மௌலவி காஜா முகையத்தீன் பாக்கவி மதம் கடந்து விட்டுக்கொடுப்போடு கிறித்தவர்களோடு உறவு கொள்ள ஆசைப்படுகின்றார்
மௌலவி காஜா முகையத்தீன் பாக்கவி மதம்கடந்து விட்டுக்கொடுப்போடு கிறித்தவர்களோடு உறவு கொள்ள ஆசைப்படுகின்றார்.
இவர் விட்டுக் கொடுக்கத் துணிந்த விடயம் எது?
மதம் கடந்த உறவு என்றால் அதன் பொருள் என்ன?
இவர் சூரத்துல் பாத்திஹா வை கைவிடப்போகின்றாரா?
ولن ترضي عنك اليهود ولا النصاري حتي تتبع ملتهم
யஹூதிகளும் நஸாறாக்களும் அவர்களின் மார்க்கத்தை நீங்கள் பின்பற்றும் வரை நிச்சயமாக உங்களை அவர்கள் திருப்தி காணமாட்டார்கள் என்று அல்லாஹுத் தஆலா திட்டவட்டமாகக் கூறுவதை மறுக்கின்றாரா?
மார்க்கத்தை இழந்தால் மட்டுமே திருப்தியான உறவு வரும் என்று திருக்கூர்ஆன் கூறுகின்றது.
இவர் மதத்தை இழந்து, தௌஹீதை விட்டுக் கொடுத்து உறவு கொள்ள துடிக்கின்றார்.
ஏசு இறை குமாரர் அல்ல !, அவர் சிலுவையில் அறையப்படவில்லை
என்ற அல்லாஹ்வின் கூற்றை மாற்றப் போகின்றாரா?
யஹூதிகளையும், நஸாறாக்களையும் உங்கள் நண்பர்களாக எடுக்க வேண்டாம். என்ற அல்லாஹ்வின் எச்சரிக்கையை கைவிடக் துணிந்த இவர்கள் போன்றவர்கள் தான் உலோகயுதவாதிகள்.
இவர்களைத் தான் றஸூலுள்ளாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அதிகமாகப் பயந்தார்கள்.
இவர்கள் தங்கள் நலனுக்காக ஈமானையும், இஸ்லாத்தையும் விலை பேசத் துணிந்தவர்கள்.
இவர்கள் ஈமானுக்கு ஆபத்தானவர்கள்.
குப்றை விட்டும் தூரமாக இருந்த முஸ்லிம்களை குப்றோடு சங்கமிக்கச் செய்ய திருமறையில் செயல்படும் உளவாளிகள் .
இவர்கள் விடயத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
தவறினால் ஈமானை இழக்க நேரிடும்.! ஜாக்கிருதை!
Comments
Post a Comment