்பது உண்மையில் இறைவனை நிராகரிப்பதே" என்பதாகும்.
இறைவனின் சிஃப்பத் (பண்பு) "ரப்புல் ஆலமின்" அகில உலகங்களை படைத்து பரிபாலிப்பவன் என்பதாகும். அந்த ரப்பு தான் தன் அடிமைகளின் வெளிப்படையான மேலும் அந்தரங்கமான உலகம்
மற்றும் மார்க்கம் சம்மந்தப்பட்ட அனைத்து தேவைகளையும் பூர்த்தியாக்குபவன். உலகம் சம்மந்தப்பட்ட தேவைகளுக்கு தாய், தந்தை, உடல்நலம், உணவு, மருந்துகள், பழ வகைகள், இந்த பூமி மற்றும் வானம் இன்னும் இது போன்ற விஷயங்களை படைத்து அருளியுள்ளான்.


மார்க்கத் தேவைகளுக்காக நபிமார்கள், குர்ஆன், ஹதிஸ், அவ்லியாக்கள், ஷைகுமார்கள், உலமாக்கள், நல்ல அமல்கள் இன்னும் இது போன்ற விஷயங்களை இந்த உலகிற்க்கு அருளியுள்ளான். எவரேனும் நபிமார்களையும் இறைவேதங்களையும் நிராகரித்தும் மேற்படி அல்லாஹ் நமக்கு இஸ்லாம் மார்க்கத்தை கொடுக்கவில்லை என்று கூறிக்கொண்டும் இருந்தால் அவர்கள் இறைவனின் அருளை
நிராகரிப்பவராவார்கள்.
"முஹம்மதுர் ரஸூலுல்லாஹ்" என்ற கொள்கையை பற்றிப் பிடித்தவரே உண்மையில் "லா இலாஹா இல்லல்லாஹு" என்ற ஏகத்துவ கொள்கையை கொண்டவர்களாவார்கள்.

உர்து மூலம்:

ஹகீமுல் உம்மத் முஃப்தி அஹ்மத் யார் காஃன் நயமி அஷ்ரஃபி பதாயுனி அலைஹி ரஹ்மா

நூல்: ஷானே ஹபிபுர் ரஹ்மான் மின் ஆயத்தில் குர்ஆன்

Comments

Popular posts from this blog

ஷெய்கனா மலேசியா வாப்பா அவர்கள் ஷேக் அப்துல்லாஹ் ஜமாலி & நூரிஷா தரீக்கா உடைய தொடர்பையும் துன்டிக்க சொல்லி எழுதிய கடிதம்

ஷெய்கனா மலேசியா வாப்பா அவர்கள் அபுதாஹீர் சிராஜி அவர்களுக்கு ஷேக் அப்துல்லாஹ் ஜமாலி உடைய தொடர்பையும் நூரிஷா தரீக்கா உடைய தொடர்பையும் துன்டிக்க சொல்லி எழுதிய கடிதம்

தப்லீக் ஜமாஅத் விஷயத்தில் தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமாவின் கள்ள மௌனம்

*தப்லீக் ஜமாஅத் விஷயத்தில் தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமாவின் கள்ள மௌனம்* *_______________________________* *தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமாவிற்கு மௌலான மௌலவி M.Kமுஹம்மத் காஷிம் மஹ்ளரி (இமாம் ஏழு லெப்பை பள்ளி - நாஹுர் ஷெஃரிப் ) அவர்கள் மற்றும் 60க்கு மேற்பட்ட உலமாக்கள் வழிகெட்ட தப்லீக் ஜமாஅத்தை வழிகெட்ட வஹ்ஹாபிய இயக்கம் என்று அறிவிக்க  வழியுறுத்தி  எழுதிய கடிதம்*  ■─➻ _தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபை இதுவரை வழிகெட்ட பி. ஜெ தவ்ஹீத் ஜமாஅத்தை எதிர்த்து குரல் கொடுத்திருக்கிறது._ *இல்யாஸ் தப்லீக் ஜமாஅத்தும் தவ்ஹீத் ஜமாஅத்தை போல் ஒர் வஹ்ஹாபிய பிரிவுதானே.* _தப்லீக் ஜமாஅத்தை ஆதரிக்கின்ற சென்னை காஃஷிபுல் ஹுதா, திருச்சி அன்வாருல் உலூம் போன்ற அரபுக் கல்லூரிகள்_ _இஸ்லாத்தில் அனுமதிக்கப்பட்ட புனித காரியங்களான_  *மவ்லித், உரூஸ்* _போன்றவற்றை கூடாதென ஃபதவா வழங்கியிருக்கிறார்கள். இந்த தப்லீக் ஜமாஅத்தை ஆதரிக்கின்ற டில்லி குதுப்கானா , பேகம்பூர், தின்டுக்கல் என்ற முகவரியில் இருந்து வெளியிட்ட கலீல் அஹ்மது கீரனூரி எழுதிய தப்லீக் ஜமாஅத்தின் குற்றசாட்டுகளும், தக்கபதில்களும் என்ற தமிழ் மொழிபெயர்ப்பு நூலில் 136 பக்கத

தமிழ்நாடு அஹ்லிஸ் ஸுன்னத் வல் ஜமாஅத் உலமா சபையின் செயற்குழு கூட்டத்தில் உலமா பெருமக்களால் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்

தமிழ்நாடு அஹ்லிஸ் ஸுன்னத் வல் ஜமாஅத் உலமா சபையின் செயற்குழு கூட்டத்தில் உலமா பெருமக்களால் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள். Download  Pdf 1. புனித ஹரமைனுஷ் ஷரீஃபைன் மற்றும் இந்தியாவின் உலமா பெருமக்களால் குஃப்ரு ஃபத்வா வழங்கப்பட்ட வழிகேடர்களான 1.குலாம் அஹ்மத் காதியானி 2.காஸிம் நானோத்தவி 3.கலீல் அஹ்மத் அம்பேட்வி 4.அஷ்ரஃப் அலி தானவி 5.ரஷீத் அஹ்மத் கங்கோஹி ஆகியோர்களும் அவர்களைப் பின்பற்றுவோரும் காஃபிர்கள் என்பதில் சந்தேகம் இல்லை. 2. நூரி ஷாஹைதராபாத்தில் ஜாமிஆ இலாஹியாத்தே நூரியா என்ற மதரஸாவை, வழிகெட்ட தேவ்பந்து வஹ்ஹாபி மதரஸாவை ஸ்தாபித்த காஸிம் நானோத்தவியின் பேரரான மௌலவி காரி தையப் காஸிமியை வைத்து நடத்திய திறப்பு விழா கல்வெட்டு ஆதாரம் (பார்க்க தர்கா இதழ் ஜனவரி - 2021) கிடைத்துள்ள படியாலும், நூரிஷா மதரஸாவின் பைலாவில் மதரஸாவை தொடர்ந்து நடத்தமுடியாமல் போனால் தேவ்பந்து அதை தத்தெடுத்துக் கொள்ளும் என்னும் ஷரத்து உள்ளது என்ற செய்தி தெரியவந்திருப்பதாலும் ஹைதராபாத் நூரிஷா தரீகாவினருக்கும், வழிகேடர்களான தேவ்பந்து வஹ்ஹாபிய முல்லாக்களுக்கும் உள்ள தொடர்பு வெளிச்சமாகியுள்ள படியாலும், மேலும் நூரிஷா தரீக்காவின்