உருதெரியாமல் போன உருப்படி இல்லாத தப்லீக் ஜமாத்.
உருதெரியாமல் போன உருப்படி இல்லாத தப்லீக் ஜமாத்.
ஒரு காலத்தில் தப்லீக் ஜமாத்தை பற்றி மிகவும் உயர்வாக மக்களிடம் புகழ்ந்து பேசி வந்த ஆலிம்சாக்கள் தற்போது தலைமறைவாக இருப்பது ஏன்?
இனத்துரோகம் செய்த அந்த அமைப்பை தன் தலைக்கு மேல் தூக்கி வைத்துக் கொண்டு உயர்த்திப் பேசிவந்த ஆலிம்கள் தற்போது எங்கே போனார்கள்?
தற்பொழுது ஏன் தப்லீக் ஜமாத்தை பற்றி புகழ்ந்து பேசுவதற்கு பயந்து நடுங்குகிறார்கள்?
மீனுக்கு வாலையும் பாம்புக்கு தலையும் காட்டுவது போன்ற நயவஞ்சகத்தனமான மனதை உடையவர்களே இப்படிப்பட்ட போலி ஆலிம்சாக்கள்.
இந்தக் கள்ள ஆலிம்சாக்கள் தற்போது தப்லீக் ஜமாத்தை பற்றி புகழ்ந்து பேசாததற்கு காரணங்கள் பல உண்டு.
தப்லீக் ஜமாத்தை பற்றிய விழிப்புணர்வு பொதுபொதுமக்களிடையே இல்லாத காலகட்டத்தில் இந்த கள்ள ஆலிம்சாக்கள் பொதுமக்களை மடைமாற்றம் செய்து வந்தார்கள். அப்பாவி பொதுமக்களை மூளை சலவை செய்து வந்தார்கள். சுருக்கமாக சொல்லப்போனால் இந்த கள்ள ஆலிம்சாக்கள் தானும் வழிகெட்டு பிறரையும் வழிகெடுத்தனர்.
ஆனால் தற்போது அவர்களுடைய பருப்பு வேகாது.
தப்லீக் ஜமாத்தினுடைய வழிகேடு என்ன என்பதை பொதுமக்களே மேடையேறி இப்பொழுது விரிவாக சொல்வார்கள்.
அவர்களுடைய வழிகேடுகள் அனைத்தும் ஆதாரப்பூர்வமாக தெள்ளத் தெளிவாக விரிவான முறையில் எழுதப்பட்டிருக்கிறது.
வலைதளங்களில் அவர்களுக்கு எதிராக கணக்கில்லாமல் புத்தகங்கள் காணக் கிடைக்கின்றது .
ஆகமொத்தத்தில் உருதெரியாமல் ஆகிவிட்டது இந்த சமாஅத்.
தாஹா ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை மாடு கழுதையுடன் ஒப்பிட்டு பேசினார்களே அப்படிப்பட்ட இனத்துரோக்கிகளை உயர்த்தி பேசுவதற்கு எவ்வாறு மனது வந்தது இந்த கள்ள ஆலிம்சாக்களுக்கு?
காசு புகழ் பட்டம் கிடைக்கிறது என்பதற்காக எப்படிப்பட்ட கயவர்களையும் தலையில் தூக்கி வைத்துக் கொண்டு ஆடலாமா?
வாய்ப்பு கிடைக்கிறது என்பதற்காக வாய்க்கு வந்ததை எல்லாம் பேசி விடலாமா?
திருடனுக்கு தேள் கொட்டியதைப் போல இந்த திருட்டு ஆலிம்சாக்கள் திருதிருவென்று முழித்துக் கொண்டிருக்கிறார்கள். தற்பொழுது என்ன செய்ய வேண்டும் என்று தெரியாமல் குழம்பிப் போயிருக்கின்றார்கள்.
மக்களை மடையர்கள் என்று நினைத்துக் கொண்டு மடத்தனமாக தப்லீக் தலைவர்களை புகழ்ந்து பேசி வந்தார்கள் முன்பு. ஆனால் தற்சமயம் எல்லாம் தலைகீழாக மாறிவிட்டது. இந்த திருட்டு ஆலிம்சாக்கள் தற்போது மக்களிடையே தப்லீக் வழிகேடர்களை பற்றி புகழ்ந்து பேச முடியுமா?
காரி துப்பி விடுவார்கள் மக்கள்.
அதற்கு ஒரு சிறு உதாரணத்தை சொல்கிறேன் கேளுங்கள்.
அபுதாஹிர் பாகவி என்ற ஒரு நபர் ஒருநாள் இந்த தப்லீக் ஜமாத்தை பற்றி புகழ்ந்து பேசினார். அவ்வளவுதான் மக்கள் கொந்தளித்து விட்டார்கள். அடுக்கடுக்காக பல கேள்விகளை முன் வைத்தார்கள். பிறகு அவர் வேறு வழியில்லாமல் மன்னிப்பே கேட்டு விட்டார்.
இதே நிலைமைதான் மற்ற ஆளிம்களுக்கும் ஏற்படும். இனிமேலும் மக்களை ஏமாற்ற முடியாது என்ற காரணத்தினால் தான் அவர்கள் கள்ள மவுனம் காக்கிறார்கள்.
இந்த உலகத்தில் எந்த விதமான சிக்கலிலும் தான் சிக்கி விடக்கூடாது என்பதற்காக மிகவும் புத்திசாலித்தனமாக இவர்கள் இரட்டை வேஷம் போட்டு நடக்கிறார்கள்.
இந்த புத்திசாலித்தனம் எல்லாம் இந்த உலகத்தில் அவர்களுக்கு பலன் தரலாம். ஆனால் நிரந்தரமான உலகம் இதுவல்ல இதற்குப் பிறகு உள்ள வாழ்க்கை தான் நிரந்தரமானது. மறுமையில் சுவனம் வேண்டுமென்றால் கொள்கை விஷயத்தில் கவனம் வேண்டும்.
மக்களுக்கு உண்மை தெரிந்து விட்டது என்ற காரணத்தினால் தான் இவர்கள் தற்சமயம் மௌனமாக இருக்கிறார்கள்.
இவர்களது கள்ள மவுனம் கலைந்து போகக்கூடிய காலம் வந்துவிட்டது. இவர்களுடைய வேஷம் கிழிந்து தொங்கக்கூடிய நேரம் வந்துவிட்டது.
வழிகெட்ட தப்லீக் ஜமாத்தை இப்போது அவர்கள் வாழ்த்தி பேசினாலும் வசமாக மாட்டிக்கொள்வார்கள். பொதுமக்களே கேள்வி கேட்பார்கள். தாழ்த்தி பேசினாலும் வசமாக மாட்டிக்கொள்வார்கள். காரணம் தப்லீக் ஜமாத்தினர்கள் இந்த கள்ள ஆலிம்சாக்களிம் கேள்வி கேட்பார்கள். (நீங்கள் ஒருகாலத்தில் எங்களிமே காசு பணம் வாங்கிக்கொண்டு எங்களுக்கு எதிராக பேசுகிறீர்களா?)
சரி இப்பொழுது இந்த திருட்டு ஆலிம்சாக்கள் என்னதான் செய்ய வேண்டும்?
மக்களிடம் உண்மையை உரக்கச் சொல்ல வேண்டும்.
இதுவரை செய்து வந்த வழிகேடான பிரச்சாரங்களுக்கு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் .
இதுவரை நாங்கள் சொன்னது தவறு. நாங்கள் இப்பொழுது சொல்வதுதான் உண்மை என்று தப்லீக் ஜமாத்தினுடைய கொள்கையை விரிவாக மக்களிடம் சொல்ல வேண்டும்.
செய்வார்களா இந்த திருட்டு ஆலிம்சாக்கள்?
அவர்கள் ஒருபோதும் செய்ய மாட்டார்கள். சுவனம் நரகம் இதன் மீது எல்லாம் நம்பிக்கை உடையவர்கள் உண்மையை உரக்கச் சொல்வார்கள்.
ஒரு காலத்தில் P.A.K காஜா முயீனுத்தீன் பாகவி என்ற நபர் முழு நேரமாக தப்லீத் ஜமாஅத்தே கதி என்று ஐக்கியமாகிருந்தவர்.
எந்நேரமும் அந்த ஜமாஅத்திற்காக கொடி பிடித்து ஊர் ஊராக சுற்றித்திரிந்தவர் தான் இந்த நபர்.
ஆனால் தற்பொழுது கள்ள மவுனம் சாதிப்பது ஏன். அவர் திருத்தி விட்டார் என்பதற்காகவா? இல்லை ஒரு பொழுதும் இல்லை. மக்களிடம் தன் மீது உள்ள செல்வாக்கு குறைந்து விடும் என்பதற்காக தான் தற்பொழுது தான் தப்லீக் ஜமாத்தில் இல்லாதவனை போல் காட்டிக் கொள்கிறார். ஆனால், அவர் தற்பொழுதும் அந்த ஜமாத்துடன் கள்ளத்தொடர்புடன்தான் இருக்கிறார் என்பதே உண்மை.
சதீத் பாகவி என்ற நபர் அவ்வப்பொழுது வந்து தப்லீக் ஜமாஅத்திற்காக கம்பு சுற்றிக்கொண்டிருக்கின்றார். ஆனால் இப்போது அவரும் சைலண்டாகிவிட்டார். காரணம் இனியும் கம்பு சுற்றினால் மக்கள் ஏமாற மாட்டார்கள் என்பதை தெரிந்து கொண்டார் போலும்.
எவனோ தப்லீக் ஜமாத்தை பற்றி அவதூறாக மொட்ட கடுதாசி எழுதினான் என்று சொல்லி அதற்கு பதில் சொல்லிக் கொண்டிருக்கிறார் சதீத்.
(லாயிலாஹ இல்லல்லாஹ் என்று சொன்னால் போதும் முஹம்மது ரசூலுல்லாஹ் என்று சொல்லத் தேவையில்லை என்று தப்லீக் ஜமாத்தினர்கள் சொல்கிறார்கள்)
என்பதுதான் அந்த மொட்டக் கடுதாசியில் எழுதப்பட்ட குற்றச்சாட்டு. உடனே அவர் வீராவேசத்தோடு பதில் சொல்வதற்காக வேட்டியை மடித்துக்கொண்டு வந்துவிட்டார். அது இகாமத்தில் உள்ள லாயிலாஹ இல்லல்லாஹ் ஆகவே அதில் முஹம்மது ரசூலுல்லாஹ் தேவையில்லை ஆகவே இதில் தவறு ஒன்றும் இல்லை என்று விளக்கமாக தெள்ளத் தெளிவாக மக்களிடம் விளக்கிச் சொல்கிறார்.
இந்த விளக்கெண்ணெய் விளக்கத்தை எல்லாம் இந்த சதீத் மற்ற வகை குற்றச்சாட்டுகளுக்கெல்லாம் சொல்வதில்லையே ஏன்?
உண்மையில் அவருக்கு தைரியம் இருந்தால் அஹ்லுஸ் சுன்னத்தி வல் ஜமாத்தினர்கள் தப்லீக் ஜமாத்தின் மீது அடுக்கடுக்காக எத்தனையோ குற்றச்சாட்டுகளை வைக்கின்றார்கள் அதற்கு பதில் சொல்லட்டும் பார்க்கலாம்.
(அத்தகையத்தில் நாயகத்தை நினைப்பது மாடு கழுதையை நினைப்பதை விட கெட்டது என்பது தப்லீக் ஜமாத் உடைய கொள்கை)
இப்படி எண்ணற்ற எத்தனையோ வழிகெட்ட கொள்கைகள் இருக்கின்றன.
அவற்றிற்கெல்லாம் பதில் சொல்ல திராணி இருக்கிறதா? இருந்தால் முன்னாள் வரட்டும் சதீத் பாகவீ.
இவ்வாறு இரட்டை வேடம் அணியக்கூடிய வேடதாரிகள் ஆலிம்சாக்களின் போர்வையில் இன்னும் உலா வந்து கொண்டு தான் இருக்கிறார்கள் அவர்களுடைய பெயர்களும் விரைவில் வரும்...
அன்பார்ந்த இளம் ஆலிம்களே மிகவும் கவனமாக இருங்கள். உங்களது வாழ்க்கையை நீங்கள் தொலைத்து விடாதீர்கள். முன் சென்ற கள்ள ஆலிம்சாக்கள் அற்ப காசு பணத்திற்காக தங்களது மானத்தை விற்றார்களே அவ்வாறு நீங்களும் செய்து விட வேண்டாம்.
சுன்னத் வல் ஜமாத்தின் கொள்கையை உறுதியாக பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள். சுவனபதிக்கு சொந்தக்காரர்களாக ஆகுங்கள்.
ஆற்றில் ஒரு கால் சேற்றில் ஒரு கால் வைக்க வேண்டாம். இந்த பக்கம் கொஞ்ச காலம் அந்த பக்கம் கொஞ்ச காலம் என்று இருக்காமல் ஒரே பக்கத்தில் இறுதிவரை உறுதியாக இருக்க வேண்டும்.
Comments
Post a Comment