Skip to main content

தப்லீக் போர்வையில் வஹ்ஹாபிகள்! தமிழக முஸ்லிம்களே உஷார்!!

1997ல் நடைபெற மேல் விஷாரத்து இஜ்திமாவில் கலந்து கொள்ளாது புறக்கணிக்க வேண்டும் என்று

தமிழ்நாடு சுன்னத் வல் ஜமாஅத் உலமா சபையால் வெயிடப்பட்ட பிரசுரம்...




தப்லீக் போர்வையில் வஹ்ஹாபிகள்!
தமிழக முஸ்லிம்களே உஷார்!!



தமிழ்நாடு சுன்னத் வல் ஜமாஅத் உலமா சபையின் எச்சரிக்கை!!

கடந்த அறுபது வருடங்களாக வட இந்தியப் பகுதியான தேவ்பந்திலிருந்து தமிழகத்திற்குள் வந்து நுழைந்த தப்லீக் ஜமாஅத் என்னும் ஓர் அமைப்பு முஸ்லிம்களிடையே அயராது சேவை செய்ததால் இன்று தமிழகத்திலுள்ள முஸ்லிம்களில் பெரும்பாலானோர் மார்க்கத்தை உணர்ந்து தவறான பாதையை விட்டும் விலகி நேர்வழிக்குத் திரும்பி இன்று தொழுகையாளிகளாகவும், உண்மை முஸ்லிம்களாகவும் மாறியுள்ளனர் என்பது தப்லீக் தலைவர்களாலும் தப்லிக் செய்பவர்களாலும் சொல்லப்படும் காரணங்களாகும்.

அதேநேரம் சுன்னத் வல் ஜமாஅத்தைச் சேர்ந்த வேலூர் பாக்கியாத் அரபிக் கல்லூரியின் முன்னாள் முதல்வர் அல்லாமா ஷைகு ஆதம் ஹஜ்ரத் கிப்லா அவர்களும், அதே கல்லூரியின் மற்றோர் முதல்வரான மௌலானா மௌலவி அபூபக்கர் ஹஜ்ரத் கிப்லா அவர்களும், சென்னை முன்னாள் தலைமை காஜி அல்லாமா ஹபிபுல்லாஹ் ஹஜ்ரத் அவர்களும், காயல்பட்டணம் ஸுஃபி ஹஜ்ரத் மத்தழில்லஹுல் ஆலி அவர்களும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் தலைவர்களில் ஒருவரான கண்ணியமிகு காயிதே மில்லத் அவர்களும் மற்றும் தமிழ்நாடு சுன்னத் வல் ஜமாஅத் உலமா சபையைச் சேர்ந்த உலமாப் பெருமக்களும் தப்லிக் ஜமாஅத் வழிகெட்ட ஒரு அமைப்பென்றும், அது வஹாபியக் கொள்கையுடையோரின் கேந்திரமென்றும் கூறி முஸ்லிம்கள் அதை ஆதரிக்கக் கூடாதெனவும், அதில் பங்கெடுக்கக் கூடாதென்றும் முறையான ஃபத்வாவும் (மார்க்கத் தீர்ப்பு) வழங்கியுள்ளனர்.

ஆனால் தப்லீக் ஜமாஅத்தைச் சேர்ந்த "உலமாக்கள்" நாங்கள் வஹாபியக் கொள்கையுடையோர்கள் அல்ல. எங்களுக்கும் வஹாபிகளுக்கும் எத்தகைய சம்பந்தமும் கிடையாதென்றும் கூறி மறுத்து வருகின்றனர். அத்துடன் எங்களின் பணி முஸ்லிம்களிடையே மார்க்கப்பற்றை ஏற்படுத்துவதுதான் என்றும்கூறி வருகின்றனர்.


இப்படிப்பட்ட வாதப் பிரதிவாதங்களால் இன்று தமிழக முஸ்லிம்கள் ஒரு குழப்பமான நிலைக்கு தள்ளப்பட்டு உண்மையான மார்க்கத்தை கண்டறியும் விஷயத்தில் தடுமாற்றமடைந்துள்ளனர்.

ஆதலால் தப்லீக் ஜமாஅத் மற்றும் சுன்னத் வல் ஜமாஅத் ஆகிய இரு அமைப்புக்களில் யார் சொல்வது உண்மை? எது சரியான மார்க்கம்? என்பதை தமிழக முஸ்லிம்கள் புரிந்து தெளியும் பொருட்டு சில விளக்கங்களை தமிழ்நாடு சுன்னத் வல் ஜமாஅத் உலமா சபை உங்கள் முன் வைக்கின்றது. இதைக்கண்டு முஸ்லிம்கள் தமது உயிரினும் மேலான ஈமானைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டுமாய் பணியுடன் வேண்டிக் கொள்கிறது.


வஹாபிகளுக்கும், தப்லீக் அமைப்புக்கும் 

நெருக்கமான தொடர்பு


இன்று மக்கா, மதினாவை சவூதி குடும்பத்தினர் ஆட்சி செய்து வந்தாலும், அங்குள்ள "தாருல் இஃப்தா" (மார்க்கத் தீர்ப்பு) வழங்கும் துறை முழுவதும் இன்றும் வஹாபியத் தலைவரான முஹம்மத் இப்னு அப்துல் வஹ்ஹாபின் குடும்பத்தினர் வசம்தான் இருந்து வருகிறது. அங்குள்ள மார்க்கப் பிரச்சார இலாகாவின் மூலம் தான் உலகம் முழுவதுமுள்ள வஹாபிய அமைப்புகளுக்கு பொருளுதவி வழங்கப்பட்டு வருகிறது.


இவ்வாறு பொருளுதவி வழங்கப்படும் அமைப்புக்களில் இந்திய நாட்டில் ஒரு பெரும் அமைப்பாக இருப்பது தப்லீக் ஜமாஅத் தான். அத்து..ன் தப்லீக்கின் தலைமை கேந்திரமான டில்லி மர்கஸில் ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கானோர் மூன்று வேளையும் இலவசமாக உணவருந்தி வருகின்றனர். அது மட்டுமின்றி வருடத்திற்கு குறைந்த பட்சம் ஒரு பத்து "இஜ்திமா" வாவது நடத்தப்பட்டு வருகிறது. ஒவ்வொரு இஜ்திமாவிலும் லட்சக்கணக்கானோர் பங்கெடுக்கின்றனர்.


இவ்வளவு செலவினங்களுக்கும் தப்லீக் தலைவர்கள் யாரிடமும் ஒரு பைசா கூட வாங்குவதுமில்லை. வசூல் செய்வதுமில்லை. அப்படியானால் இத்தனை மாபெரும் அமைப்பை அதுவும் கோடிக்கணக்கான ரூபாய்களின் செலவுகளைத் தாங்கிய இதனை தப்லீக் தலைவர்கள் எவ்வாறு சமாளித்து வருகின்றனர்?

இதற்குரிய பதிலை அவர்களே இப்படிக் கூறுகின்றனர்.

இரு வாரங்களுக்குப் பின் 1938 மார்ச் 14ம் தேதி அன்று (தப்லீக் ஜமாஅத்தின் முதல் தலைவரான) மௌலானா முஹம்மத் இல்யாஸ், ஹாஜி அப்துல்லாஹ் தெஹ்லவி, அப்துற்றஹ்மான் மஜ்ஹர் மற்றும் மௌலவி இஹ்த்திஸாமுல் ஹான் ஆகியோர் அரசரை (சவூதி) சந்திப்பதற்காகச் சென்றனர். அரசர் அவர்களைக் கண்டதும் மிகுந்த கண்ணியத்தோடு தமது ஆசனத்திலிருந்து எழுந்து நின்று வரவேற்றார். இன்னும் தமதருகிலேயே இந்திய விருந்தாளிகளான அவர்களை அமரச் செய்தார். அவர்கள் அரசரிடம் தப்லீக்கின் நோக்கமென்ன என்பதை எடுத்துக் கூறினர். அதுகேட்டு அரசர் கிட்டத்தட்ட நாற்பது நிமிடங்கள் வரை தௌஹீத் பற்றி விளக்கிஞர். அதன்பின் மிக கண்ணியத்தோடு தமது ஆசனத்தை விட்டெழுந்து அவர்களை வழியனுப்பி வைத்தார்."

நூல் தீனி தஃவத், பக்கம்-100,

"அதன்பின் மௌலவி இறத்திலாமுல் ஹசன் தப்லீக்கின் நோக்கம்பற்றி ஒரு சுருக்கமான குறிப்பொன்றை எடுத்துக்கொண்டு (மக்காவின்) தலைமை நீதிபதி அப்துல்லாஹ் இப்னு ஹசன் (இவர் முஹம்மத் பின் அப்துல் வஹாப் நஜ்தியின் வம்சத்தை சேர்ந்தவர் ) அவர்களிடம் சமர்ப்பித்தார். இவருடன் மௌலானா முஹம்மத் இல்யாஸம் (தப்லீக்கின் மூலவர் ) சென்றிருந்தார். அவர் இவ்விருவருக்கும் மிகுந்த மரியாதை செய்ததோடு, அவர்கள் கூறியவை அனைத்தையும் கேட்டு ஆமோதித்ததுடன் வாய் வார்த்தையால் உதவி செய்வதாகவும் வாக்களித்தார்.

நூல் தீனி தஃவத், பக்கம்-101.

ஆதலால் இப்படிப்பட்ட ஒரு மாபெரும் அமைப்பை இந்த தப்லீக் தலைவர்கள் நடத்துவதற்கு ஸவூதி அரசிடமிருந்து பணம் பெற்றுத்தான் இவர்கள் நடத்தி வருகின்றனர். அத்துடன் பிரிட்டிஷ் ஏகாதிபத்திய அரசு அன்று "தர்இய்யா" என்னும் பகுதியின் அமீராக இருந்த "முஹம்மத் பின் வூதை" (இன்றைய சவூதி வம்சத்தின் முதல் மனிதர்) யும் முஹம்மத் பின் அப்துல் வஹ்ஹாப் நஜ்தியையும் ஒன்றாக இணைத்து மக்காவிலிருந்த "ஷரீப்களை" துரத்தியடித்து விட்டு இவர்களை மக்காவின் அரசராக்கிற்று.

இந்த முஹம்மத் பின் அப்துல் வஹ்ஹாப் நஜ்தியால் நவீனமாக உருவாக்கப்பட்டது தான் "வஹ்ஹாபி" என்னும் ஓர் புதிய பிரிவாகும். அந்த "வஹ்ஹாபியக்" கொள்கையைத்தான் இந்திய நாட்டில் "தப்லிக்" என்றும் பெயரில் மறைமுகமாகப் பரப்பி வருகின்றனர். அதற்குரிய ஆதாரத்தையும் பாருங்கள். அதற்குமுன் இந்த தப்லீக் ஜமாஅத் இயக்கத்திற்கு துவக்கத்தில் பிரிட்டிஷ் அரசின் உதவி கிடைத்து வந்ததற்குரிய
ஆதாரத்தைப் பாருங்கள்.


மொலான ஹிப்ஜுர் ரஹ்மான் கூறினார். மௌலானா இல்யாஸ் அவர்களின் தப்லிக் அமைப்புக்கு துவக்கத்தில் அரசி (பிரிட்டிஷி) ன் தரப்பிலிருந்து ஹாஜி ரஷித் அஹ்மத் மூலமாகப் பணம் வந்து
கொண்டிருந்தது. பின்னர் அது நின்று போயிற்று,"

நூல் : மகாலமத்துஸ் பத்ரைன், பக்கம்-8, பிரிண்ட் : தேவ்பந்த்.

"பாருங்கள்! மௌலானா அஷ்ரப் அலி தானவியவர்கள் நமது தலைவர்களில் ஒருவராக இருந்தார். அவர்களைப்பற்றி சிலர் சொல்லக் கேட்டோம். அதாவது அவருக்கு மாதந்தோறும் அறுநூறு ரூபாய் அரசி (பிரிட்டிஷி) ன் தரப்பிலிருந்து கிடைத்துக் கொண்டிருந்தது.'

நூல் மகாலமத்துஸ் ஸத்கரன், பக்கம்-11, பிரிண்ட் - தேவ்பந்த்

உலக முஸ்லிம்களுக்கெதிராக அவர்களின் ஒற்றுமையை சிதைத்து பலவினப்படுத்தி முஸ்லிம் களுக்கெதிராக புனித இஸ்லாத்தை வேரறுக்க முஹம்மத் பின் அப்துல் வஹ்ஹாப் என்னும் ஒருவர் மூலம் ஒரு புதிய மத்ஹபை உருவாக்கி உலக முஸ்லிம்களின் ஈமானையும் ஒற்றுமையையும் நாசப்படுத்திய பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் இஸ்லாத்தை வளர்க்கவா தப்பிக்கின் தலைவர்களுக்கு பணம் தந்து வந்தது? அறவே இல்லை என்பதை திட்டவட்டமாகச் சொல்லலாம். பிரிட்டிஷாரிடமிருந்தும், சவூதி அரசிடமிருந்தும் வாங்கிய பணத்தைக் கொண்டுதான் இந்த தப்லிக்கின் உலமாக்கள் "தக்வியத்துல் ஈமான், பிராத்தே முஸ்தகீம்,பராஹீனே காத்தி, ஆ, ஹிப்ஜுல் ஈமான், பதாவா ரஷிதிய்யா, தத்கிரத்துர் ரஷித், அர்வாஹே பலாஸஹ்" போன்ற நூல்களை எழுதி நமது உயிரினும் மேலான உத்தமத் திருநபி நாதர் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வால்லமவர்களை மிகக் கொச்சையாக மாசுபடுத்தி தரக்குறைவாக விமர்சித்தனர். 

இனி இந்த தப்லிக்வாதிகள் ஒரு கடைந்தெடுத்த வஹ்ஹாபியக் கூட்டம்தான் என்பதற்குரிய ஆதாரத்தைப் பாருங்கள்.

"மௌலானா அஷ்ரப் அலி தானவி கூறுகிறார். என்னிடம் பத்தாயிரம் ரூபாய் இருந்தால் அதை எல்லோருக்கும் தந்து விடுவேன். இதைக்கொண்டு அவர்கள் தாங்களாகவே வஹாபிகளாகி விடுவார்கள்.

நூல் இழாஃபாத்தில் யவ்மிய்யா, பாகம்-3, பக்கம்-67.

கான்பூரிலுள்ள ஜாமிவுல் உலூம் மத்ராபாவில் மௌலானா அஷ்ரப் அலி தானவி ஆசிரியராகப் பணியாற்றியபோது சில பெண்கள் பாத்திஹா ஓதுவதற்காக சிறிது இனிப்பு பதார்த்தங்களை கொண்டு வந்தனர். அங்கிருந்த மாணவர்கள் பாத்திஹா ஓதாமலே அவற்றை தின்று விட்டனர். அதைக்குறித்து
ஆட்சேபம் எழுந்தபோது, அப்போது அங்குவந்த மௌலானா அஷ்ரப் அலி தானலி, அவர்களை நோக்கி....... "இங்கே வஹாபிகள் இருக்கின்றனர். ஆதலால் பாத்திஹாவுக்காக இங்கு எதையும் கொண்டு வராதீர்கள்" என்று கூறினார்.

நூல் : அஷ்ரபுஸ் பவானிஷ், பாகம்-1, பக்கம் 45.

மௌலானா ரஷித் அஹ்மத் கங்கோஹி எழுதுகிறார். "முஹம்மத் பின் அப்துல் வஹ்ஹாபை பின்பற்றுவோரை "வஹ்ஹாபி" எனக் கூறுகின்றனர். அவரது கொள்கை நல்லதாயிருந்தது."

நூல் : பதாவா ரஷிதிய்யா, பாகம்-1, பக்கம்-111

மேலும் தப்லீக் ஜமா அத்தை தலைமை பொறுப்பேற்று யார் நடத்தினாலும் அவர் ஒரு பக்காவான வஹ்ஹாபியாக இருக்க வேண்டும். அவ்வாறு இல்லாதவர் அவ்வியக்கத்திற்கு தலைமை பொறுப்பேற்குதல் ஒருக்காலும் நடக்காது. தப்லீக்கை தோற்றுவித்த அதன் முதல் தலைவரான  மௌலானா  இல்யாஸ் இறந்து போனபோது, இப்போது தலைமை பொறுப்பேற்று யார் செயல்படுவது என்றும் பிரச்னை எழுந்தபோது, "ஓரிரவு மௌலானா அலி மியாள் இப்பிரச்னை குறித்து ஆலோசனை செய்து ஓர் முடிவுக்கு வந்தோம். அது ஹஜ்ரத்தவர்களுக்குப்பின் டில்லி மர்காயில் தஃவத்துடைய வேலைக்காக மௌலானா இல்யாஸ் மற்றும் அவரது தஃவத்துடைய வேலையில் மிகுந்த ஆர்வமும், நேசமும் கொண்டுள்ள ஒருவரை நியமித்தால் தான் இவ்வேலை தங்கு தடையின்றி நடைபெற்றுக் கொண்டிருக்கும். இனி அப்படிப்பட்ட ஒரு நபர் இப்போது நமது பார்வையில் ஷைருல் ஹதீஸ் மௌலானா முஹம்மத் ஜகரிய்யா அவர்கள் தான்.

நூல் , வானிஹே மௌலானா யூசுப், பக்கம்-190.

மறுநாள் காலை மௌலானா மன்ஜுர் நுஃமானி அவர்கள் தம்மை சேர்ந்தவர்களோடு மௌலானா ஜகரிய்யா அவர்களை சந்தித்து தாம் மர்கஜின் பொறுப்பை ஏற்று நடத்துவதாகக் கூறினார். அப்போது அவர் கூறியாவ இதுதான்.......

"அவ்வாறு நடக்கவில்லையாயின் சில நாட்களுக்குப்பின் (தப்லீக்கின்) முழுக் கூட்டமும் சிதறிப் போய்விடும். இன்னும் நாம் நம்மைப்பற்றி மிகத் தெளிவாகத் தெளிவுபடுத்துகிறோம். "நாம் மிகப்பெரும் பக்கா (கடுமையான) வஹ்ஹாபியாக" இருக்கிறோம். நமக்கு இப்பேச்சில் (தலைமை பொறுப்பில்) எவ்வித ஈர்ப்புமில்லை. இருப்பினும் ஹஜ்ரத் அவர்களின் (மொலானா இல்யாஸ்) கப்ரு இங்கே இருக்கிறது. அவர்கள் எந்த மஸ்ஜிதில் தொழுதனரோ அம்மஸ்ஜிதும் இங்குள்ளது. அவர்கள் தங்கியிருந்த அறையும் இங்குதான் உள்ளது.

நூல் ஸவர்னிஹே மௌலானா யூசுப், பக்கம்-193.

இப்போது மௌலானா ஜகரிய்யாவின் பதிலைப் பாருங்கள். இறைவனின் தீர்ப்பு என் பக்கமிருந்தால் நான் யாருக்கும் பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை. நான் இங்குதான் இருப்பேன். நீங்களெல்லாம் ஒன்று சேர்ந்து என்னை வெளியேற்ற நினைத்தாலும் சரி அன்றி இறைவனது தீர்ப்பு வேறொருவர் பக்கமிருந்தால் நீங்களும் நானும் அதைப் பார்ப்போம். பின்னர் அல்லாஹ் அவரிடம் தான் வேலை வாங்குவான். நீங்கள் எதிர் பாருங்கள். அல்லாஹ்விடத்தில் துஆ செய்யுங்கள், பாருங்கள். மௌலவி சாஹிப் "நாள் உங்களை விட மிகப்பெரிய வஹ்ஹாபி" நான் உங்களுக்கு ஆலோசனை சொல்கிறேன். அதாவது ஹஜ்ரத் சிச் சாஜான் (மௌலானா இல்யாஸ் மௌலானா ஜகரிய்யாவின் சிறிய தந்தை) அவர்களின் கப்ரையும் அவர்கள் தங்கியிருந்த அறையையும் சுவற்றையும் காரணம் காட்டி நீங்கள் இங்கே வரவேண்டிய அவசியமில்லை.

நூல் வானிஹே மௌலானா யூசுப், பக்கம்-193.

இன்று மஸ்ஜிதுகளில் எந்த கிதாபுகளை வைத்து தஃலீம் செய்கிறார்களோ, அந்த "தப்லிக் நிஸாப்" என்னும் நூலை எழுதிய மௌலானா ஜகரிய்யாயும், மற்றும் அவர்களின் உலமாக்களான மௌலானா மன்ஜுர் நுஃமாளி, மௌலானா ரஷித் அஹ்மத் கங்கோழி, மௌலானா அஷ்ரப் அலி தானவி போன்றோரும் தம்மை ஒரு பக்கா "வஹ்ஹாபி" எனப் பிரகடனப்படுத்துவதைப் பார்த்தீர்கள், இப்போது தப்லிக்கின் நோக்கம் மார்க்கப் பணியல்ல என்பதற்குரிய ஆதாரத்தையும் பாருங்கள். உத்திரப் பிரதேசத்தில் முஜப்பர் நகர் என்னும் ஊரில் மத்ரஸயே ஹுசைனியா என்றோர் தேவ்பந்திகளின் கல்விக்கூடம் உள்ளது. 1958, பிப்ரவரி 26ம் தேதி அங்கே நடைபெற்ற மாபெரும் கூட்டத்தில் தேவ்பந்தை மிகக்கடுமையாகத் தாக்கி பேசினர். சேர்ந்த மிகப்பெரும் உலமாக்கள் பலர் பங்குபற்றினர். வருகை தந்த உலமாக்களனைவருமே தப்லீக்கை அவர்களில் குறிப்பிடத்தக்கவர் மௌலவி அப்துற்றஹீம் ஷாஹ்  என்பவராவார். அவர் தமது உரையில்,....


"எப்போதுமே மார்க்கக் கல்வியுடை யோர் தான் குர்ஆன் மற்றும் அதன் அர்த்தத்தின் பாதுகாப்பாளர்களாக இருந்து வந்துள்ளனர். எத்தகைய அறிவீனர்கள்? அவர்கள் உலமாக்களை விட்டும் மார்க்கத்தை தனிமைபடுத்தி பிரித்து வருகின்றனர்? திகைப்புக்குரிய விஷயம் யாதெனில், அஹ்லெ இல்முகளுக்குரிய
வேலையை மார்க்கம் தெரியாத, அறிவீனர்களான, இவர் (தப்லீக்வாதி) களால் எவ்லாறு செய்ய முடியும்? பின்னும் இவர்களின் தீய நடத்தையால் சமூகத்தினர் நல்ல கண்ணோட்டத்துடன் பாராதிருக்கின்றனர்.

நூல் உஸலே தீனி தஃவத், பக்கம்-4.

அடுத்து மௌலவி அப்துற்றஹீம் ஷாஹ் கூறுகிறார்...........


"எனது அறிவுக்கு எட்டியவரை தப்லீக் ஜமாஅத் குர்ஆன் ஹதிஸுக்கு உட்பட்ட ஒன்றோ, அல்லது ஹஜ்ரத் முஜத்தித் அல்ஃபஸானி, ஹஜ்ரத் ஷாஹ் வலியுல்லாஹ் மற்றும் உலமாக்களின் பாதைக்கு நேரான ஒன்றாகவோ இல்லை. எந்த உலமாக்கள் தப்லிக் ஜமாஅத்தில் இணைந்துள்ளனரோ அவர்கள் இத்தப்லீக் குர்ஆனுக்கும், ஹதிஸுக்கும் பலபுகளான உலமாக்களுக்கும் நேரானதாகத்தான் உள்ளதென்பதை உறுதிப்படுத்த வேண்டும்.

அடுத்து எனது புத்திக்கு விளங்காத விஷயம் யாதெனில், மௌலானா இல்யாஸ் அவர்களின் ஜீவிய காலத்தில் (இந்த தப்லீக்) மார்க்கக் கட்டுப்பாட்டின் அடிப்படையில் "பித்அத்தெ ஹசன" வாகத்தான் நிலை கொண்டிருந்தது? இதனை மார்க்கத்தின் அடிப்படையான காரியமென்று எப்படிச் சொல்ல முடியும்? இப்போது அதை பித்அத்தெ ஹசனா என்றுகூடச் சொல்ல முடியாது."

 நூல் : ஜிந்தகி கீ ஸிராத்தெ முஸ்த்தகீம்,

ஆதலால் இந்த தப்லிக் ஜமா அத் என்னும் இவ்வியக்கம் இன்று நம்மிடையே தப்லீக் செய்வோரால் சொல்லப்படுவதைப் போல ரஸூலுல்லாஹ் போன்ற நபிமார்களாலும், ஸஹாபாக்களாலும் செய்யப்பட்டு வந்த ஒன்றல்ல என்பதையும், இது குறித்து குர்ஆன், ஹதீஸிலோ அல்லது நல்லோர்களான உலமாக்களிடமோ
இதற்குரிய எத்தகைய ஆதாரமும் அறவே இல்லையென்பதையும், --

மாறாக இவ்வியக்கம் முழுக்க முழுக்க இஸ்லாமிய விரோத சக்திகளின் கூடாரமாகவும், அண்ணல் நபிகளால் எச்சரிக்கை செய்யப்பட்ட வஹ்ஹாபிகளின் கேந்திரமாகவும், இஸ்லாமிய மக்களின் ஈமானைக் கெடுத்து அவர்களிடையே பிரிவினையையும், சச்சரவுகளையும், பொருளாதார வீழ்ச்சியையும் ஏற்படுத்துகின்ற ஒரு நாசகாரக் கூட்டமென்பதையும் தமிழக முஸ்லிம்கள் புரிந்து அவர்களை விட்டும் ஒதுங்க வேண்டுமென தமிழ்நாடு கன்னத் வல் ஜமாஅத் உலமா சபை உங்களை கேட்டுக் கொள்கிறது.

தப்லீக்கைப் பற்றியும், அதன் தலைவர்கள் பற்றியும், அவர்களின் அந்தரங்க கொள்கை பற்றியும், தீர்க்க ஆராய்ந்து, தப்லிக்கர்களை தங்களது நாட்டில் தடை செய்து விட்டன. நயவஞ்சகம், உள் ஒன்று வைத்து புறம் ஒன்று பேசி வடக்கில் குட்டையைக் குழப்பியவர்கள் இன்று தமிழகத்தை சுற்றி இஜ்தியா போட்டு மக்களை கலியா, தொழுகை என்ற போலிப்போர்வையில் ஈசனைப்பறித்து வஹாபிகளாக்க எத்தனிக்கின்றனர்.


தப்லிக்கர்களை பற்றி, நாம் எழுதியுள்ள ஒவ்வொரு வார்த்தையும் உண்மையிலும் உண்மை. இதில் ஒரு வார்த்தையை கூட மறுக்கவோ, மறைக்கவோ முடியாது.

ஆகையால் நல்லறிவு கொண்ட இஸ்லாமியப் பெருமக்கள் இதைக்கண்டு வரும் 26,27,28 மே 1997ல் நடைபெறும் மேல் விஷாரத்து இஜ்திமாவில் கலந்து கொள்ளாது புறக்கணிக்க வேண்டும். என்றும்......

1994 நெல்லையில் நடந்த இஜ்தியாவில் இஸ்லாமியர்களுக்கு என்ன பலன் ஏற்பட்டது என்பதையும், சிந்தனை செய்து பார்க்க வேண்டும்.

எனவே அல்லாஹ்வுக்கும், அவளது ரஸுலுக்கும் மாறுபட்டவர்களாயும், அவ்லியாக்களை இழிவாகவும், பாத்திஹா, மௌலூது, ஜியாரத்து போன்றவற்றை தரக்குறைவாகவும் கருதும் தப்லீக் ஜமா அத்தைப் பற்றி தத்தம் ஊர்களில் உள்ள மஸ்ஜிதுகளுக்கு அவர்கள் வந்தால் அவர்களை வெளியேற்றுவதோடு, தப்லிக்கிற்கு ஆதரவாக செயல்படும் உலமாக்கள் தொழ வைக்கும் பள்ளிகளில் தொழ வேண்டாம் என்று வேண்டுகோள் விடுக்கிறோம்.

இங்ஙனம்,

தமிழ்நாடு சுன்னத் வல் ஜமாஅத் உலமா சபை,

16, மதுரை ரோடு, திருச்சி-620 008.




Comments

Popular posts from this blog

ஷெய்கனா மலேசியா வாப்பா அவர்கள் ஷேக் அப்துல்லாஹ் ஜமாலி & நூரிஷா தரீக்கா உடைய தொடர்பையும் துன்டிக்க சொல்லி எழுதிய கடிதம்

ஷெய்கனா மலேசியா வாப்பா அவர்கள் அபுதாஹீர் சிராஜி அவர்களுக்கு ஷேக் அப்துல்லாஹ் ஜமாலி உடைய தொடர்பையும் நூரிஷா தரீக்கா உடைய தொடர்பையும் துன்டிக்க சொல்லி எழுதிய கடிதம்

தப்லீக் ஜமாஅத் விஷயத்தில் தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமாவின் கள்ள மௌனம்

*தப்லீக் ஜமாஅத் விஷயத்தில் தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமாவின் கள்ள மௌனம்* *_______________________________* *தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமாவிற்கு மௌலான மௌலவி M.Kமுஹம்மத் காஷிம் மஹ்ளரி (இமாம் ஏழு லெப்பை பள்ளி - நாஹுர் ஷெஃரிப் ) அவர்கள் மற்றும் 60க்கு மேற்பட்ட உலமாக்கள் வழிகெட்ட தப்லீக் ஜமாஅத்தை வழிகெட்ட வஹ்ஹாபிய இயக்கம் என்று அறிவிக்க  வழியுறுத்தி  எழுதிய கடிதம்*  ■─➻ _தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபை இதுவரை வழிகெட்ட பி. ஜெ தவ்ஹீத் ஜமாஅத்தை எதிர்த்து குரல் கொடுத்திருக்கிறது._ *இல்யாஸ் தப்லீக் ஜமாஅத்தும் தவ்ஹீத் ஜமாஅத்தை போல் ஒர் வஹ்ஹாபிய பிரிவுதானே.* _தப்லீக் ஜமாஅத்தை ஆதரிக்கின்ற சென்னை காஃஷிபுல் ஹுதா, திருச்சி அன்வாருல் உலூம் போன்ற அரபுக் கல்லூரிகள்_ _இஸ்லாத்தில் அனுமதிக்கப்பட்ட புனித காரியங்களான_  *மவ்லித், உரூஸ்* _போன்றவற்றை கூடாதென ஃபதவா வழங்கியிருக்கிறார்கள். இந்த தப்லீக் ஜமாஅத்தை ஆதரிக்கின்ற டில்லி குதுப்கானா , பேகம்பூர், தின்டுக்கல் என்ற முகவரியில் இருந்து வெளியிட்ட கலீல் அஹ்மது கீரனூரி எழுதிய தப்லீக் ஜமாஅத்தின் குற்றசாட்டுகளும், தக்கபதில்களும் என்ற தமிழ் மொழிபெயர்ப்பு நூலில் 136 பக்கத

தமிழ்நாடு அஹ்லிஸ் ஸுன்னத் வல் ஜமாஅத் உலமா சபையின் செயற்குழு கூட்டத்தில் உலமா பெருமக்களால் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்

தமிழ்நாடு அஹ்லிஸ் ஸுன்னத் வல் ஜமாஅத் உலமா சபையின் செயற்குழு கூட்டத்தில் உலமா பெருமக்களால் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள். Download  Pdf 1. புனித ஹரமைனுஷ் ஷரீஃபைன் மற்றும் இந்தியாவின் உலமா பெருமக்களால் குஃப்ரு ஃபத்வா வழங்கப்பட்ட வழிகேடர்களான 1.குலாம் அஹ்மத் காதியானி 2.காஸிம் நானோத்தவி 3.கலீல் அஹ்மத் அம்பேட்வி 4.அஷ்ரஃப் அலி தானவி 5.ரஷீத் அஹ்மத் கங்கோஹி ஆகியோர்களும் அவர்களைப் பின்பற்றுவோரும் காஃபிர்கள் என்பதில் சந்தேகம் இல்லை. 2. நூரி ஷாஹைதராபாத்தில் ஜாமிஆ இலாஹியாத்தே நூரியா என்ற மதரஸாவை, வழிகெட்ட தேவ்பந்து வஹ்ஹாபி மதரஸாவை ஸ்தாபித்த காஸிம் நானோத்தவியின் பேரரான மௌலவி காரி தையப் காஸிமியை வைத்து நடத்திய திறப்பு விழா கல்வெட்டு ஆதாரம் (பார்க்க தர்கா இதழ் ஜனவரி - 2021) கிடைத்துள்ள படியாலும், நூரிஷா மதரஸாவின் பைலாவில் மதரஸாவை தொடர்ந்து நடத்தமுடியாமல் போனால் தேவ்பந்து அதை தத்தெடுத்துக் கொள்ளும் என்னும் ஷரத்து உள்ளது என்ற செய்தி தெரியவந்திருப்பதாலும் ஹைதராபாத் நூரிஷா தரீகாவினருக்கும், வழிகேடர்களான தேவ்பந்து வஹ்ஹாபிய முல்லாக்களுக்கும் உள்ள தொடர்பு வெளிச்சமாகியுள்ள படியாலும், மேலும் நூரிஷா தரீக்காவின்