தமிழ்நாடு அஹ்லிஸ் ஸுன்னத் வல் ஜமாஅத் உலமா சபையின் செயற்குழு கூட்டத்தில் உலமா பெருமக்களால் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்
தமிழ்நாடு அஹ்லிஸ் ஸுன்னத் வல் ஜமாஅத் உலமா சபையின் செயற்குழு கூட்டத்தில் உலமா பெருமக்களால் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்.
Download Pdf
1. புனித ஹரமைனுஷ் ஷரீஃபைன் மற்றும் இந்தியாவின் உலமா பெருமக்களால் குஃப்ரு ஃபத்வா வழங்கப்பட்ட வழிகேடர்களான
1.குலாம் அஹ்மத் காதியானி
2.காஸிம் நானோத்தவி
3.கலீல் அஹ்மத் அம்பேட்வி
4.அஷ்ரஃப் அலி தானவி
5.ரஷீத் அஹ்மத் கங்கோஹி ஆகியோர்களும் அவர்களைப் பின்பற்றுவோரும் காஃபிர்கள் என்பதில் சந்தேகம் இல்லை.
2. நூரி ஷாஹைதராபாத்தில் ஜாமிஆ இலாஹியாத்தே நூரியா என்ற மதரஸாவை, வழிகெட்ட
தேவ்பந்து வஹ்ஹாபி மதரஸாவை ஸ்தாபித்த காஸிம் நானோத்தவியின் பேரரான மௌலவி காரி தையப் காஸிமியை வைத்து நடத்திய திறப்பு விழா கல்வெட்டு ஆதாரம் (பார்க்க தர்கா இதழ் ஜனவரி - 2021) கிடைத்துள்ள படியாலும், நூரிஷா மதரஸாவின் பைலாவில் மதரஸாவை தொடர்ந்து நடத்தமுடியாமல் போனால் தேவ்பந்து அதை தத்தெடுத்துக் கொள்ளும் என்னும் ஷரத்து உள்ளது என்ற செய்தி தெரியவந்திருப்பதாலும் ஹைதராபாத் நூரிஷா தரீகாவினருக்கும், வழிகேடர்களான தேவ்பந்து வஹ்ஹாபிய முல்லாக்களுக்கும் உள்ள தொடர்பு வெளிச்சமாகியுள்ள படியாலும், மேலும் நூரிஷா தரீக்காவின் கொள்கை கோட்பாடுகள் ஸுன்னத் வல் ஜமாஅத் அகீதா கொள்கைகளுக்கு மாறுபட்டு இருப்பது தெரியவந்திருப்பதாலும் நூரிஷா தரீகாவும் வழிகேடு என்பது நிரூபணமாகிறது.
3. மேற்கண்ட வழிகேடர்கள் வழிவரும், அல்லது அவர்களை பின்பற்றும் அல்லது அவர்களை பரிந்து பேசும், இயக்கங்கள், அமைப்புகள், மற்றும் நூரிஷா மற்றும் அதன் கிளை தரீகாவினர் மற்றும் அவர்களை ஆதரித்து தங்களை சுன்னத் வல் ஜமாஅத் ஆலிம்கள் எனகூறிக் கொள்ளும் நபர்களை விட்டும் இஸ்லாமிய அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாஅத் பொதுமக்கள் விலகி இருக்க வேண்டும்.
4. ஸுன்னத் வல் ஜமாஅத் அகீதா அடியொற்றி வாழ்ந்து காட்டி வழிநடத்திய வலிமார்கள்,
நாதாக்களின் தர்காக்கள், தைக்கால்கள், ஆஸ்தானாக்களில் சுன்னத் வல் ஜமாஅத் வழிமுறைகளான மீலாது, மௌலிது, உருஸ், கந்தூரி விழாக்கள் கொண்டாடுவது,ஃபாத்திஹா ஓதுவது, திக்ரு மஜ்லிஸ் நடத்துவது, நஅதே ஷரீஃப் என்னும் நபி கீதம் படிப்பது என
தரீக்கா வேடம் தரித்து உள்ளே நுழைய முற்படும் ஆரணி கமாலுத்தீன் மற்றும் தேவ்பந்திய தரீக்காவினர் மற்றும் நூரிஷா மற்றும் அதன் கிளை தரீக்காவினரிடமிருந்தும் கவனமாக
இருக்கும் படியும் முத்தவல்லிகள், ஹக்தார்கள், மக்கான்தார்கள், சாபுமார்கள், தைக்கால் நிர்வாகிகள், லெப்பைமார்களை இச்சபை வேண்டுகோள் விடுக்கிறது.
5. தமிழக ஜமாஅத்துல் உலமாவில், குஃப்ரு பத்வா வழங்கப்பட்ட தேவ்பந்திய தப்லீக் வஹ்ஹாபிய தலைவர்களை ஆதரிக்கும் பலர் ஊடுருவிட்ட காரணத்தினால்தான் ஸுன்னத் வல் ஜமாஅத் அகீதாக உலமாக்களால் இச்சபை துவக்கப்பட்டது. எனவே இப்பேது இல்லை என்றால் எப்போதும் இல்லை என்ற உறுதியான நிலைப்பாட்டுடன் மஜ்லிஸின் ஆரம்ப நோக்கத்தை கருத்தில் கொண்டு தேவ்பந்திய வஹ்ஹாபிய வழிகேடர்களை
பெரும்பான்மையாகக் கொண்ட தமிழக ஜமாஅத்துல் உலமா மற்றும் இன்ன பிறவஹ்ஹாபிய அமைப்புகளை விட்டும் ஸுன்னத் வல் ஜமாஅத் உலமாக்கள் தங்களை விடுவித்துக்
கொள்ளும்படி இச்சபை கேட்டுக் கொள்கிறது.
Comments
Post a Comment